web log free
March 24, 2025
kumar

kumar

வடக்கின் 5 மாவட்டங்களிற்குமான 4 நாள் பயணமாக நாளை சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வருகை தருகின்றனர். 

வவுனியாவை நாளை காலை 10 மணிக்கு வந்தடையும் குழுவினர், வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகள் வழங்கி வைக்கும் தூதுவர் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் தூதுவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்ட அரச அதிபரிம் கையளிப்பதோடு வெலிஓயாவிற்கான 250 பொதிகளை தாமே நேரில் வழங்குகின்றனர். 

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் வருகை தந்து மறுநாள் 6ஆம் திகதி சீனத் தூதுவர் மற்றும் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள் காலை 9 மணிக்கு யாழ் ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதோடு 10 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடி நெடுந்தீவு மக்களிற்கு 500 பொதிகள் கையளிக்க உள்ளனர். 

இதனையடுத்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் பயணிக்கின்றனர். 

இதேநேரம் 7 ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் சீனக் குழுவினர் நாகவிகாரைக்கு 250 பொதிகள் வழங்குகின்றனர். அதனையடுத்து 7 ஆம் திகதி மாலை மன்னாரிக்குப் பயணித்து 8 ஆம் திகதி மன்னார் நிகழ்வுகளில் பங்குகொண்டு 8 ஆம் திகதி மாலை கொழும்பு திரும்புகின்றனர்.

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுஜித் யட்டவர பண்டார மரணமடைந்துள்ளார்.

இதனை இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அவரது குழந்தைகளின் டிஎன்ஏ மாதிரிகள் அடையாளம் தெரியாத சடலத்துடன் ஒப்பிடப்பட்டதை இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் பிரிவு இன்று உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நுவரெலியா நோக்கி பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக இன்று (3) பிற்பகல் வெல்லவாய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜனாதிபதி பயணித்த உலங்குவானூர்தி திடீரென வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

புத்ருவகல பாடசாலையில் சுமார் 50 நிமிடங்கள் தங்கியிருந்த ஜனாதிபதி, மீண்டும் வாகனம் புறப்படும் வரை காத்திருந்ததுடன் பாடசாலை மாணவர்களும் அங்கு வந்து சிநேகபூர்வமாக உரையாடினர்.

அதன் பின்னர் ஜனாதிபதி வெல்லவாயவில் இருந்து தரை மார்க்கமாக நுவரெலியாவிற்கு புறப்பட்டார்.

பாரியளவிலான  கழிவுத் தேயிலை விற்பனை நிலையத்தை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (02) கண்டி தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடகும்புர, லிமகஹகொடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அங்கு உரிமம் இன்றி 6,652 கிலோ கழிவு தேயிலையை பதுக்கி வைத்திருந்த லிமகஹா கொடுவ பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கம்பளை தேயிலை ஆணையாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மி.மீ. 100க்கும் மேற்பட்ட கனமழை பெய்ததாக அறிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று (2) முதல் அமுலாகும் வகையில் 25 சதமாக காணப்பட்ட இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோ ஒன்றுக்கான விசேட பண்ட வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் முழுமையான நட்டஈடு செலுத்தத் தவறியதால் அவர்களது சொத்துக்களை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2023 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை பிரமாணப் பத்திரங்கள் மூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நாட்டுக்கான நல்ல யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரியப்படுத்த இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நுகேகொடை இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பில் இந்த விடயம் முதன்முறையாக பேசப்பட்டதாக அறியமுடிகிறது.

இதில் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டுள்ளார்.

மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள நல்ல முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களித்துவிட்டு கிராமம் நோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இங்கு கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம். அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்பட்டன.  இவர்களில் 80% ஆண்களே பதிவாகியுள்ளனர். எச்.ஐ.வி தொற்று 15-49 வயதிற்கு இடையிலானவர்கள் மத்தியிலேயே அதிகளவில் காணப்படுகிறது" என்றார்.

டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் பொதுமக்களை அறிவூட்டும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நாளை முதல் 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (02) ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பின்னர் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 09ஆம் திகதி தென் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி மேல்மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd