web log free
April 30, 2024
kumar

kumar

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னதாக  4ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும், அன்றைய தினம் அவர்களில் ஒரு குழு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பல சந்தர்ப்பங்களில் இந்தப் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாற்றம் ஏற்பட்டால் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் அபாயம் உள்ளது. 

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கு அமைய முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஒரு கிலோ மீற்றருக்கு 20 ரூபாவினால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

இரண்டாவது கிலோமீட்டரை 80 ரூபாவில் ஓட்டுவது தொடர்பான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார். 

எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, எஞ்சிய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன. 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் (92) 60 ரூபாவால் குறைக்கப்படும். பெட்ரோல் (95) 135 ரூபாவினால் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.80 குறைக்கப்படும் என்றார். சூப்பர் டீசல் ரூ. 45இல்  குறைக்கப்படும். 

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவால் குறைக்கப்படும். 

புதிய விலைகள்:

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் - ரூ. 340
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் - ரூ. 375
லங்கா ஆட்டோ டீசல் - ரூ. 325
லங்கா சுப்பர் டீசல் - ரூ. 465

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

அதன்படி, CPC மற்றும் அரசு ஆகிய இரண்டும், தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளன, இதன் மூலம் பொதுமக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விரைந்து செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், விநியோகம் வழமைபோல் தொடரும் என்றும் உறுதியளித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் ஜனாதிபதியை சந்தித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் 17வது சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தனது 81வது வயதில் காலமானார்.

ஜா-எலவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் காலமானார். 

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தராக செயற்பட்டார். 

போராட்டத்தின் போது கொள்ளுப்பிட்டி ஐந்தாம் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கோட்டே மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிட்டகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் தெரியவந்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று (27) இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைக்க சதி, உதவி மற்றும் ஆதரவு வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.மொஹமட் நிஹால் உத்தரவிட்டுள்ளார்.

கார் விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதோடு, சாட்சியங்களை அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எதிர்கட்சி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்த பின்னரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி முன்வைக்கும் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கத் தயார் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்புக்காக பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.பி இதனை கூறினார்.