வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு தூசி துகள்கள் இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா ஊடாக இலங்கைக்கு வரும் காற்றின் வேகம் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் படி, கொழும்பில் உள்ள தூசி துகள் அளவு (US AQI) நேற்று (13) காலை 166 ஆக உயர்ந்துள்ளது.
அந்த மதிப்பு சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது, மேலும் இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நிலை. நேற்று முன்தினம் (12) இந்த மதிப்பு 126 ஆகக் காட்டப்பட்டது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் படி, தூசி துகள்கள் உட்பட பாதகமான காற்றின் தர அளவுருக்கள் கண்டியில் 137, கேகாலையில் 134, குருநாகலில் 134, பதுளையில் 114 மற்றும் புத்தளத்தில் 109 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, உணர்திறன் மற்றும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.
தாம் எடுத்த அதே தீர்மானங்களே இந்த வரவு செலவுத் திட்டத்திலும் இருப்பதாகவும், அது தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெரண அலைவரிசையில் நேற்று (12) இடம்பெற்ற நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“நான் எடுத்தவை அனைத்தும் இந்த பட்ஜெட்டில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிப்புறமாக செய்யப்படவில்லை. அதன் அடிப்படையில் ஏதாவது செய்திருந்தால் அது நமது அடிப்படைக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது.
ஆனால் இந்த நேரத்தில் தேவை இருந்தால், அதை செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். மக்கள் சுமக்கக்கூடிய சுமையை முன்வைத்து எமது அடிப்படைக் கட்சியின் கொள்கைகளைப் பாதுகாக்கவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நாங்கள் முயற்சித்தோம்.
கடந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
போராட்டத்தின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் திரு.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக கடந்த 14ஆம் திகதி பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதியாக முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியை மேலும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (13) வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வர்த்தக பெண் ஜானகி சிறிவர்தனவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும்.
உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார்.
ஓய்வூதியர்களின் உயிர்வாழ்வுச் சான்றிதழை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறித்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கிராம அதிகாரிகளுக்கு தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
ஓய்வூதியர்களின் கையொப்பமிடப்பட்ட படிவத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாரிடம் ஒப்படைப்பது அவசியமாகும். அந்தத் தகவலின்படி, ஓய்வூதிய அதிகாரிகள் தரவுக் கட்டமைப்பை புதுப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதுவரை உறுதிப்படுத்தப்படாத ஓய்வூதியர்களின் தரவுகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். கிராம அலுவலர்கள் ஆவணங்களை பூர்த்தி செய்து மாவட்ட செயலாளரிடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் மேலும் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் லஞ்சம் ஆகியவற்றைத் தடுக்கும் தற்போதைய சட்ட விதிகளை வலுப்படுத்தவும், அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையை உள்ளடக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாலியல் துன்புறுத்தல் என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் அது குற்றவியல் சட்டத்தின் 345வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அந்தக் குற்றங்களுக்கான தண்டனையை நிர்ணயிப்பதற்கான சட்ட விதிகள் இருந்தாலும் இந்தப் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருவதை அவதானிக்கின்றது.
இதன்மூலம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் உள்ள கட்டுரைகளை உள்ளடக்குவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்துவதற்கான முன்மொழிவு நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கும், பாலியல் லஞ்சத்தை ஒரு குற்றமாக மாற்றுவதற்கும் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்தவும் முன்மொழிவு கோருகிறது.
மேற்படி பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
டிசம்பர் 13 செவ்வாய் முதல் 16 வெள்ளி வரை மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ெகொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு வௌியேறிய காரின் சாரதி, இலங்கைக்கு மீண்டும் திரும்பிய போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக ஆட்சி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அந்த மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மேலும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்களின் மாணவர் அந்தஸ்த்து இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவசரமாக பணிப்புரை விடுத்துள்ளார்.
சனிக்கிழமை (10) காலை கொள்ளுப்பிட்டியில் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான 24 வயதுடைய வாகன சாரதி துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற அதே நாளில் சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் கொள்ளுப்பிட்டியில் தனது சொகுசு காரை முச்சக்கரவண்டியின் மீது பின்னால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காரில் பயணித்த பெண் ஒருவர் விபத்தை நேரில் பார்த்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது சந்தேகநபர் மற்றும் பெண் உட்பட இருவர் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மதுபோதையில் பயணித்த இருவரை துடைப்பத்தால் தாக்கியதற்காக இரண்டு துப்புரவுப் பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.