web log free
December 05, 2023
kumar

kumar

நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பில் இருப்பதாக முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் திலினியின் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் இந்த பெண்ணிடம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகள் தொடர்பில் இணைய சேனலொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரதான கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் செயற்பாட்டாளர்களின் சம்மதத்தின் அடிப்படையில் அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை விரைவில் தயாரித்து அதற்கேற்ப கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட அரசியல் கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சமகி ஜன உட்பட சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான பிரபல பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டும் பணிகளை ஆரம்பிக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 

கெப்பிதிகொல்லேவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற அமைதியின்மையின்போது இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நிலையில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் - கெப்பிதிகொல்லேவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அதன்பின்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நேற்று (31) இரவு அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.

போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ​​பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டிருந்தார். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது.

அதன்படி இன்று (31) அல்லது நாளை (01) திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்வதில் தாமதம் செய்கின்றனர்.

இதன் காரணமாக இன்று (31) முதல் ஹட்டனில் உள்ள சிபெட்கோ மற்றும் ஐஓசி பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஐஓசி பெற்றோல் நிலையத்தின் கையிருப்பில் இருந்து 95 ஒக்டேன் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் பெற்றோல் வாகனங்கள் காணப்பட்டன.

நேற்று (30) பிற்பகல் முதல் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலை காரணமாக 95 ஒக்டேன் எரிபொருளை தமது வாகனங்களுக்கு பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹிக்கடுவ, திரானகம சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை நியமிக்கப்படாவிட்டால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் அபாயம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். 

இதற்குக் காரணம் தற்போது தற்காலிக ஆட்சியமைப்பதாகவும் நிரந்தர அரசாங்கம் இல்லாத காரணத்தினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கப்பாட்டுக்கு வந்து அமைச்சரவையை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விவாதத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை நடாத்தி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் திட்டம் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலுக்குச் செல்லாமல் தற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான மக்கள் விடுதலை முன்னணியின் திட்டம் குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

தற்போது அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் பிளவுபட்டுள்ள நபர்களை ஒன்றிணைத்து பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்குவதே அதுவாகும்.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மைகள் நியாயமாக விநியோகிக்கப்படும் வகையில் எங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அவர்கள் ஏற்கனவே திட்டங்களைத் தயாரித்துள்ளனர்.

"நாங்கள் எங்கள் அரசாங்கத்தை அமைக்க விரும்பினால், நாங்கள் மக்களிடம் வர வேண்டிய அவசியமில்லை. பாராளுமன்றத்தில் உள்ள சுயாதீன குழுக்களுடன் இணைந்து எமது அரசாங்கத்தை அமைத்து அமைச்சர்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நாங்கள் மக்கள் அரசை உருவாக்க விரும்புகிறோம். எனவே, நாட்டையும், மக்களையும் வெல்லும் திட்டத்தில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்" என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.

“மொட்டு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க மகிந்த ராஜபக்ச முடியுமென்றால் அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏன் தமது கட்சிகளை கைவிட முடியாது? இனி அந்த கட்சிகளை அரவணைக்க வேண்டாம். அனைவருக்கும் திறந்திருக்கும் தேசிய மக்கள் படையைச் சுற்றி திரள்வோம். அனைவரும் இணைந்து இலங்கையின் வரலாற்றை எழுதுவோம். அந்த பயணத்தில் கலந்து கொண்டு தைரியம் கொடுக்க நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். இது உங்கள் நேரம் மற்றும் எங்கள் நேரம். ஒரு வாக்களிப்பில் வெற்றி பெறுவதற்கும், நம் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்துடன் அழகான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குமான போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாலம்பேயில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ குடியிருப்புத் தொகுதியில் உள்ள சில வீடுகள், முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்களில் நீண்ட காலம் தங்கியிருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது பெண்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. இருப்பினும் இது முடியின் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன. எல்லோருக்கும் இந்த பின் விளைவுகள் வரும் என்று இல்லை. இருப்பினும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். முடி நீட்டமாக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

இந்த ரசாயன கிரீம் நம்முடைய கூந்தலுக்கு சரியாக இருக்குமா என்பதை எல்லாம் முதலில் சோதனை செய்துகொண்ட பிறகே முடிவு செய்ய வேண்டும்.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கை வீட்டில், பார்லரில் செய்து கொள்ளலாம். வீட்டில் செய்வதாக இருந்தால் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கும். பார்லரில் செய்யப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டியிருக்கும்.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் சிலருக்கு நிரந்தரமாக முடி இழப்பு ஏற்படலாம். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதிக வெப்பம் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம். சிலருக்கு ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தற்காலிக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.

முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடிக்கு வறண்ட தன்மையை கொடுக்கும். சிலருக்கு முடி ஜீவனின்றி இருப்பது போல பொலிவிழந்து காணப்படும்.

முடியில் உறுதியாக இருக்க அதில் ஹைட்ரஜன் இணைப்பு உள்ளது. அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது.

இதனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே சிலருக்கு முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம். வெயிலில் நடந்தாலே, குளிர்ந்த நீரில் குளித்தாலே,

மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும். ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப் பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்றுவிடலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்படலாம்

இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பாதீடு மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வாக்கெடுப்புடன் முடிவடையும் வரை, அனைத்து அமைச்சர்களும் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விடயங்களை இராஜதந்திர பணிகள் மூலம் கையாளலாம் என்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு 2023 இற்கான பாதீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறும். குழு நிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) எதிர்வரும் நவம்பர் 23 முதல் டிசம்பர் 8 வரை நடைபெறும். மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8 மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.