web log free
April 19, 2025
kumar

kumar

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் 100,000 கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோகன்னபுர சேமிப்பு ஒன்றியம் இந்த கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வணக்கத்துக்குரிய பொல்ஹெங்கொட உபரதன நாயக்க தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவும் இந்த நிகழ்விற்காக வருகை தந்துள்ளனர்.

இந்த வருட இறுதியில் இலங்கை மின்சார சபை மீண்டும் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடம் இரண்டு தடவை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருட இறுதியில் 5000 கோடி ரூபா பாரிய இழப்பை ஈடுகட்ட எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்று தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதால் மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டாலும் எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணத்தை நிச்சயமாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து நேற்றிரவு(17) 10.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்திலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

களனிப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிலையத்தில் கல்விகற்ற மூதாட்டியே இவ்வாறு முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக வயதான மாணவர் என்ற பெருமையை 97 வயதான விதானகே அசிலின் தர்மரத்ன பெற்றுள்ளார்.

இவரது பட்டப்படிப்பிற்கான பாடங்கள் 7 பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. பாலி நியதியில் பௌத்த தத்துவம், இலங்கையில் பௌத்த கலைகள் மற்றும் கட்டிடக்கலை, பௌத்த உளவியல், பௌத்த தத்துவத்தில் பொருளாதாரம், தேரவாத பாரம்பரிய வரலாறு மற்றும் தர்மம் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியதுடன் பௌத்த நெறிமுறைகளது கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள் மற்றும் ஆராய்ச்சி முறைகளை கொண்டது.

அவரது ஆய்வறிக்கை எம்பெக்கே தேவாலயத்தின் மர வேலைப்பாடுகளில் கடந்தகால வாழ்க்கை முறைகளை உள்ளடக்கியுள்ளது.

இளம் வயதில் அசிலின் தர்மரத்ன ஒரு நொத்தாரிசாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் இலக்கிய பாதையில் கவனத்தை திசைதிருப்பினார். இவருக்கு 6 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தனது 94 ஆவது வயதில் வித்யோதயா பல்கலைக்கழகத்தில் திரிபிடகம் மற்றும் பாலி மொழி தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார்.

இலங்கை முழுவதும் 39 கொலைகளை அவரது கும்பல் செய்துள்ளதாக கணேமுல்ல சஞ்சீவவின் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் சஞ்சீவவுக்கு தெரிந்தே நடந்தவை என்றும், சில கொலைகள் பழிவாங்கும் செயல் என்றும், சில கொலைகள் ஒப்பந்தங்கள் எனவும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சஞ்சீவ மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் வெளியேற்றப்பட்டதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அக்ஷர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவரது கையில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த போட்டியில், பந்து அக்ஷரின் கையில் பட்டதால், இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது எலும்புகளில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்ஷர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் சகலதுறை வீரர் வொஷிங்டன் சுந்தர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதேநேரம் புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கியூபாவில் நடைபெற்ற ஜி77 + சீனா அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டபின்னர், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் செப்டம்பர் 18 முதல் 21 வரை இம்முறை கூட்டத்தொடர் நடைபெறும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டத்தொடரில் பங்கேற்று, தனது விசேடஉரையை ஆற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள்
வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மேலும், அன்று ஜனாதிபதி, உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கெற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி Marc-André Franche-வை நேற்று (15) கொழும்பில் சந்தித்துள்ளனர். 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடப்படாமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் இதன்போது அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கமைய, குறித்த விடயத்தை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதாக ஐ.நாவின் இலங்கைக்கான பிரதிநிதி உறுதியளித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளமை தொடர்பில் தரவுகளுடனான ஆவணமொன்றை ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி Marc-André Franche-விற்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. v

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.

யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட

கூட்டமொன்று கடற்றொழில் அமைச்சர் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (150 நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களாகிய பலரும் கலந்துகொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd