web log free
July 27, 2024
kumar

kumar

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சுவையூட்டும் பாலை பருகிய 12 சிறுவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று (04) பிற்பகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

பாரதிபுரம் பிரதேசத்தில் முன்பள்ளிச் சிறார்களுக்கான நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட சுவையூட்டும் திரவப் பாலை அருந்தி மயக்கம், வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு ஒவ்வாமை நிலைமைகள் ஏற்பட்டதையடுத்து பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர்கள் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதனிடையே, குழந்தைகள் அருந்திய சுவையூட்டப்பட்ட திரவ பால் பொதிகளை பரிசோதிக்க, அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் மூலம் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக  ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முன்வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், அமைச்சர் ஒருவர் தனிப்பட்ட கருத்தைக் கூறலாம்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியானவர்கள் பொதுஜன பெரமுனவில் உள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​அதற்கு தகுதியானவர்கள் கட்சியில் இருப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று (04) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு (Laugfs Gas) சிலிண்டரின் விலையும் குறைக்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 1290 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3990 ரூபாவாக அமைந்துள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1596 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவாலும் 2.3 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 183 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 

அதன்படி அதிகரிக்கும் ஒதுக்கீடுகள் வருமாறு 

 

முச்சக்கர வண்டி 5 லீ  இருந்து 8 லீ

 

மோட்டார் சைக்கிள் 4லீ இருந்து 7லீ

 

பேருந்துகள் 40லீ இருந்து 60லீ

 

கார்கள் 20லீ இருந்து 30லீ 

 

லேன்ட் வாகனங்கள் 15லீ இருந்து 25லீ

 

லொறிகள் 50லீ இருந்து 75லீ

 

quadric cycle from 4L to 6L

 

விசேட தேவை வாகனங்கள்  20லீ இருந்து 30லீ

 

வேன் 20லீ இருந்து 30லீ

ஜனாதிபதிப் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்துகொள்வதற்காக 2022.07.20 ஆம் திகதி நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின்போது உபயோகிக்கப்பட்ட வாக்களிப்புச் சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் இன்று (04) அறிவித்தார்.

1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 18 ஆம் வாசகத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், 2023.03.24ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவர்களால் வாக்களிப்புச் சீட்டுக்கள் அழிக்கப்பட்டதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவித்தார். 

லிட்ரோ 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 1005 ரூபாவாலும், 5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 402 ரூபாவாலும், 2.3 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 183 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விபரங்கள்

01.12.5KG :- 3,738.00

02.5KG :- 1,502.00

03.2.3KG :- 700.00

நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க யாராவது தயாராக இருந்தால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் எவருக்கும் பணம் கொடுத்து அரசாங்கத்தில் இணைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு கட்சியல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேவை ஏற்படும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (04) பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள வீதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர்கள் செல்லும் வீதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்களை கண்காணித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது, விதிகளை மீறும் எவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, முதற்கட்ட கட்சி மாறுதலில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்கள் குழுவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி ஒருவரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிரேஷ்ட எம்.பி.களும், பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி ஒருவரும், எதிர்க்கட்சியின் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பேரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க்கட்சிகளின் சுயேச்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கட்சி மாறுவதற்கு தயாராகி வருவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இவர்களில் சிலர் நாளை (04) அல்லது நாளை மறுதினம் கட்சி மாறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் கட்சி மாறவுள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களில் பொஹொட்டுவவைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த எம்.பி.க்கள் அனைவரையும் இணைத்து புதிய அரசியல் கூட்டணியை தொடங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. 

பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது.

இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.