web log free
April 24, 2024
kumar

kumar

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.

கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக ஆட்டத்தின் இறுதி நொடி வரை போராடின. 35 மற்றும் 73-வது நிமிடத்தில் 2 கோல்களை பதிவு செய்து 2-0 என வலுவான முன்னிலை பெற்றிருந்தது அர்ஜென்டினா.

ஆனால், 83-வது நிமிடம் மற்றும் கூடுதல் நேரமாக வழங்கப்பட்ட 10 நிமிடத்தின் கடைசி சில நொடிகள் என 2 கோல்களை பதிவு செய்து 2-2 என சமன் செய்தது நெதர்லாந்து. அந்த இரண்டு கோல்களையும் தன் அணிக்காக வவுட் வெகோர்ஸ்ட் (Wout Weghorst) பதிவு செய்திருந்தார். கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

அதன் பிறகு ஆட்டத்தில் முடிவு எட்ட வேண்டி கூடுதலாக மேலும் 30 நிமிடம் வழங்கப்பட்டது. அதில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் அர்ஜென்டினா 4 கோல்கள் பதிவு செய்து அசத்தியது. நெதர்லாந்து 3 கோல்கள் மட்டுமே ஸ்கோர் செய்தது. அதனால் அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் புதன்கிழமை அன்று நடைபெற உள்ள அரையிறுதியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது அந்த அணி.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனு வழங்கக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளார். 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்ததன் காரணமாகவே கட்சித் தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, ​​மஹிந்த ராஜபக்ஷ, அரசியலில் நடைமுறையில் கிராம மக்களுடன் இணைந்து செயலாற்றியுள்ளாரா என்பதுடன் கல்வியிலும் முதன்மை கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு திறமையான இளம் பிரதிநிதிகளை முன்வைப்பதில் அதிக கவனம் செலுத்த பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதுடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விண்ணப்பங்களை தனித்தனியாக ஆராயவும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான பல விசேட கலந்துரையாடல்கள் கடந்த வாரம் நெலும் மாவத்தை பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிராக கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், இலங்கையின் இறையாண்மை தொடர்பான விடயம் எனக் குறிப்பிட்டு டுவிட்டர் பதிவுகள் மூலம் கருத்து வெளியிடுவதற்கு சீன தூதரகத்திற்கு உள்ள உரிமை குறித்து கேள்வி எழுப்பினார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனா ஆதரவளிக்காது போனால், தாம் “GoHomeChina” பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷானகியன் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு சீன தூதரகத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், “ஆம், எனக்கு எதிராக முதல் தடவையாக, அதுவும் மிகவும் சக்திவாய்ந்த நாடு ஒன்றின் தூதரகத்திற்கு வெளியே கொழும்பில் போராட்டம் நடத்துவதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 100 ரூபாவால் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பாக்கெட்டின் புதிய விலை ரூ 1240 ஆகும்

நிலவும் காலநிலை காரணமாக இன்று (09) அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 60 காற்றின் தர பரிசோதனை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே கூறுகிறார்.

இதற்காக பல அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றார். 

சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் வளிமண்டலத்தில் நேற்று அதிக அளவு தூசி துகள்கள் பதிவாகியுள்ளன. மேலும் மண்டவுஸ் சூறாவளி காரணமாக, இந்தியாவில் இருந்து தூசி துகள்கள் நாட்டிற்குள் பாய்ந்தது.

எனினும், தற்போதுள்ள தூசித் துகள்கள் இன்று முதல் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 1,500 கி.மீ தொலைவில் உள்ள கொழும்பு நகரிலும் இதே நிலை காணப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட பகுதியின் காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால், அது நல்ல காற்றோட்டமாகவும், அதிக மதிப்புகளைக் காட்டினால், அது மாசுபட்ட காற்று நிலையாகவும் கருதப்படுகிறது.

காற்றின் தரக் குறியீட்டில் 151ஐத் தாண்டினால், அது வலுவான மோசமான காற்று மாசு நிலையாகக் கருதப்படுகிறது.

தீவின் பல முக்கிய நகரங்களில், இன்று காலை காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்தது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக கொழும்பு இருந்தது.

இதன் காற்றின் தர சுட்டெண் மதிப்பு 246 ஆகவும், இரண்டாவது காற்றின் தர சுட்டெண் மதிப்பு 237 ஆகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் பெறுமதி 229 ஆக இருந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 226 ஆகவும் திருகோணமலை மாவட்டத்தில் 214 ஆகவும் பதிவாகியுள்ளது.

காற்றின் தர சுட்டெண்ணின் படி, களுத்துறை மாவட்டத்தில் 186, இரத்தினபுரி 166, கேகாலை 163, பொலன்னறுவை 160, பதுளை 154 மற்றும் கண்டி 151 ஆக இருந்தது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது குறித்த கலந்துரையாடலின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்து, அந்த வெற்றிடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் பிரேரணையின் மூலம் கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு உறுப்பினர்கள் இதற்கு எதிராக இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL)க்கான டாக்கா டொமினேட்டர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணியின் பந்துவீச்சு ஜாம்பவான் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வெளிநாட்டு டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கொழும்பு மற்றும் பல புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (10) 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இன்று தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாய்களில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை (10) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால், பின்வரும் பகுதிகள் பாதிக்கப்படும்:

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்.
மஹரகம, பொரலஸ்கமுவ, மற்றும் கொலன்னாவ நகர சபை பிரதேசங்கள்
கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள்
இரத்மலானை மற்றும் கட்டுபெத்த

தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 08.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் டிசம்பர் 09 ஆம் திகதி நள்ளிரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (09) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.