web log free
May 03, 2024
kumar

kumar

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தது.

அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்களிப்பதற்காக சபையில் பிரசன்னமாகவில்லை.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சராக கடந்த நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதையடுத்து, இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 22ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.

அங்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 84 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இன்று (08) காலை 09.00 மணி நிலவரப்படி இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எச்சரித்துள்ளது.

காற்றுத் தரக் குறியீட்டில் (AQI) முறையே 114 மற்றும் 117 என பதிவான பத்தரமுல்ல, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களுக்கு ‘மெஜந்தா’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் (81), முல்லைத்தீவு (80), கேகாலை (87), மற்றும் தம்புள்ளை (84) ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது, NBRO வால் ‘ஊதா’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இது காற்றின் தர சுட்டெண்ணில் 44 மற்றும் 43 ஐ பதிவு செய்த பின்னர், உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற அளவுகள் குறித்து எச்சரிக்கிறது.

இந்தியாவில் இருந்து வரும் மாசுபட்ட காற்று, காற்றின் மூலம் இலங்கையின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளதாகவும், அதனால், இலங்கையின் வடக்கு பகுதி மற்றும் சில பகுதிகள் தற்போது காற்றின் தரத்தில் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்வதாகவும் NBRO தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதன்கிழமை (07-12-2022) இலங்கை அரசாங்கத்திற்கான தனத்து ஆதரவை வெளிபாடுதினார், "நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்றால் இந்தியா தனது பொறுப்புகளில் இருந்து விடுபடுவது போன்றாகும்.

பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொருளாதார ஆதரவு முழு நாட்டிற்கும் இருந்தது, அது எந்த இனவாத அணுகுமுறையின் அடிப்படையிலும் இல்லை என்று அவர் கூறினார்.

ராஜ்யசபாவில் வெளியுறவுக் கொள்கை குறித்த தனது அறிக்கை குறித்து எம்.பி.க்கள் கோரிய விளக்கங்களுக்கு பதிலளித்த அமைச்சர், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது நீண்ட கால நிலைப்பாட்டின்படி - முந்தைய அரசாங்கங்களும் பின்பற்றியது என்றார். - இது "இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் நலன்களை மேம்படுத்துவதற்கான மிகவும் ஆக்கபூர்வமான வழி". "இது எங்கள் அணுகுமுறையாகத் தொடர்கிறது," என்று அவர் கூறினார்.

இலங்கைக்கான ஆதரவு குறித்து, “தமிழ் சமூகத்தையும் உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் நாங்கள் ஆதரவளித்துள்ளோம்” என்றார். "நாங்கள் ஆதரவு கொடுப்பதில் வகுப்புவாத அணுகுமுறையை எடுக்கவில்லை," என்று அவர் கூறினார். "இந்த வகையான கடுமையான பொருளாதார சூழ்நிலையில் அண்டை வீட்டாருக்கு உதவ நாம் அந்த நேரத்தில் நாம் முன்னேறவில்லை என்றால், நாங்கள் எங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதாக அமையும், அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம் என்றார்.

வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கறுப்புப் பொடி மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டுடன் இருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கினிகத்தேனை பஸ் நிலையத்திற்கு அருகில் கைது செய்துள்ளனர்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த இந்த இருவரையும் கினிகத்தேன பஸ் நிலையத்திற்கு அருகில் சோதனை செய்த போது அவர்களிடம் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கறுப்பு பொடி மற்றும் அமோனியம் நைட்ரேட் என்பன கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரில் ஒருவரிடம் 22,650 மில்லிகிராம் கறுப்பு பவுடர் மற்றும் 39,000 மில்லிகிராம் அமோனியம் நைட்ரேட் இருந்தது, மற்றைய நபரிடம் 86,680 மில்லிகிராம் கறுப்பு பவுடர் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் விராஜ் விதானகே தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விராஜ் விதானகே மேலும் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் அனைத்து எம்.பி.க்களுக்கும் ஒரு மாதத்திற்கு மேல் விடுமுறை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றம் கடந்த 13ஆம் திகதி கூடிய பின்னர் ஜனவரி 17ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. இது புத்தாண்டின் முதல் கூட்டம்.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இறுதி வாக்கெடுப்பு (மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு) இன்று (08) மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (09) நடைபெறவுள்ளது.

அதன்பின், வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க, வரும் 13ம் திகதி நாள் முழுவதும் கூட்டம் நடத்த, பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

சமத்துவமற்ற வகையில் இலங்கையில் தேயிலைத் துறை மறுசீரமைப்பு.
- சிக்கல்களுக்கு காரணம் இதுவே என்கிறார் திலகர்

பிரித்தானியரால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை தொழிற்றுறையானது சுதந்திரத்துக்குப்பின் இனவாத அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு. வருவதன் காரணமாகவே அந்தத் தொழிற்றுறை மிகுந்த சிக்கல் நிறைந்ததாகவும் அதில் தங்கி வாழும் சமூகத்தினர் ஏற்றத்தாழ்வு நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

வறுமை ஒழிப்புக்கான தென்னாசிய கூட்டமைப்பு ஒழுங்கு செய்த தென் ஆசிய பிராந்தியத்தில் தேயிலைத் தொழிலும் தொழிலாளர் நிலையும்' எனும் தொணிப்பொருளிலான செயலமர்வு
கொழும்பில் (06/12) நடைபெற்றது.

நிலைபேறானதும் நியாயமானதுமான தேயிலைப் பெறுமதி தொடர்பை வலியுறுத்தும் வகையில் தேயிலைத் தொழில் துறையில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வாளர்களான சுசோவன் தார் (இந்தியா) சிவம். பிரபா (இலங்கை), சதீர் ஸ்ரேஷ்தா(நேபாளம்) ஆகியோர் தமது நாடுகளை பிரதிநிதித்துவம் செய்து சமர்ப்பித்த அறிக்கைகளை சமர்ப்பித்து கருத்துத் தெரிவித்தனர்.

இலங்கைப் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு அலகின் பணிப்பாளர், சிவில் சமூக, தொழிற்சங்கப் பிரிதநிதிகள் கலந்து கொண்ட அந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறை பிரித்தானியர் அறிமுகம் செய்ததில் இருந்து சுதந்திரம் அடையும்வரை 100 % பிரித்தானியரின் கம்பனிகள் வசமே அதாவது தனியார் வசமே இருந்தன. எனினும் சுதந்திரத்தின் பின்னர் அதன் உரிமத்தில் மாற்றம் கொண்டுவந்து 1972 ஆம் ஆண்டு ஆகும்போது சிறுதோட்டங்கள் 25 % மாகவும் பெருந்தோட்டங்கள் 75% ஆகவும் மாறின. அதுவே 1992 ல் ஐம்பதுக்கு ஐம்பது என்றும் இப்போது 2022 ல் 25 % பெருந்தோட்டங்களும் 75 % சிறுதோட்டங்களும் என மாற்றம் கண்டுள்ளது. 2050 ஆம் ஆண்டு ஆகும்போது இந்த நாட்டில் 1% பெருந்தோட்டங்களும் 99% சதவீதம் சிறுதோடரடங்களும் என அமைப்பதற்கு தேசிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரங்களும் உண்டு . மறுபுறத்தில் 1992 ஆம் ஆண்டு ஐந்து முதல் ஆறு லட்சமாக இருந்த தமிழ் தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கை இப்போது ஒருலட்சம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதுடன் 75 ஆயிரமாக இருந்த சிறுதோட்ட உடமையாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில் 99.9% சிங்கள மக்களாவர். இந்த புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையில் தேயிலைத் தொழில்துறை இனவாத அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. தோட்டக் கம்பனிகளும் ஒரு பொது முறைமையில் அல்லாது அவரவர் நினைத்த படி தோட்டங்களை நடாத்தி வருகின்றன. தொழிலாளர்களுக்கு நில அருமையற்ற அவிட்குரோவர் முறையே மலைநாட்டு பகுதியில் அமுல்படுத்தப்படுகிறது. சிங்கள மக்கள் நிலம் காணி உரிமை வழங்கப்பட்டு சிறுதோட்ட உடைமையாளர்களாக்கப்படும் அதேநேரம் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் நாட்கூலி வேலையையும் இழக்கும் நிலைமையும் காணப்படுகிறது. இந்த நிலைமையானது இலங்கையில் ஒரே தொழில் துறையில் சமத்துவமற்ற வகையில் சமூகங்கள் கையளப்படுவதையும் காட்டி நிற்கிறது. தேயிலை ஏற்றுமதி மூலம் வருமானம் உழைக்கும் கம்பனிகள் அந்த தேயிலையை உற்பத்தி செய்யும் மக்களுக்காக தமது லாபத்தில் ஒரு பகுதியைக் கூட செவழிப்பதில்லை என்றும் தெரிவித்தார். ஆய்வு அறிக்கையின் பிரதிகளும் வருகை ஆய்வாளர்களால் தந்தோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான முக்கிய இறுதி வாக்கெடுப்பு நாளை (08) மாலை 5.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அரசின் வரவு செலவுத் திட்ட ஆவணத்திற்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த ஆவணம் தேர்தலில் வெற்றி பெறுமா அல்லது தோல்வியடையுமா என பலரும் பேசி வருகின்றனர்.

வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தமது வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு நாளை கொழும்பில் தங்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாளை பகல் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன் பிறகு வாக்குப்பதிவு நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் பின்னர் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ஜீவன் தொண்டமான் மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது 20 கேபினட் அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர்.

சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறைச்சாலையில் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் மூலம் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சோதனை காரணமாக அவரது அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தரகர் என கூறப்படும் நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம், சந்தேக நபரின் முகத்தை மறைத்து அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் முகம் மறைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், நாட்டின் குற்றவியல் வரலாற்றில் இந்த வழக்கு விசேடமானது என நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

" இது மிகவும் விசேஷமான வழக்கு. கொழும்பு நகரின் ஏழைப் பிரிவினரை குறிவைத்து மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குழு மனித உறுப்புக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது. 

"இந்த கடத்தலை மிகவும் திட்டமிட்ட கும்பல் நடத்தியது. போதைப்பொருள், மருந்து, ஆயுதக் கடத்தல் கும்பலைப் போலவே, இந்த கடத்தலும் மிகவும் பிரபலமானது. சந்தேகத்திற்குரிய இந்த தரகர் 30 முதல் 42 வயதுடையவர்களிடம் 50 லட்சம் முதல் 120 லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாகக் கூறி சிறுநீரகங்களைப் பெற்றுள்ளார்.

"இவ்வாறு 05 பேரிடம் இருந்து மனித உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறுநீரக தானம் செய்பவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் வழங்கப்படுவதில்லை. எனவே பணம் வழங்கப்படவில்லை என கூறி மரியதாஸ் என்ற நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்."

“இவ்வாறு சிறுநீரகம் வழங்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரும் உள்ளார், அவர் தாய்ப்பால் கொடுப்பவர். மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த கடத்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரக கடத்தலின் பரிமாற்ற மையமாக பொரளை தனியார் வைத்தியசாலை செயல்படுகிறது. அந்த வைத்தியசாலையில் ஒரு பேராசிரியரும் இருக்கிறார். அந்த மருத்துவமனை வைத்திர்களுக்கும் இந்த கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?" என விசாரணை நடந்து வருகிறது." என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,

"இவ்வாறு சிறுநீரகம் வழங்கியவர்கள் பொரளை பிரதேசத்தில் உள்ள குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்று குழப்பம் செய்துள்ளனர். அப்போது, ​​குழப்பத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கி, இனி குழப்பம் விளைவிக்க வேண்டாம், அப்படி செய்தால் கை கால்களை உடைத்து விடுவேன்´ என மிரட்டியுள்ளனர்."

"இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த கடத்தல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி எப்படி தலையிட்டார்? இந்த கடத்தலின் பின்னணியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வைத்தியசாலையில் 52 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. "ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வலையமைப்பில் இடம்பெறும் குற்றச் செயல். மேலும், இது சிக்கலான விசாரணையாகும்" என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். .

அதனையடுத்து, நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தரகரான சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்து அடையாள அணிவகுப்புக்கு அனுப்ப உத்தரவிடுமாறு கோரினார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொரளை பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 06 பேர் விசாரணைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதால் அவர்களின் பயணத்தை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், குறித்த தரகர் சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 06 பேர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பித்த நீதவான், அது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.