web log free
July 27, 2024
kumar

kumar

மின் கட்டணத்தை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி கோரி கடந்த (02) அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததோடு, ஏனையவற்றுக்கு மத்தியில் செலவு சரிசெய்தலுடன் கூடிய விலைச்சூத்திரம் தயாரிக்க முன்மொழியப்பட்டது. 

குறித்த பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பித்து அதன் அனுமதி கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் அரச ஊழியர்களின் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் மேலதிக நேர மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் முற்றாக குறைக்கப்படாது எனினும் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டதாகவே அமையும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

அதன்படி, இந்த கொடுப்பனவுகள் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக நேர விடுப்பு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் தவிர்த்து சம்பளத்திற்காக மாதாந்தம் 9300 கோடி ரூபாய் செலவாவதாக அவர் கூறினார். 

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுக வளாகத்தில் வைத்து கரையோர பாதுகாப்பு அதிகாரிகளை தாக்க முற்பட்ட 07 மீனவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (09) இரண்டு மீனவர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு அதிகாரிகளின் அலுவலகம் மீதும் மீனவர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரண்டு மீன்பிடி படகுகள் கடலில் மோதியதில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது கடலோர காவல்படை அதிகாரிகள் தலையிட்டு அதனை கட்டுப்படுத்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மொனராகலை பொலிஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

350 கஞ்சா செடிகள் மற்றும் மைதானத்தின் உள்ளடக்கங்களை கண்காணிக்கும் சாதனம் ஒன்றும் அவரது வசம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, லசந்த அழகியவன்ன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இன்று முதல் 3 மாகாணங்களில் முட்டைகள் தலா 53 ரூபாவுக்கு  விற்பனை செய்யப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்குச் சென்று முட்டைகளை விற்பனை செய்யவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆனால், சந்தையில் முட்டை ரூ.55க்கு வாங்க முடியாமல் அவதிப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்டிப்பாக ஒத்திவைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிடுகின்றார்.

அந்த வாக்கெடுப்பை நடத்தாமல் பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய வேட்பு மனு செயற்பாடுகள் மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற பண்டாரநாயக்க நினைவேந்தல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தற்கொலை என சில ஊடகங்கள் பிரகடனப்படுத்த முயற்சித்த போதிலும் புலனாய்வாளர்கள் அவ்வாறானதொரு முடிவுக்கு வரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மரணம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்  நாளை  (09) நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பிலான ஆணைக்குழுவின் செயற்பாடுகள்  மற்றும் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 11 ஆம் திகதி  தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அனைத்து கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தல் ,ஏனைய ஆவணங்கள் மற்றும் தேர்தல் தொடர்பிலான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக கட்சியின் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

11 ஆம் திகதி காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

தற்போதைய சூழலில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக வார இறுதி பத்திரிகைகள் செய்தி வௌியிட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடிய போது இதனை குறிப்பிட்டதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், தான் அதில் பங்கேற்க போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாக  பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடக சட்டமூலத்தை தற்போது ஆராய்ந்து மதிப்பிட்டு வருவதாகவும் அதனை  போன்றதொரு சட்டத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும்  ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்றார்.

கண்டியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

சுயேட்சைக் குழுக்காக ஒரு வேட்பாளருக்காக கட்டுபணமாக ஐயாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி வேட்பாளர் ஒருவருக்காக ஆயிரத்து 500 ரூபாய் வைப்பீடு செய்யப்பட வேண்டும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் கூறினார்.