பெறுமதி சேர் வரி சட்டமூலம், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) மாலை 4.50க்கு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
அச்சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு 57 வாக்குகள் மேலதிகமாக அளிக்கப்பட்டன.
பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் குழு நிலையில் திருத்தங்களுடனான சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகள் பெறப்பட்டது.
அதன்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
ரணில் சஜித் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொய்யான செய்திகளை பரப்பும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து ரணில் சஜித் இணையவுள்ளதாக விளம்பரம் செய்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறானதொரு இணைவு ஒருபோதும் ஏற்படாது என பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்துவதாக தெரிவித்தார்.
இவ்வாறான பிரசார நிறுவனங்களை ஊடக நிறுவனங்கள் என அழைக்க கூட தாம் ஆசைப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (11) மீண்டும் விவாதிக்கப்படவுள்ள வற் வரி சட்டமூலத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்க தீர்மானித்தமை அக்கட்சியின் அமைச்சர் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களுக்கு சிக்கலாகியுள்ளது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அரசாங்கம் கொண்டு வரும் சட்டமூலத்தை எதிர்க்க முடியாது எனவும் கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்பதை அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த சட்டமூலத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் உணவின் விலை தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.
அதாவது மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர்.
முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
வெட் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அக்கட்சி இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வெட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த தேர்தலில் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளில் இருந்தும் பலர் தம்முடன் இணையப் போவதாக ரத்னபிரிய குறிப்பிடுகிறார்.
தொழிற்சங்கங்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் அது விளையாட்டு மைதானம் அல்ல என்றும், திவாலான நாடு மீண்டு வந்து கடனை செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அமுல்படுத்தப்படவுள்ள தபால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரத்னப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாளாந்தம் தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு நாடு என்ற வகையில் பாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாகவும், சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் இத்தகைய பின்னணியில் மூழ்குவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அளுத்கடை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் தீ பரவியுள்ளது.
நேற்று (09) நள்ளிரவு தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரி வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து 3 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.
தீயினால் நீதிமன்றத்தின் சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
.
எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். கலந்துரையாடலின் பின்னர் இரண்டாம் தவணை கடனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர், நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விடும் என்பதை உலகிற்கு அறிவிக்க முடியும். நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய முதலீட்டாளர்கள் தேவை எனும் அடிப்படையில், அதற்கான வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில், தற்போதுள்ள பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மேலும் மேம்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,75,000 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் 85% பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புதிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் டிசம்பர் மாதம் முழுவதும் அதன் 5 தொகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ராஜகிரிய கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோரின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச பிரதிநிதிகள் நியமனம், இணைந்த அமைப்புக்கள் ஸ்தாபனம், பிக்கு அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் ஸ்தாபித்தல் போன்ற நிகழ்வுகள் மாதம் முழுவதும் நடைபெறவுள்ளதுடன், நிகழ்ச்சியை வழிநடத்த சிறிபால அமரசிங்க, சுகீஸ்வர பண்டார ஆகியோர் சென்றுள்ளனர்.
புத்தளம் பொஹொட்டுவ பிரதேசத்தில் உள்ள சிலர் இந்த வேலைத்திட்டத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கட்சி அலுவலகம் கூறுகிறது.
இதேவேளை, சிலாபம் தொகுதியை மையமாக வைத்து இன்று பகல் முழுவதும் மாதம்பே கருக்குவ சுகதானந்த மகா வித்தியாலயத்தில் மாகாண சபையின் நடமாடும் சேவை நடைபெறுகிறது.
வடமேற்கு ஆளுநர் திரு.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் நிமல் லான்சா விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இது நடைபெறுகிறது.