web log free
April 26, 2024
kumar

kumar

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் இசுரு பண்டார வெலிக்கடை சிறைச்சாலையில் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினாரா அல்லது சிறையில் தொலைபேசி கொடுத்தனரா என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இசுரு பண்டார நபர் ஒருவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபடும் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதன்படி, இசுறு சிறைச்சாலையின் நலன்புரி பிரிவில் உள்ள கைதிகளின் தொலைபேசியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அவர்களின் தனிப்பட்ட தொலைபேசியை அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் சிறைச்சாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக திலினி பிரியமாலியிடம் இருந்து இரண்டு செல்போன்களை சிறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.ஏ சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மத்திய செயற்குழு நேற்று கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதன்முறையாக தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் இதுவரையில் அமைச்சுப் பதவிகளையும் பெற்றுள்ளனர்.

இன்று (21) மெட்டியகொட நமிமியாவ பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையின் முதலாம் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மெட்டியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பலபிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப் போகும் போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரனும் தங்கையும் வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான ஆதரவை பொதுஜன பெரமுன வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுன எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படுவேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உத்தேச அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மொட்டு கட்சி தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தனிப்பட்ட விடுமுறைக்காக அமெரிக்கா சென்றிருந்த திரு.பசில் ராஜபக்ச நேற்று (20) இலங்கை திரும்பினார்.

அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தார்.

ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அவர் திடீரென நாட்டுக்கு வந்துள்ளதாக மொட்டு கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவரது வருகையின் பின்னர் இதுவரை காலதாமதமாகி வந்த அமைச்சரவை நியமனங்களும், ஆளுநர் நியமனங்களும் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.

UNICEF இன் சமீபத்திய அறிக்கையில் இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் காட்டுகிறது.

இலங்கையில் 22 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் 4.8 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என யுனிசெஃப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் என்றும், 6.2 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பற்றாக்குறையாலும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் தமது மாதாந்த சம்பளத்தில் 75 வீதத்தை தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய செலவிடுவதாகவும், அதனால் அந்தக் குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக மிகக் குறைந்தளவே ஒதுக்க முடியும் எனவும் அறிக்கை காட்டுகிறது. 

பணவீக்கம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதியை செலவழித்துள்ளதாகவும், அந்த குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிக்கலை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்  டயானா கமகேவுக்கு இலங்கை பிரஜாவுரிமை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவரது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள பலர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமகி ஜன பலவேகய தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வந்த அவர் தற்போது அவரது குடியுரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சமகி ஜனபலவேகவின் எம்.பி பதவியை பெறுவதற்கு அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலரிடையே போட்டி நிலவி வருவதாக, இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூறப்படுகின்றது. 

அவ்வாறு வெற்றிடம் நிலவினால் அந்த இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர அல்லது சுஜீவ சேனசிங்க ஆகிய இருவரில் ஒருவரை நியமிப்பது குறித்து சஜித் பிரேமதாச கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

முன்னாள் அமைச்சரும் பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.

இவர் ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் திரு.பசில் ராஜபக்ஷ இன்று காலை 08.30 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோககே, பவித்ரா வன்னியாராச்சி, சாந்த பண்டார, எஸ்.எம்.சந்திரசேன, பிரசன்ன ரணவீர, பியல் நிஷாந்த உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவும் அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்தனர்.