web log free
July 04, 2025
kumar

kumar

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.

சமகி ஜன பலவேகயா (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை உரையை புறக்கணித்தன.

ஜனாதிபதி உரையை ஆரம்பிக்கும் போது மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர்.

இலங்கையின் அரசியல் கட்சிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து அவை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சிப் பதிவு, வெளிப்படையான செயல்பாடு, உறுப்பினர் உரிமை, நிதி மற்றும் வருமானத்தைப் பெறுதல், தேர்தல் பிரச்சாரச் செலவுகள், ஊடகங்களைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்களை ஆராயும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது செயற்படும் அரசியல் கட்சிகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.அரசியல் கட்சிகளை விட, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணிகளே தற்போதைய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

இதில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் காசுக்கு விற்கப்பட்டுள்ளன. பேட்டையில் நடைபாதையில் இருப்பது போல், கட்சி மற்றும் சின்னம் விற்கப்படுகிறது. சில விற்கப்படுகின்றன. தரப்பினரின் உரிமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்போது பிக்குகள் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகாசங்கத்தினர் இன்று (08) கோட்டை, பெரகும்பா பிரிவெனாவிற்கு அருகில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்திய போதும், பிக்குகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

23வது திருத்த எதிர்ப்புக்கு பின் தேரர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிக்கு எதிராக மகா சங்கரத்தினரால் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை  பிக்குகள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர, பரகும்பா பிரிவேனுக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி தற்போது பாராளுமன்ற வளாகத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய பதில் வழங்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றினால் வாக்களிக்கப் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகளுக்கு அமைவாக திறைசேரி செயலாளரிடம் அடிப்படைத் தொகையாக 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு வாரங்களாக அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இதனைத் தெரிவித்தார். 

பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் மரணமடைந்த கோடீஸ்வர வர்த்தகர்  பொல்லால் தலையில் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் வர்த்தகருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் போது தொழிலதிபர் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த தொழிலதிபர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர் எனவும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடவென அழைக்கப்பட்ட நபர் கோரிய ஒரு லட்சம் ரூபா பணத்தை வழங்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் சென்று முடிந்துள்ளது. 

துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

துருக்கி – சிரியா எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 1800ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 7000திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொடவுக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொட இன்று (06) காலை கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வன்முறையை வெளிப்படுத்தும் காணொளி வெளியானது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் தர்ஷன ஹந்துங்கொட கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்து வரும் 8ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம் மற்றும் பலர் கடந்த 1ஆம் திகதி மொட்டு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அதன்போது, ​​தேர்தல் வந்தாலும் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் சரியான கருத்தை கூறுமாறு பிரதமரிடம் பசில் ராஜபக்ஷ கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 8ஆம் திகதி ஆளும் கட்சி ஒன்று கூடும் எனவும், அங்கு ஆளும் கட்சியின் சரியான கருத்தை அறிந்து அதனைத் தமக்கு அறிவிக்கத் தயார் எனவும் பிரதமர்  பசில் ராஜபக்சவிடம் அப்போது உறுதியளித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்கும் முழு உரிமையும் தினேஷ் குணவர்தன பிரதமராகவும் உள்ளூராட்சி அமைச்சராகவும் செயற்படுவதால் இது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து அவசியமானது என பசில் ராஜபக்ஷ பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார். 

இந்த தேர்தலை சிறிது காலம் ஒத்திவைக்க தலையிடுமாறு மாவட்ட அமைப்பாளர்கள் குழுவொன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளதாகவும் ஆனால் அவர் தலையிட முடியாது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தாம் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் காரணமாக வாக்களிப்பு நாள் எப்போது நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் பசில் ராஜபக்ஷ கேட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்குப்பதிவு நாள் தீர்மானிக்கப்படாவிட்டாலும் பசில் ராஜபக்ச அணி தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், அதன் பிரச்சார நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் முடிக்க தயாராக இருப்பதாகவும், முதல் சுற்று கம்பஹா மற்றும் குருநாகலில் இருந்து தொடங்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd