web log free
July 27, 2024
kumar

kumar

பம்பலப்பிட்டி வஜிர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 20 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் நேற்று (31) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி வீதியில் இருந்து வஜிர வீதியின் ஊடாக டூப்ளிகேஷன் வீதியில் பயணித்த கார் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விசாகா வித்தியாலயத்தை நோக்கி சென்றுள்ளது.

வீதியின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பலவற்றுடன் மோதி முன்னோக்கிச் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த பெற்றோரின் வாகனங்கள் வீதியின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

சுமார் 20 வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தின் பின்னர் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சாரதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட வெளிநாட்டினருக்கான நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை நாட்டிற்குள் அந்நிய செலாவணி வரும் ஒரு வழியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

'கோல்டன் பாரடைஸ் விசா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு ஆன்லைனில் விசா வழங்க முடியும்.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை (100000) வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இலங்கையில் வதிவிட விசா வழங்கப்படும்.

வைப்புச் செய்யும் வெளிநாட்டவர்கள் முதல் வருடத்திற்குப் பிறகு $50,000 திரும்பப் பெறுவதற்கான விருப்பம் உள்ளது, ஆனால் மீதமுள்ள $ 50,000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக தொடர்புடைய கணக்கில் வைக்கப்பட வேண்டும்.

இங்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும்.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் படி, இலங்கையில் குறைந்தபட்சம் $75,000 அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை (சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள்) செலவழிக்கும் வெளிநாட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகிக்காத முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் முந்தைய அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களாக இருந்தவர்கள்.

இவர்கள் அனுராதபுரம் மற்றும் மனுவர மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மேலும் அந்த மாவட்டங்களில்  இளையவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதால் விரக்தியில் உள்ளனர்.

அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் பல இடங்களில் பகிரங்கமாக ஜனாதிபதியை குறிவைத்து விமர்சித்து வருவதாக தெரியவருகின்றது.

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம, அட்டலுகம முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கோழிக்கடைக்கு சென்ற போது சந்தேக நபர் ஐஸ் போதைபொருள் குடித்துள்ளதாகவும் சந்தேகநபர் சிறுமிக்கு முன்னதாக கடையை விட்டு வெளியேறி புதருக்கு அருகில் மறைந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுமி  கோழி இறைச்சியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரை கடத்தி அருகிலுள்ள காட்டிற்கு இழுத்துச் சென்று, அவரது உடலைத் தொட்டு வன்புணர்வு செய்ய சந்தேகநபர் முயற்சி செய்துள்ளார். அங்கு கூச்சலிட்டு சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பிக்க சிறுமி  முயன்றுள்ளார். 

பின் சிறுமியின் வாயில் துணியை செருகி, சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் தள்ளி, அதில் மூழ்கி சிறுமியின் முதுகில் மண்டியிட்டு இறக்கும் வரை சந்தேகநபர் இருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம்.  

இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். 

அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.  

நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும். 

அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்று (31) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

50,000 வீட்டு எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்  ஆரம்பமாகவுள்ளதாக முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

விநியோகத்தில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு கொள்கலன்கள் அடங்கும்.

ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக சமூக வலைத்தள செயற்பாட்டாளரான சஞ்சு சமரசிங்க என்ற மோட்டிவேஷன் அப்பச்சி தெரிவித்துள்ளார்.

இன்று ஆர்பாட்ட வலயத்தில் மக்கள் இல்லை எனவும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

ஜே.வி.பியின் தலையீட்டினால் போராட்டம் நீர்த்துப் போனதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக சமூக வலைத்தள செயற்பாட்டாளரான சஞ்சு சமரசிங்க என்ற மோட்டிவேஷன் அப்பச்சி தெரிவித்துள்ளார்.

இன்று ஆர்பாட்ட வலயத்தில் மக்கள் இல்லை எனவும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

ஜே.வி.பியின் தலையீட்டினால் போராட்டம் நீர்த்துப் போனதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 09 வயதான சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று(30) பாணந்துறை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் கொலை தொடர்பில் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் இன்று(30) கைது செய்யப்பட்டார்.

கடந்த வௌ்ளிக்கிழமை (27) காலை முதல் காணாமல்போயிருந்த பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமியின் சடலம் கடந்த சனிக்கிழமை(28) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

அடுத்த சில மாதங்களுக்குள் இலங்கையில் ஒரு கிலோ அரிசியின் விலை 1000 ரூபாவை தாண்டும் என நீர்ப்பாசன கூட்டு விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் நிலைமைக்கு ஏற்ப பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான உரங்களை வழங்குவதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் செயலாளர் புஞ்சிரால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த உரத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அல்லது டொலர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இரசாயன உரங்களை இரசாயன உரங்களைத் தடை செய்ய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் விவசாயத்தையும் இதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்துள்ளார்.