web log free
September 08, 2024
kumar

kumar

 
 
மஞ்சள் எங்கள் நிறம் யாரும் பயன்படுத்த கூடாது சிறுபிள்ளைத்தனமாக - சஜித் கட்சி உறுப்பினர் .
 
மஞ்சள் நிறத்தை அரசியல் நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நிறம் ஆகும் என அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
 
SJB பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன ஊடகவியலாளர் மாநாட்டில், மஞ்சள் நிறமானது தமது கட்சியின் உத்தியோகபூர்வ நிறம் என்பதனால், எந்தவொரு அரசியல் விடயங்களுக்கும் எவரும் மஞ்சள் நிறத்தை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். 
 
பிரேமதாச மைதானத்தில் இலங்கை - அவுஸ்திரேலியா ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைக் காண வருபவர்கள் அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி செலுத்துமாறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
 
“இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்த அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி செலுத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் எமது நிறத்தைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள். SJB இன் உத்தியோகபூர்வ நிறம் மஞ்சள், அதே சமயம் நாங்கள் UNP பிரிந்து சென்ற குழு என்பதை அடையாளப்படுத்த பச்சை நிறமும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாள் போட்டிக்கு செல்பவர்களை மஞ்சளில் வருமாறும், பின்னர் காலி முகத்திடலுக்குச் செல்வோர் போட்டி முடிந்து அரசை கவிழ்க்கும் போராட்டத்தில் ஈடுபடுமாறும் சமூக ஊடகங்களில் கூறுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். நாங்கள் SJB அரகலயாவின் (போராட்டத்தின்) சிற்பிகள் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம், என்றார்

இலங்கை வரவுள்ள 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த குறித்த கப்பல் நேற்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வழங்குனர்களால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கப்பலின் வருகை மேலும் தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதத்திற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக எரிசக்தி அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

காட்டில் தன்னைத் துரத்தி வந்த பெரிய கரடி ஒன்றிடமிருந்து தப்புவதற்காக இளைஞர் ஒருவர் ஓடிச் சென்று மரத்தில் ஏறியுள்ளார்.

ஆனால் கரடி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அக்கரடி அங்கிருந்து செல்லும் வரை மூன்று நாட்களை மரத்திலேயே கழித்த அந்த இளைஞரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இரண்டு நாட்கள் தேடுதல் மேற்கொண்டு நண்பகல் வேளையில் கண்டுபிடித்துள்ளார்கள்.

இவ்வாறு காட்டில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டவர் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் 10 ஆம் கொலனியைச் சேர்ந்த சாகுல் ரிஸ்வான் எனப்படும் 22 வயது திருமணமான இளைஞராவார்.

தம்பலகாமம் ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் மாடுகளை வளர்க்கும் தனது மைத்துனர் இருக்கும் இடத்திற்கு செல்வதற்காக கடந்த 16 ஆம் திகதி காலை காட்டின் வழியே பயணம் செய்கையில் அவர் இவ்வாறான சம்பவமொன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்த இளைஞர் காட்டில் காணாமல் போயுள்ளதாக அவரின் மனைவி கடந்த 17ஆம் திகதி தம்பலகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து அங்கு கடமையாற்றும் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நாக்காலந்த முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவ முகாமுக்கு பொறுப்பான கேர்ணல் ராஜகுருவை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை கோரினார்.

வனவிலங்கு பிரிவினரையும், கிராமத்து மக்களையும் இணைத்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை அவர் மேற்கொண்டார். அன்று இரவு வரை தேடிய போதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவ்வாறு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் யானை மற்றும் கரடிகளின் அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்தார்கள். அவற்றை விரட்டியக்க வனவிலங்கு பிரிவினர் நடவடிக்கை எடுத்தார்கள்.

மறுநாளும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு அதற்காக மேலதிக படையணியினரும் கிராமத்தினருடன் இணைந்து கொண்டார்கள். அன்று பகல் காணாமல் போயிருந்த இளைஞர் குட்டையொன்றில் நீர் அருந்தும் போது கிராமத்தவர்களும் மற்றும் இராணுவத்தினரும் கண்டுள்ளார்கள்.பின்னர் அவரின் அருகில் சென்று அவரை மீட்டுள்ளார்கள்.

அவரின் உடம்பில் கீறல்கள் மாத்திரமே காணப்பட்டதாகவும் வேறு எதுவித காயங்களும் காணப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞன் பின்னர் தான் முகம் கொடுத்த சம்பவம் பற்றி இவ்வாறு விவரித்தார்.

"நான் எனது மைத்துனருக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்த பின்னர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல ஆயத்தமானேன். நான் காட்டில் நடந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய கரடி ஒன்றைக் கண்டேன். அது என்னைப் பார்த்தவுடன் என்னை துரத்தத் தொடங்கியது. நான் அதனிடம் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஓடினேன். எவ்வளவு தூரம் ஓடினேன் என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை.

நான் நன்றாகப் பயந்திருந்தேன். அதன் பின்னர் ஒரு பெரிய மரத்தில் ஏறிக் கொண்டேன். இரவு முழுவதும் மரத்திலேயே இருந்தேன், தூங்கவில்லை. அடுத்தநாள் இறங்கி பாதையை தேடிக் கொண்டு வந்தேன். நான் தொடர்ந்தும் காட்டுக்குள்ளேயே சென்றுள்ளேன். தொலைபேசிக்கும் 'சிக்னல்' கிடைக்கவில்லை. எனக்கு 'சிக்னல்' கிடைத்த போது நான் தகவலை வீட்டாரிடம் கூறினேன். பின்னர் தொலைபேசியை நிறுத்தி வைத்துக் கொண்டேன்.

காட்டில் பழங்களை உண்டு, அன்று இரவும் ஒரு குட்டையில் நீரை அருந்து விட்டு மரத்தில் ஏறி இருந்து கொண்டேன். அன்றைய இரவையும் மிகுந்த பயத்துடன் மரத்திலேயே கழித்தேன். எந்தவித வெளிச்சமும் இருக்கவில்லை.

எனது மரத்தைச் சுற்றி மிருகங்களின் சத்தமே கேட்டது. காலையில் நான் அருகிலிருந்த குட்டையில் நீர் அருந்தும் போது கிராமத்து மக்களையும் இராணுவத்தையும் கண்டேன். என்னை கிராமத்துக்கு அழைத்து வந்தார்கள். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்".

இவ்வாறு அந்த இளைஞர் விபரித்தார்.

இந்தச் சம்பவம் பற்றி தம்பலகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாக்கந்தல கூறியதாவது:

"இந்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக முறைப்பாடு கிடைத்தவுடன், நான் எனது உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இராணுவம் மற்றும் வனவிலங்கு பிரிவினர் சிலருடன் பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இளைஞரைக் கண்டுபிடித்தோம்.

கரடி துரத்திய வேளையில் அந்த இளைஞர் கிராமத்துப் பக்கம் ஓடாமல் எதிர்த்திசையில் ஓடியே காட்டுக்குள் வெகுதூரம் சென்று காணாமல் போயுள்ளார். இவரை குளத்துப் பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அனுராதபுரம் மாவட்ட எல்லையில் கண்டுபிடித்தோம். தற்போது காடுகளில் தேன் உள்ளது. அதனை உட்கொள்வதற்காக கரடிகள் வருவதுண்டு.

இந்தக் காட்டுக்குள் மக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மாடு வளர்ப்பவர்கள் அவற்றை மேய்ப்பதற்காக காட்டிற்குள் செல்கிறார்கள். வனவிலங்கு அதிகாரிகள் அதற்குத் தடை சொல்வதில்லை. நான் கிராமத்தவர்களுக்கு காட்டுக்குள் அநாவசியமாக நுழைய வேண்டாம் எனக் கூறுகின்றேன்.

அத்துடன் இந்த நடவடிக்கையில் இணைந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிராமத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்".

இவ்வாறு பொலிஸ் பரிசோதகர் நாக்கந்தல தெரிவித்தார்.

உலகின் ஏனைய நாடுகளின் தலைவர்களிடம் பேசும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாயில் பிட்டு காரணமாகவா ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன்  பேசவில்லை என்று கேட்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 10 சுயேச்சைக் கட்சிகளுக்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய, ரஷ்யா ஜனாதிபதி புட்டினுடன் பேச மறுப்பது நமது நாட்டுக்கு பாதகமான அரசியல் நிலையென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணத்தில் குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஆணைக்கோட்டையை சேர்ந்த மருத்துவ நிபுணர் சந்திரபோலிற்குச் சொந்தமான போக்குவரத்து நிறுவனம் இந்த குதிரை வண்டிச் சேவையை முன்னெடுத்துள்ளது. 

நாட்டில் காணப்படும் எரிபொருள் பற்றாக்குறைக்கு ஈடுகொடுக்கும் வகைகள் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

 

எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞன் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் - புத்தளம் வீதியில் பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை மோட்டார் சைக்கிளுக்கான எரிபொருள் வரிசையில் காத்திருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் வாகனங்கள் வரிசையாக நிற்பதால் மற்றுமொரு வாகனம் செல்வதற்கு போதிய இடமில்லாத இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்காக தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றுள்ளார்.

டீசல் மற்றும் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடத்தல்காரர்கள் இவ்வாறு அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்து வருவதுடன், எப்படியாவது தமது தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் மக்கள் அதிக விலை கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

பல்வேறு வாகனங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் வியாபாரமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.

ரஸ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் எரிபொருளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் ஒப்படைக்காமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை அஞ்சுவதாகவும் தெரிவித்த அவர், அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் மக்களின் சகிப்புத்தன்மை மிஞ்சும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மர கடத்தல் வியாபாரிகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கரடி கடித்த நிலையில் கடந்த 21ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டுக்குள் இருந்த கரடி ஒன்று திடீரென பொலிஸாரை தாக்கிய போது, ​​பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடி ஒளிந்து கொள்ள முற்பட்ட போது, ​​பொலிஸ் சார்ஜன்டை  கரடி கடித்துள்ளது.

ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் கரடி துரத்தப்பட்ட நிலையில் காயமடைந்த சார்ஜன்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.