web log free
July 27, 2024
kumar

kumar

எதிர்காலத்தில் இந்த நாட்டில் பலர் இரண்டு வேளை உணவை மாத்திரம் உட்கொள்ளும் நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவும் உக்ரைனும் முன்னெடுத்து வரும் போரினால் நாட்டின் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். 

கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இப்போதுதான் ஆரம்பமாகிவிட்டது என்று கூறிய அவர், உக்ரைன்-ரஷ்யா போரின் முழு தாக்கத்தை இலங்கை இன்னும் அனுபவிக்கவில்லை என்றும் கூறினார்.

செப்டெம்பர் மாதத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024ஆம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு மேலதிகமாக பெரும்போக பருவங்களில் பயிர்களை பயிரிடுவதில் தோல்வியடைந்துள்ளதாகவும் அதனால் இந்நாட்டு மக்கள் ஒரு நாள் மட்டுமே உண்ண வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தொங்கவிடப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவை தவிர வேறு புகலிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இந்தியாவில் இருந்து பொருட்களை விநியோகிக்கும் இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கை உள்ளது என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில், அவரை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்க சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு காரணமாக உச்ச நீதிமன்றம் அவரது மன்னிப்பை இடைநிறுத்தியுள்ளது.

அதன்படி அவரை கைது செய்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஒரு குழு குருநாகலில் உள்ள அவரது வீட்டிற்கும் மற்றைய குழு கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கும் அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக எம்.பி அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது பிரிவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் காணப்படும் ஒப்பந்தமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பிக்க சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராகி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் 21வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சம்பிக்க உள்ளிட்ட 43வது பிரிவு பகிரங்கமாக ரணிலுடன் இணையவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த காலங்களில் சம்பிக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வப்போது பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக மோசடி தொடர்பில் இரண்டு வைத்தியர்களுக்கு எதிராக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த இரு வைத்தியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க குழுவினால் ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் செயலாளர் டொக்டர் ஆனந்த ஹபுகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹெவ்லொக் வீதியில் வசிக்கும் கலாநிதி ருவன் எம். ஜயதுங்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்கள் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண் வைத்தியசாலையில் இந்த வைத்தியர்கள் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. சிறுநீரக மோசடி தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2013ஆம் ஆண்டு சிறுநீரக மோசடி தொடர்பாக இந்தியப் பிரஜை ஒருவர் சிஐடியால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் இரண்டு வைத்தியர்கள் தொடர்பிலும் தகவல் பதிவு செய்துள்ளதாக இலங்கை மருத்துவ சபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடர்பாக மதுவரி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் தரமற்றவை என கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மதுபானங்களுக்கு தரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மதுபான மாதிரிகள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் கிடைத்த அறிக்கையை அடுத்து, குறித்த மதுபான் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் கடந்த மே 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரமான நிலைமையின் போது தீ வைக்கப்பட்டன.

அந்த சம்பவம் நடப்பதற்கு முன்னரே மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. மதுபான தொழிற்சாலையில் இருந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள மதுபானங்களை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இந்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் விஷ இரசாயனம் அடங்கி இருந்ததாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தவறை சரி செய்த பின்னர், மீண்டும் மதுபான தயாரிப்புக்கு அனுமதி வழங்க மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எவ்வாறாயினும் தரமற்ற மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும் மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய கடன் திட்டத்தின் கீழ் சிறுபோக பருவத்திற்கான உரங்களை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் இன்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்த 20 நாட்களுக்குள் இதனை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் துமிந்த சில்வா இன்று முற்பகல் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று பிற்பகல் வைத்தியசாலைக்கு சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு, துமிந்த சில்வாவை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி, அவரை கைது செய்யுமாறு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட சில தரப்பினர் முன்வைத்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொது மன்னிப்பை வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை துமிந்த சில்வா விடயத்தில் பின்பற்றப்படவில்லை என மனுதாரர்கள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நாட்டில் சிறுவர்கள் மத்தியில் போசாக்கு குறைபாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 4 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று அவர் கூறினார்.

அவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவை வழங்கத் தொடங்கியுள்ளார். 

தற்போது வார்டில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 20 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.