web log free
February 11, 2025
kumar

kumar

மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை உடலுறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்று வந்துள்ள நிலையில் குறித்த நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் அங்கு கதைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் நண்பனுடன் இணைந்து மது அருந்திவிட்டு அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன் குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில் உறங்கியுள்ளார்.

இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் மதுபோதையில் இருந்த கணவன் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த போது மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினவிய நிலையில் மனைவி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தம்பதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதன்படி, பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படவுள்ளது.

லிட்ரோ நிறுவனத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அதேபோல், 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய விரிவாக்கம் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதி வசதிகளுடன் செயல்படுத்தப்பட்டது.

இலங்கையின் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி 57 மில்லியன் டொலர் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான சினோபெக் இலங்கை நாட்டில் எரிபொருளை விநியோகிக்கவும், எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்யவும் மற்றும் விற்பனை செய்யவும் வர வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்த அதிகளவான நிறுவனங்களை நாட்டின் எரிபொருள் சந்தையில் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் எண்ணெய் விநியோகத்தில் 90% அரசாங்கத்தினாலும் எஞ்சிய 10% இந்திய எண்ணெய் நிறுவனத்தினாலும் வழங்கப்படுகின்றன.

தற்போது, ​​அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சீன நிறுவனங்கள் எண்ணெய் சேமிப்புக் கூடத்தை நிர்மாணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது.

இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும்.

வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலையை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அண்ணன் தம்பி என்று நாட்டாமைத்தனம் வேண்டாம். எங்கள் மக்கள் தற்போது இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள்

அவன் பிழை இவன் பிழை என நாம் கூறுகின்றோம். மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற இனத்தை விடுதலை செய்கின்ற விடயங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது ஆலோசனைகளை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ண வேண்டும். தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒரு காலம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

22 இல் இருந்து தற்போது 10 ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறி உள்ளது.

ரணில் விக்ரமசிங்க பற்றி உங்களுக்கு தெரியும். விடுதலைப் புலிகளை உடைத்தவர். அவருடைய ராஜதந்திரத்தை பற்றி சொல்கின்ற போது நரித் தந்திரம் என்பார்கள். அந்த தந்திரமே விடுதலைப்புலிகளையும் பிரித்தாண்டது. அந்த தந்திரத்தையே நாங்கள் அண்மையில் பேசுகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டார். கூட்டமைப்பில் சிலர் தனக்கு வாக்களித்தார்கள் என கூறினர். சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் அதனை எதிர்த்து கதைத்தார்கள்.

வெளியில் வந்த போது ரணில் இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலரின் கருத்துக்கள் இருந்தது. அதனால் யாருக்கு வெற்றி என்று சொன்னால் அது ரணிலுக்கே வெற்றி. நாகரீகம் கருதி நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மாநாடு என்பதால் நான் பெயரைச் சொல்லி விரும்பவில்லை. இது யாருக்கு நட்டம்.

ஜனாதிபதி சரியாக காயை நகர்த்தி இருக்கின்றார். அதனை நாங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களுடைய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது. இருக்கின்றது. இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது. பலமாக 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்து செயல்படுகின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். 

பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக AFP செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர்.

ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை பொலிசார் கண்டுபிடித்தாலும், அவர்களுக்கு 180 நாட்கள் விசா இருந்ததால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலை காரணமாக வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்கள் அணியில் இருந்து வெளியேறியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு மேலும் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (07) பிற்பகல் 3 மணி முதல் இன்று (08) பிற்பகல் 3 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் திரு.பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு பணிகளுக்காக நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்ததன் பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, மண்சரிவு மற்றும் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த உதாரா ரயில் பாதையின் ரயில் சேவைகள் நாளை (09) முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உதர ரயில் பாதையில் மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயக்கப்படவிருந்த பல ரயில் பயணங்கள் அண்மையில் இரத்து செய்யப்பட்டன.

ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இருப்பினும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வேண்டும் என பேசும் போராட்டக்காரர்களை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போராட்டத்தினால் நல்லவை மட்டுமல்ல தீமையும் நடந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லதை மட்டும் வைத்துவிட்டு, கெட்டதைப் புறக்கணிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், சட்ட அமுலாக்கத்தில் குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாடி தீர்வை காண்போம் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக தகுதிகள் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தனது பெயர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும்,  அதற்கு தான் மிகவும் தகுதியானவர் என்றும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சியை கொண்டு வரவே ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முதன்முதலில் அழைத்ததாகவும், கட்சியை விட்டு விலக விரும்பாத காரணத்தினால் தான் அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை விளக்கியுள்ளார். மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நடிகை தீபிகா படுகோனே, மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்ற ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தீபிகா படுகோனே மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையுடன், தன் குடும்பத்தின் ஆதரவுடன், எப்படி மன அழுத்தத்தை கடந்து வந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

"பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன், தூங்கிக் கொண்டே இருப்பேன். தூங்குவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று முயற்சிப்பேன். என்னுடைய பெற்றோர் பெங்களூருவில் வசித்து வந்தனர். அவர்கள் ஒவ்வொரு முறை என்னை காண வரும் போதும், நான் நன்றாக இருப்பதாக அவர்களிடம் தெரிவிப்பேன். அப்படி ஒரு நாள் அவர்கள் என்னை சந்தித்து விட்டு பெங்களூர் புறப்படும் போது நான் உடைந்து போயிருந்தேன். இதையும் படியுங்கள்: இந்தியன் 2: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் தீபிகா படுகோனே அப்போது என்னுடைய அம்மா என்னிடம், உனக்கு ஆண் நண்பர்கள் மூலம் ஏதாவது பிரச்சனையா? இல்லையில் வேலை இடத்தில் பிரச்சனையா? ஏதாவது பிரச்சினை இருந்தால் சொல்லுமாறு கேட்டார். ஆனால் அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

ஏனென்றால், அப்படி எந்த ஒரு பிரச்சனையும் எனக்கு இல்லை. ஆனாலும், என்னைச் சுற்றி ஒன்றுமே இல்லாதது போல் இருந்தது. உடனே என்னுடைய தாய் என் பிரச்சினையை புரிந்து கொண்டார். அப்போது கடவுள் தான் எனக்கு அவர்களை என்னுடன் சேர்த்து வைத்து என் பிரச்சனைக்கு தீர்வு காண வைத்தார். தீபிகா படுகோனே சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எனக்கு தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன். என்னுடைய தாய்க்கு நன்றி! என்னுடைய அம்மாவுக்கே அனைத்து நன்றிகளும் போய் சேரும். நான் சினிமா தொழிலில் புகழின் உச்சியில் இருந்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் திடீரென்று காரணமே இல்லாமல் நான் உடைந்து விடுவேன். எனக்கு அதீத மன அழுத்தம் ஏற்பட்டது. தினமும் காலையில் எழுந்த போது ஒன்றுமே இல்லாதது போல தோன்றும். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், வெறுமனே இருக்கும். அதன் காரணமாக அழ ஆரம்பிப்பேன். பின், தியானம் செய்ய ஆரம்பித்தேன். ஒரு மனநல மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனைகளை முறையாக பெற்று வந்தேன். பல மாதங்கள் அவ்வாறு சென்றன. முதலில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற தயக்கமாக இருந்தது. ஆனால் நான் மனப்போராட்டங்களை கடந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தேன்" என்று கூறினார். தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி, அதன் மூலம் மன நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd