web log free
September 07, 2024
kumar

kumar

85 அரசியல்வாதிகள் தமது வீடுகளுக்கு பெற்றுக்கொண்ட தண்ணீருக்காக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தண்ணீர் கட்டணத்தை செலுத்த தவறிய அரசியல்வாதிகளின் பட்டியல் கடந்த வாரம் வாரியத்தால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடிநீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய அரசியல்வாதிகள் குழுவில் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் மறைந்த எம்.பி.க்கள் உள்ளனர்.

இவர்களில் ஏறக்குறைய 50 அரசியல்வாதிகளின் செலுத்தப்படாத தண்ணீர் கட்டணம் ரூ.6-10 லட்சம் வரை உள்ளதாக நீர்வள வாரியம் கூறுகிறது.

தற்போதைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த நீர்க் கட்டணத் தொகை 7 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த அரசியல்வாதிகளின் மொத்த நீர்க் கட்டணம் 3 மில்லியனுக்கும் அதிகமாகும்.

இந்த அரசியல்வாதிகள் பல வருடங்களாக குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறி வருவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் நினைவூட்டப்பட்டுள்ளதாகவும் நீர்வள சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

திருப்பதி :தெலுங்கானா மாநிலம் நார்நுர் மண்டலம், நாகலூ குண்டா பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்திரிபாய். தம்பதிக்கு 2 மகள்கள் மகன் உள்ளனர்.

தேவதாசின் இளைய மகள்‌ ராஜேஸ்வரி (வயது 20). அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.

ராஜேஸ்வரியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. வேறு மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலிப்பதற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

அப்போது ராஜேஸ்வரி காதலருடன் சென்றது தெரியவந்தது.

இதனால் அவமானம் அடைந்த ராஜேஸ்வரியின் பெற்றோர் நார்நுர் போலீசில் புகார் செய்தனார். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் காணாமல் போன ராஜேஸ்வரி மற்றும் அவரது காதலனை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராஜேஸ்வரியை அழைத்து சென்ற அவரது காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராஜேஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை ராஜேஸ்வரியின் பெற்றோர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

 

தனது மகள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஸ்வரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நார்நுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேவதாஸ் சாவித்திரி பாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் பதவிக்கு அரசாங்க எம்.பி.க்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆக இருக்கும் என்றும், இது 40 ஆக அதிகரிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் நான்கு பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு  அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

கேபினட் அமைச்சர்கள் நியமனத்தில் போட்டித் தன்மை காணப்பட்டதாகவும், அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்த போதிலும் சிலரது எதிர்ப்பினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்கும் வகையிலும், ஜனாதிபதியின் அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு வழங்கும் வகையிலும் புதிய திருத்தம் கொண்டு வருவதற்கு  மொட்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த திருத்தம் பொதுஜன முன்னணியின் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்படுகிறது, ஆனால் சிலர் எதிராக வாக்களிக்க வாய்ப்பில்லை.

இது தொடர்பில் கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அது கட்சியில் பிளவை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 21வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை ஜனாதிபதி திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துள்ளார்.

 

"நாட்டை மோசமான பொருளாதார நெருக்கடி தாக்கியிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதை நிகழ்த்தியவர்கள், அதற்குப் பொறுப்பானவர்கள் அரசில் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் பதவி விலகவில்லை. ஜனாதிபதி உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கொட்டாவ அதிவேக வீதியில் கடந்த 09 ஆம் திகதி பயணித்துக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் வாகனத்தை வழிமறித்து நிறுத்திய சிலர், அவரை தாக்கியதுடன், அவருடைய வாகனத்தையும் தீக்கிரையாக்கினர்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார ஊழியராக கடமையாற்றும் 30 வயதான ஒருவரும், ஹோட்டல் ஒன்றை நடத்தும் 37 வயதான ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஹொரணை மற்றும் மாகும்புற பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்றும் 88 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் முன்வைக்கும் திருத்தங்களுக்கு உரிய மதிப்பு கிடைக்குமானால் 21வது திருத்தத்திற்கு அக்கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்த பிரேரணை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் 9 சுயாதீன கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

21வது திருத்தச் சட்ட வரைவை ஆராய்ந்து எமது கருத்துக்களை முன்வைத்துள்ளோம். அதனை ஆதரிக்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதி வரைவு தயாரிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் முன்வைக்கும் உரிய திருத்தங்கள் உரிய மதிப்பை பெற்றால் 21ஆவது திருத்தத்தை ஆதரிப்பதற்கு எமது கூட்டணி தீர்மானித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர்.

மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற மைனா கோ கம ஆகிய அமைதி ஆர்ப்பாட்டங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (25) மாலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அதில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இதனுடன் சம்பந்தப்பட்ட விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அவர் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றுவார்.

ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் புதிய தளபதியாக விகும லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மே 9 ம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

யோசித ராஜபக்ச நிதீசஜயசேகர இருவரும் இரவு வர்த்தகரீதியில் முக்கியமான நபர்களிற்கான பகுதி ஊடாக விமானநிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் கறுப்பு உடையணிந்திருந்தனர் அவர்களை பலர் விமானநிலையத்திற்கு வெளியே சந்தித்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோசித ராஜபக்ச மே 9 ம் திகதி திங்கட்கிழமை காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்றார் அதன் பின்னர் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது.