web log free
May 09, 2025
kumar

kumar

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இன்று (13) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருந்தது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மாதம்(ஆகஸ்ட்) இறுதி பகுதியில் இளம் பிக்குகளின் பெற்றோரினால் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்சை பிரிவிற்கு 3 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக மாற்றப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகியதாக குறிப்பிட்டிருந்தனர். இதனை அடுத்து குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் மருத்துவ அறிக்கை பிரகாரம் செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் குறித்த சம்பவ விசாரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் செப்டம்பர் 05 ஆந் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார் படுத்தபட்டிருந்தது.

இதற்கமைய 3 இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றத்திற்கு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இளம் பிக்குகளின் பெற்றோர் ஏற்கனவே வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அம்பாறை பகுதியில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸார் இன்று கல்முனை பகுதியில் உள்ள குறித்த பௌத்த விஹாரைக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் சந்தேக நபரான பிரதான பௌத்த மதகுருவிடம் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்று கைது செய்திருந்தனர்.

மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான 08, 13, 14 வயது மதிக்கத்தக்க 3 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சம்பவத்தில் பொலிஸாரினால் சந்தேக நபராக இனங்காணப்பட்ட பிரதான பௌத்த மதகுரு கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த படுதல் தொடர்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியாக ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் செயற்பட்டு வருவதுடன் கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஒரே ஒரு விஹாரையாக செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை விட மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமகி வனிதா பலவேகய தலைவருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ரணிலின் வெளியேற்றம் விரைவில் நிகழும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விட அது மிகவும் பயங்கரமாக இருக்கும். அவர் உடனடியாக நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம்” என்று ஹிருணிகா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"மக்கள் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கும் போது மற்றொரு போராட்டம் வழியில் உள்ளது. முக்கிய தொழிலதிபர்களின் வீடுகள் ஆதரவற்ற மக்களால் எரிக்கப்படும் மற்றும் பணக்காரர்களுக்கு சொந்தமான அனைத்து செல்வங்களும் ஆதரவற்றவர்களாகி வரும் ஏழைகளால் பறிக்கப்படும், ” என்று அவர் மேலும் கூறினார்.

"சில நாட்களுக்கு முன்பு பத்தரமுல்லையில் உள்ள ஒரு பணக்கார வீட்டில் இருந்து சில பொருட்கள் களவாடப்படடது போலவே பணக்காரர்களுக்குச் சொந்தமான சொத்துக்களையும் அபகரித்தல் ஏற்கனவே தொடங்கிவிட்டது," என்று அவர் கூறினார்.

பிரேமலால் ஜயசேகரவை இராஜாங்க அமைச்சராக நியமிக்கும் தீர்மானத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்த ஹிருணிகா, இந்த நடவடிக்கையை ஐ.தே.கட்சியினர் எவ்வாறு வரவேற்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

"ஜனவரி 4, 2022 அன்று நடந்த பேரணியில் தொடங்கொட என்ற யூ.என்.பி ஆதரவாளரைக் கொன்றதற்காக ஜெயசேகர தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். மேலும் இந்த நடவடிக்கையை யூ.என்.பி. ஆதரவாளர்கள் எப்படி பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில்  விக்கிரமசிங்க பங்கேற்பதால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் (கட்சித் தலைவர்) கூட்டம் நாளை (14) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்திற்கான நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் அடுத்த வாரம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இதேவேளை, அரசாங்கத்துடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் ஊழியர் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் விவாதம் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு, பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு உள்ளிட்ட பல குழுக்கள் இன்னும் அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்களை அமைப்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் 19ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவுக்கு அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படவுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

உடவலவை தேசிய பூங்காவிற்கு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர விஜயம் செய்த போது, ​​மான் ஒன்று அவரது வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது.

பூங்காவில் வாகனத்தை அதிவேகமாக செலுத்தியதாலும், சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் வாகனம் மான் மீது மோதியதுடன் வாகனத்தின் கண்ணாடியும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய பூங்கா எல்லைக்கு வெளியே இவ்விபத்து நடந்ததாக கூறியுள்ளார்.

உடவலவ தேசிய பூங்கா வட்டாரத்தின் தகவல்களின்படி, பூங்காவிற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது .

மேலும், மாலை 6 மணிக்கு மேல் பூங்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 8 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் இரவு 11 மணியளவில் வாகனம் பூங்காவிலிருந்து வெளியே வந்ததாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் மீனவர்கள் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய துணைத் தூதரகத்தின் உதவியுடன் மிரிஹான முகாமிற்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து தமிழகத்திற்கு மீனவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகிற்கான உரிமை கோரிக்கை வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் உரிமையாளரால், உரிமை கோரிக்கை முன்வைக்கப்படாவிடில் படகு அரசுடமையாக்கப்படும் என நீதவான் உத்தரவிட்டார்.

SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான அதன் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய இந்தியாவின் நிலையான பார்வையானது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதாகும்" என்று பிரதிநிதி கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது கடனினால் இயங்கும் பொருளாதாரத்தின் வரம்புகளையும் அது வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"இலங்கை பிரஜைகளின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதும், அவர்களின் அதிகாரமளிப்பை நோக்கிச் செயற்படுவதும் இலங்கையின் சிறந்த நலன்களாகும், இதற்காக அடி மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு ஒரு முன்நிபந்தனையாகும்" என்று திங்கட்கிழமை (12) ஜெனிவா அமர்வில் இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

முன்கூட்டியே தேர்தல்களை நடத்தி மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் இலங்கையின் அனைத்து பிரஜைகளும் வளமான எதிர்காலத்திற்கான தமது அபிலாஷைகளை அடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர், தாங்கள் குற்றமிழைக்கவில்லை என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு விளைவித்தனர் குற்றச்சாட்டின் பேரில் இருவருக்கும் எதிராக சட்டதா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கின் சாட்சிய விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

அதன்பின்னர் பிரதிவாதிகள் இருவரும் தாம் குற்றமற்றவர்கள் என்று மன்றுக்கு அறிவித்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கொழும்பில் சகல வல்லி ஆராச்சிகே சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகிய இரு நபர்களை வைத்து ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

அதில், வெள்ளை வான்களில் ஆட்களை கடத்திச் சென்றமை மற்றும் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இருவருக்கும் எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று செப்டெம்பர் 13 ஆம் திகதி. உங்கள் ராசிக்கு பலன் எப்படி உள்ளதென பார்க்கலாம்.. 

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகமாகும். பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்துபோவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும்நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.

கடகம்

கடகம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் வெற்றி கிட்டும்நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டம் இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலைஉயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்கவேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

மகரம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.

மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் தொடர்பில் காலி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறுமியின் தாயினால் காலி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறுமி தனது தாயாருடன் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8ம் திகதி அந்த சிறுமி ஸ்கேன் எடுக்க கதிரியக்க துறைக்கு சென்றார் சென்று விட்டது ஸ்கேன் செய்து பார்த்ததில் அங்கிருந்த சந்தேகமடைந்த மருத்துவர் சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஸ்கேன் செய்த பின், சிறுமி தங்கியிருக்கும் வார்டில், அந்தரங்கப் பகுதியில் வலி ஏற்படுவதாக, தாயிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் தாய் கேட்டுள்ளார். அங்கு சிறுமி தனது தாயிடம் எல்லாவற்றையும் கூறினார்.

பின்னர், மருத்துவமனை வார்டில் உள்ள தலைமை மருத்துவரிடமும் இதுகுறித்து கூறப்பட்டது. பின்னர் சிறுமியுடன் வந்த தாய் காலி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் வைத்தியரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காலி தலைமையக பொலிஸ் பரிசோதகர் கபில சேனாபதி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.பி. யு. எம்.  ரங்காவிடம் கேட்டோம். பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவன மட்டத்திலும் விசாரணை நடத்தப்படும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd