பிலியந்தலை மடபட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இரண்டு பிக்குகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒரு பிக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த பிக்கு மற்றொரு பிக்குவால் கத்தியால் குத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விகாரைக்கு கிடைத்த பிரிகாரம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது.
120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து 225 ஆகவும் 80 பக்க புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை 40 பக்க CR புத்தகத்தின் புதிய விலை 150 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் 40 பக்கங்கள் கொண்ட வரைபு புத்தகம் 230 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியை 06 மாதங்களுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்காலிகமாக வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை திணைக்களம் ஒரு வருட காலத்திற்கு நீட்டித்துள்ளது.
தற்காலிக 06 மாத உரிமம் பெற்றவர்கள், உரிமத்தின் செல்லுபடியை நீட்டிக்க, வெரெஹராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகம் அல்லது அவர்களின் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு மட்டுமே தற்போது உரிமம் வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தாமரை கோபுரம் அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் வகையிலான நுழைவுச்சீட்டொன்றின் பிரதி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
என்ற போதும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது போலி நுழைவுச்சீட்டு என கொழும்பிலுள்ள இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் தாமரை கோபுரத்திற்குச் சென்று, நுழைவுச்சீட்டுக்களை வாங்கி உங்கள் கண்களால் நீங்களை இதனை பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் இலங்கைக்கான சீன தூதரகத்தால் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் முற்பகல் 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தின் எதிர்வரும் வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் தீர்மானிக்கும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை பெறுவது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 0112 582 447 என்ற அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) திரு.பிரதாபோத காகொட ஆராச்சிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, 2022 மே 1 தொடக்கம் 2023 ஏப்ரல் 30 வரை உத்தியோகபூர்வ முறைகளினூடாக 3000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அனுப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு, அனுப்பப்பட்ட தொகையை 50 சதவீதம் குறைவான CIF மதிப்புள்ள மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையில், 2022 மே 1 தொடக்கம் 2022 டிசம்பர் 31 வரை 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பரிமாற்றம் செய்தவர்களுக்கு மின்சார காரை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மின்சார கார், டபுள் கேப், வேன் அல்லது டிப்பர் ட்ரக் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
உரிய வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய அனைத்து ஆவணங்களுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் அக்டோபர் 31ஆம் திகதி சான்றிதழ் அளிக்கப்படும் என்றும், அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமார் இரண்டரை இலட்சம் இளைஞர்கள் புதிதாக வாக்களிக்கும் உரிமையைப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்யத் தயாரானதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் நேற்று (13) கையளித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் குருநாகலில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி ஜனாதிபதியை கொல்ல திட்டமிட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் குற்றம் சுமத்தினார்.
முன்னதாக, நீதிமன்றம் வழங்கிய அழைப்பாணையின்படி நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரிகைகளை கையளித்த நீதிபதி, அவர்களின் கைரேகைகளை எடுத்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
2009 பெப்ரவரி 1ஆம் திகதிக்கும் 14ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் குருநாகலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி ஜனாதிபதியைக் கொல்லத் திட்டமிட்டதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உண்மைகளை முன்வைத்ததுடன், தமது தரப்பினர் 13 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகளின்படி, தமது கட்சிக்காரர்களுக்கு பிணை வழங்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும், அவர்கள் 13 வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை தனித்துவமான விடயமாகக் கருதி, சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை மீதான உத்தரவை அக்டோபர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், வழக்கை மீண்டும் அன்றைய தினம் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதனின் உணவு பாவனைக்கு தகுதியற்றது என தாம் கருதுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசி உற்பத்தியில் இந்த நாட்டில் பயன்படுத்தப்படாத இரசாயனங்கள் மற்றும் தரக்குறைவான உரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
எனவே, இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதர்களை விட விலங்குகளுக்கு ஏற்றது. எனவே கால்நடை தீவன பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உரிய வர்த்தமானி அறிவித்தலை நீக்கினால் அந்த அளவு அரிசியை கால்நடை பாவனைக்கு பயன்படுத்த முடியும் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டு மக்களுக்கு தேவையான அரிசியை வழங்குவதற்கு இந்நாட்டு விவசாயிகள் பலமடைந்துள்ளனர் என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் கூறியுள்ளார்.
இன்றைய ராசிபலன்9/14/2022
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றங்களும் வந்து போகும். நெருங்கியவர்களிடம் உங்கள் மனகுறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதைப் போல உபத்திரம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இதமாகப் பேசி கவர்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினை ஒன்று தீரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களை. தேடி வந்து பேசுவார்கள். இன்பம் பெறும் நாள்.
கடகம்
கடகம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கூடும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.
கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சிலர் உங்கள் வாயைக் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
துலாம்
துலாம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
தனுசு
தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.
மகரம்
மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் முழுகும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
மீனம்
மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அரசால்அனுகூலம் உண்டு. அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.