web log free
July 27, 2024
kumar

kumar

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளை தீர்க்கும் முகமாக அவருடைய உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் விசேட அறிவிப்பில் தகவல் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இரவு 9 மணிக்கு ஜனாதிபதி விசேட உரை இடம்பெறவுள்ளது. 

 

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். 
 
இதற்கிடையே, பிரதமர் ராஜபக்ஷ குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.
 
இந்த செய்தி உண்மையில்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் தனது குடும்பத்தினருடன் திருகோணமலையில் உள்ள பில்லோ ஹவுஸ் என்ற பங்களாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது என்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காக பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இங்கு தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 135 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இலங்கையில் வன்முறை வெடித்துள்ளதால் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஹம்பந்தோட்டை சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை (மே 9) முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது

" அமைதியின்மை தொடங்கியவுடன், எரிபொருள் பவுசர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை நாங்கள் உடனடியாக நிறுத்தினோம். எந்தவொரு எரிபொருள் பவுசரையும் மக்கள் தாக்கினால், சாத்தியமான தீ பரவி குறிப்பிட்ட பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்" எனவும் தெரிவித்தது

எரிபொருள் பவுசர்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபை (SLTB), புகையிரத திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதுகாக்கப்பட்ட ஆயுதப்படைகளுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதான பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடபட்டு வருகிறது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் மக்கள் ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களது வதிவடங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மக்களுடைய கோபாவேசம் அரச தரப்பினரது சொத்துக்களை அழித்தொழிப்பதாக மாறி நாடு முழுவதும் தீக்கிரையாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
 
இவ்வாறு இலங்கையில் ஏற்பட்டுள்ள தமக்கு எதிரான எதிர்ப்பலையில் இருந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் எந்நேரமும் நாட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
திருகோணமலை கடற்படை முகாமில் நாட்டைவிட்டு தப்பிஓடும் நோக்கில் ராஜபக்ச தரப்பினர் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியதை அடுத்து திருகோணமலை கடற்படை முகாமும் மக்களின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது.
 
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
இந்த செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
 
குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் செய்திகள் அவதானித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
 
உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவையாகும்.
 
இவ்வாறான செய்திகளை மறுக்கும் அதேவேளை, வன்மையாக கண்டிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
 
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
 
அதன்படி, திட்டமிட்டபடி வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகிறது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெற வுள்ளது.

கடந்த ஒன்பதாம் திகதி அமைதியான போராட்டத்தின் மீது குண்டர்களை ஏவிய குற்றச்சாட்டின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அழைக்கப்பட்டுள்ளார்.

குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளையும் வாக்குமூலம் வழங்க வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, மகிந்த உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பியோடியுள்ளனர். 

முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யும் தினமான நேற்று முன்தினம், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை தாக்குவதற்காக குண்டர்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம்(11) நடைபெறவிருந்த பாராளுமன்ற கட்சிகளின் விசேட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்துதவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், அது நிச்சயமற்றது என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு தீ வைக்க முயற்சித்ததாகக் கூறி கூட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.