கடந்த காலங்களில் நாட்டை அழித்தது ராஜபக்சர்கள் இன்றி 16 இலட்சம் அரச உத்தியோகத்தர்களே என தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும்,இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹபராதுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோடீஸ்வரர்களுக்கு பெரும் வரிச்சலுகைகளை வழங்கி நாட்டை வங்குரோத்தியமாக்கியது ராஜபக்சக்களே என சுட்டிக்காட்டிய பிரேமதாஸ அவர்கள்,அதற்காக அரச ஊழியர்கள் குற்றம் புரிந்தவர்களாக மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
வெள்ளைப்பூண்டு,எரிவாயு,
தேங்காய் எண்ணெய்,
சீனி,நிலக்கரி போன்ற அனைத்து மோசடிகளின் பின்னணியிலும் ராஜபக்சர்கள் இருந்ததை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,
எனவே,இதற்கு அரச ஊழியர்கள் பொறுப்பல்ல எனவும் தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்தடைய செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பிரேமதாஸ அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.
ஹபராதுவ தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளர் சுமணசிறி லியனகே அவர்கள் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் மது பாவனையில் குறிப்பிடத்தக்க குறைப்பு பதிவாகியுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 215 மில்லியன் லீற்றர் மதுபானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் உப தலைவர் நளீன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரை மக்கள் 120 மில்லியன் லீற்றர் மதுபானங்களை மட்டுமே உட்கொண்டுள்ளதாக நளீன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் திங்கட்கிழமை (03) சர்வதேச மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எதிர்க்கட்சி மூன்று உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த மூன்று எம்பிக்களுக்கும் பெரும்பாலும் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் நிரந்தர அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பதவியை வகிக்க வேண்டிய 12 பேரின் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மொட்டுவுக்கு 12 அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமாயின், எஞ்சிய கட்சிகளுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும்.
ஏனைய கட்சிகளைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான் மற்றும் அதாவுல்லா இருவருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட வஜிர அபேவர்தன மற்றும் அரசாங்கத்தில் இணையவுள்ள துமிந்த திஸாநாயக்க ஆகிய இருவருக்குமே ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்குவார் என அறியப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் நோக்கில் இலங்கையின் அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான பிரதான சட்டமூலத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாதம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 6 மற்றும் 7ம் திகதிகளில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டது.
17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளியை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலங்களில் முற்றாக வீழ்ச்சியடையும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையானது அறிக்கைகளை மேற்கோள்காட்டி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மந்தநிலை சுழல்நிலையில் நகர்ந்து வருவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு மனித உரிமைகளுக்கு இணங்க மீட்சியை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அறிக்கை கூறுகிறது.
கஞ்சாவை ஆயுர்வேதப் பொருட்களாக சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டங்கள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் பேரவையின் ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
களனி, தலுகம பிரதேசத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் (டி.எஸ்.டி) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, எலபாத, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 09.00 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.
பாராளுமன்றத்தில் வைத்து இந்த உரையை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பில் ஜனாதிபதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேடஉரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.