web log free
September 20, 2024
kumar

kumar

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தரை மட்டத்தில் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ரப்பக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக கட்சி உறுப்பினர்களுக்கு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, தங்காலை தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் கட்சிகள் பலப்படுத்தப்படும் என்றும் எம்.பி கூறினார். 

நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுனவை நிலைநிறுத்துவதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்பை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் சில மாதங்கள் முக்கியமானவை என்பதால், வெளிநாட்டுப் பயணங்களை உடனடியாகக் குறைக்குமாறு அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசியல் பணிகளுக்காக வரவேண்டியது அவசியம் என்பதால், முடிந்தவரை வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் மே தின கூட்டத்தின் பின்னர் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் பணிகளை முடுக்கிவிடுமாறும், மே மாதம் ஜனாதிபதி தேர்தலை நேரடியாக இலக்கு வைத்து அரசியல் பணிகளை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கட்சிகள் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் பங்குபற்றுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்று (10) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறம் ஈஸ்டரின் மூளையாக விளங்கி அதை மூடி மறைத்த குற்றமே மறுபுறம் பொய் சொன்னால் மரணத்திற்கு காரணமானவரை மறைக்க விசாரணையை திசை திருப்புவதாக சந்தேகிக்கிறோம். அவர் கூறிய கருத்திலிருந்து தப்பி ஓட முடியாது, ஆனால் அவர் அந்த அறிக்கைகளை மீண்டும் மீண்டும் மாற்றுவதை நாம் காண்கிறோம்.

மைத்திரிபால சிறிசேன நாட்டையும் சாப்பிட்டார். ஆட்களை சாப்பிட்டுவிட்டு இப்போது வாந்தி எடுக்க வேண்டியதாயிற்று. மைத்திரி நாட்டில் எத்தனையோ பிரச்சினைகளை ஏற்படுத்தி தாய்லாந்திற்கு சென்று விட்டாரே என அஞ்சுகிறோம். இது ஒரு தப்பிப்பா என்று தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை உடனடியாக வரவழைத்து சட்டத்தை அமல்படுத்துமாறு சட்ட அமலாக்க முகாமைகளைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் .

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல், உள்நாட்டு இணைய வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சைபர் தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் அடையாளம் காண்பதற்காக இணைய சேவை வழங்குநர்களிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி திடீர் பதிலளித்தல் ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்று கல்வியமைச்சுக்கு இன்று(10) கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு இலக்கான கல்வி அமைச்சின் இணையத்தளமானது தொடர்ந்தும் செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கட்சியின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்பதில்லை என அக்கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சஹாபாவும் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசியல் ரீதியாக ஒன்றிணைய வேண்டும் என்று உறுதியாக நம்பும் பாராளுமன்ற உறுப்பினர்களில் முன்னணியில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.

பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சஹாபா தலைவர்கள் அவருக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதும் தெரிந்ததே.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, உங்கள் மதிப்பை வென்ற வங்கியான SDB வங்கி, இலங்கையின் நிதித் துறையின் பொருளாதார உந்துசக்தியின் மூலக்கல்லாக திகழ்கின்றது. தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினருக்குமான சேவைகளுடன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கித் தீர்வுகளை அது வழங்கி வருகிறது.

அந்த வகையில் தமிழ், சிங்கள புத்தாண்டின் கொண்டாட்ட உணர்வோடு இணைந்த ஒரு நடவடிக்கையாக, இலங்கையின் கலாசார கட்டமைப்பை ஆழமாக எதிரொலிக்கும் பிரச்சாரத்தை SDB வங்கி ஆரம்பித்துள்ளது. தேசம் ஒன்றிணைந்து நட்பைக் கொண்டாடும் இது தமிழ், சிங்கள புத்தாண்டு காலமாகும். இந்த முயற்சியின் சரியான பின்னணியாக மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை செயற்படுகிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து சடங்குகளையும் தமிழ், சிங்கள சமூகங்கள் சுப நேரங்களின் அடிப்படையில் கொண்டாடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதற்கு அங்கீராமளிக்கும் வகையில், இது ஒரு தனித்துவமான நடவடிக்கையாக, "SDB இத்துறும் சாரித்ரய" (SDB சேமிப்பு சடங்கு) எனும் கருப்பொருளுடனான சேமிப்பு பாரம்பரியத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இது தொடர்பில் SDB வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ஹசித சமரசிங்க தெரிவிக்கையில், "SDB வங்கி ஆகிய நாம், சேமிப்புகள் எமது வாடிக்கையாளர்களுக்கு நிதி பாதுகாப்பின் அடித்தளமாக அமைகின்றன என்பதை நன்றாக புரிந்துகொண்டுள்ளோம். 'SDB இத்துறும் சாரித்ரய' என்பது ஒரு பிரசாரத்தையும் தாண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இந்த நெருக்கடிமிக்க காலத்தில், முக்கியமான சேமிப்பு கலாசாரத்தை மேம்படுத்துவதானது எமது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். முற்போக்கான நபர்களுக்கான நிதிப் பங்காளியாக இருப்பதிலும், சிறந்த நிதி நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்துவதிலும், தமது எதிர்காலத்திற்காக சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் ஒவ்வொரு இலங்கையருக்கும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்." என்றார்.

இந்த ஊக்குவிப்பு திட்டமானது, சேமிப்பின் பெறுமதியை வலுப்படுத்துவதற்கும் சமூகத்துடன் நீடித்த தொடர்பை ஏற்படுத்துவதற்குமாக முன்னெடுக்கப்படுகின்றது. புது வருடத்தின் உணர்வானது கொண்டாட்டம் மட்டுமல்லாது அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான நிதி தொடர்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதுமாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

SDB வங்கி பற்றி

எதிர்காலத்துடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ள SDB வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான, 360 பாகையிலான ஆதரவை வழங்குகின்றது. SDB வங்கியானது, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளதும் BB + பிட்ச் மதிப்பீட்டைக் கொண்ட, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கியாகும். நாடளாவிய ரீதியில் உள்ள 94 கிளை வலையமைப்பின் ஊடாக, நாடு முழுவதும் உள்ள அதன் சில்லறை வணிக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை வங்கி வழங்குகிறது.

SDB வங்கியின் நெறிமுறைகளில் ESG கொள்கைகள் ஆழமாகப் பதிந்துள்ளதோடு, நிலைபேறான நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில் உறுதியான கவனத்தை அது செலுத்துகிறது. பெண்களை வலுவூட்டல் மற்றும் டிஜிட்டல் உள்ளீர்ப்பை ஊக்குவிப்பதில் முக்கியமான அர்ப்பணிப்பை வங்கி கொண்டுள்ளது.

 

தமிழ் சிங்கள புத்தாண்டு சம்பிரதாய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு புதியதொரு அர்த்தத்தை சேர்ப்பிக்கும் வகையில், மக்கள் வங்கி காலம் காலமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வந்துள்ளதுடன், இம்முறையும் புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு பரிசுகளை ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) திரு. ரீ.எம்.டபிள்யூ சந்திரகுமார அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“இலங்கையில் சாமானிய மக்களுக்கும் வங்கிச்சேவை வசதிகள் கிடைக்கப்பெறச் செய்தல் வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டம மக்கள் வங்கி, ஆரம்பத்திலிருந்தே மக்களுடைய சிந்தனைகளையும், விழுமியங்களையும் மதித்து செயல்பட்டு வந்துள்ளது. இலங்கையில் பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்துள்ள மக்கள் வங்கி, இலங்கையில் வங்கித்துறையில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை 1973 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி, இதனை முதலில் அறிமுகப்படுத்திய வங்கியாக சாதனை படைத்தது.

அன்றுதொட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் மக்கள் வங்கி இந்த புத்தாண்டு சம்பிரதாயத்தை தவறாது முன்னெடுத்து வந்துள்ளது. புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்காக வங்கிக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சியான பல்வேறு பரிசுகளை அது தற்காலத்தில் வழங்கி வருகின்றது. வங்கிச்சேவையை ஊக்குவித்து, மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தைத் தோற்றுவித்து, தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பதில் முன்னின்று செயல்படுவதே வங்கியின் பிரதான நோக்கமாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

“இந்த ஆண்டும், புத்தாண்டு சம்பிரதாய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பினை மக்கள் வங்கி உங்களுக்கு வழங்குகின்றது. அதற்கமைவாக, மக்கள் வங்கிக் கிளைகள் அனைத்தும் ஏப்ரல் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு திறக்கப்படுவதுடன், மக்கள் வங்கியின் வாடிக்கையாளர்களும், மக்கள் வங்கியின் பணியாளர்களும் தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாட இடமளிக்கும். ரூபா 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வைப்பில் இடுகின்ற வாடிக்கையாளர்கள் மதிப்புமிக்க பித்தளை விளக்கொன்றை பரிசாகப் பெற்றுக்கொள்வர்.

இதை விட, ஒவ்வொரு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைக்கும் நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளதுடன், வருகை தருகின்ற வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் அடையாளமாக பாற்சோறு மற்றும் பலகாரங்களும் பரிமாறப்படும். ஆகவே வழக்கம் போலவே புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 15 ஆம் திகதி மக்கள் வங்கிக் கிளைகளுக்கு வருகை தருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (09) அதிகாலை தாய்லாந்துக்கு விஜயம் செய்ய நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

அவருடன் 9 பேர் கொண்ட குழுவும் பயணத்தில் இணைந்து கொண்டு இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு புறப்பட்டனர்.

ராஜபக்ச குடும்பத்தினரால் இலங்கை திவாலான நாடாக மாற்றப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து திருடாமல் இருந்திருந்தால் நாடு திவாலாகியிருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

ராஜபக்ச குடும்பம் நாட்டை திவாலாக்கியது என்று நாட்டின் உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு பின்னர் அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை சீரழித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இஸ்லாமிய பள்ளிவாயல்கள் தொடர்பில் சிறிலங்கா காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும்  இராணுவத்தின் பாதுகாப்புப் படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 இஸ்லாமிய பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 5,580 காவல்துறை அதிகாரிகளும் 510 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 3,203 இஸ்லாமிய பள்ளிகளில், 1,260 ராணுவ வீரர்களுடன் 7,350க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.