web log free
September 20, 2024
kumar

kumar

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடிக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், சில வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வாடகைத் தொகை 2000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும், இவற்றில் இரண்டு வாகனங்கள் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு பத்திரிகை ஒன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இந்த வாகனங்களுக்கு ஜனாதிபதி செயலர்களே பொறுப்பு என்பதால், இது தொடர்பான முறைப்பாடு ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமரசிங்க, இந்த வாகனங்களை 2006 ஆம் ஆண்டு முதல் மூன்று ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த ஜனாதிபதிகள் வாகனங்களை பயன்படுத்தினார்கள், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது, வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம் செலுத்தாத காரணத்தால் செலுத்தப்படாத தொகைக்கு 3%, 4% மாதாந்திர வட்டி வசூலிக்க சம்பந்தப்பட்ட வாகன நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் ணணணமுன்னாள் ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள் என்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் அது முடியாத ஒன்று என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அதேசமயம் ஜனாதிபதித் தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வாக்குச் சீட்டு அச்சிடப்பட வேண்டும் என்றும் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இரு தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் வெவ்வேறு விதமாக கூட்டணி அமைக்கின்றன என்றார்.

"அத்தகைய தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் கூட்டணி பொதுத் தேர்தலில் பிரிந்துவிடும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வங்கி மற்றும் வணிக விடுமுறை என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சகம் வரையறுக்காததால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுமுறை தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பொது விடுமுறை என்று மாத்திரமே கூறப்பட்டுள்ளது.

இதனால் அன்றைய தினம் வங்கி மற்றும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்ற குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, 15 ஆம் திகதி விடுமுறை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் எதிர்வரும் 15 ஆம் திகதி வங்கி விடுமுறையா என்பதை அறிய நீங்கள் வர்த்தமானி அறிவிப்பை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் 200 கிலோ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கையின் பல நாள் மீன்பிடி படகுகள் ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தென் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில், போதைப்பொருளை ஏற்றிச் சென்ற 02 பல நாள் மீன்பிடி படகுகளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களும் அவர்களது போதைப் பொருட்களும் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானமையே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

நோயாளி சிகிச்சை பெற்ற வார்டின் நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், கோவிட் தொற்றுநோய் நிலைமை புறக்கணிக்கப்படும்போது இது மீண்டும் சான்றளிக்கப்பட வேண்டிய ஒரு தீவிரமான விஷயம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது, கோவிட் தொற்றுநோய் நிலைமையின் இயல்பான நிலையைக் கருத்தில் கொண்டு, இறக்கும் நோயாளிகளின் உடல்கள் தகனம் செய்யப்படாமல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், இதனால் நாட்டில் மீண்டும் கோவிட் வைரஸ் பரவும் அபாய நிலை இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் பங்களாவில் உள்ள அனைத்து அறைகளும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியாவில் நேரத்தை செலவிடுகின்றனர்.

எம்.பி.க்களுக்கு புத்தாண்டின் போது நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டு வரும் 24ம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் தொடங்கவுள்ளது.

இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பைசா கூட சம்பளம் பெற்றுக் கொடுக்காமல் சந்தா மாத்திரம் பெற்றுக் கொண்டு இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சம்பள உயர்வை பற்றி விமர்சிப்பது என்பது பசுத்தோல் போர்த்திய நரி போல உள்ளதாக முன்னாள் அமைச்சரும் இ.தொ.காவின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என்று சம்பள பேச்சுவார்த்தைக்கு செல்லாத கம்பனிகளை விமர்சனம் செய்யாமல், இ.தொ.கா சம்பள பேச்சுவார்த்தைக்கு செல்லாதது போல இ.தொ.காவை விமர்சிப்பது என்பது இவர் ஒரு மன நோயாளி போல காணக்கூடியதாக உள்ளது.

வேலுகுமார் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஒரு தொழிற் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் தோட்ட தொழிலாளர்களுக்காக இதுவரை 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்தது இல்லை என்பதை நினைக்கும் போது இவருக்கு வாக்களித்த மக்களை எண்ணி வேதனை அடைகிறேன்.

2015 முதல் 2019 வரை வேலுகுமார் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், அரசாங்கத்தில் எந்த அமைச்சு பதவிகளும் வேலுகுமாருக்கு வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது அமைச்சு பதவிக்கு ஆசைப்பட்டு தனது கட்சியின் கொள்கையை மீறி அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தும் அவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. அவருடைய தகுதி ஆராயப்பட்டே அவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

வேலுகுமார் பல முறை ஜானதிபதியை ரகசியமாக சந்தித்து , தனது ஆசையை நிறைவேற்ற முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை என்பதால், இ.தொ.கா அரசாங்கத்தில் பதவி வகிப்பதை கண்டு மன விரக்தியில் குழப்பி கொண்டிருக்கிறார். 

தோட்ட தொழிலாளர்களிடம் சந்தாவை பெற்றுக் கொண்டு, 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காத கட்சி தான் வேலுகுமார் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி. இதை மூடி மறைத்து விட்டு அன்று முதல் இன்று வரை இ.தொ.க பெற்றுக் கொடுத்த சம்பளத்தில் சந்தா பெற்றுக் கொள்கிறார்.

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் பல தொழிற்சங்க பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட்டுள்ளது. அதேபோல் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தொடர்ச்சியான சம்பள உயர்வு தொடர்பான ஊடக சந்திப்புகளின் போது, தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் நியாமான சம்பள உயர்வு கிடைக்கும் எனவும், அதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கான அனைத்து வேலைத்திட்டத்தை அன்று முதல் இன்று வரை அவர் செய்து வருகிறார்.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான சம்பள பேச்சுவார்த்தைகளின் போது அவருடைய பின்புலத்தில் இருந்த உயர்மட்ட குழுவில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன் ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு பிறகு அதே நிதானத்துடன் செயற்படுவதோடு சம்பளம் பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்காமல் செயற்படுகிறார். அவருடைய அரசியல் அனுபவத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பளம் பெற்றுகொடுப்பர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். 

இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்  சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறார். சம்பள நிர்ணய சபை கூடும் திகதியை அடிப்படையாக வைத்து 30 நாட்களுக்குள் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது அது 10 அல்லது 20 நாட்களுக்கு தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்தது ஒன்றும் உலக மகா குற்றம் கிடையாது.

அவ்வாறு இருக்கும் நிலையில், கடந்த காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இ.தொ.கா எதிர் கட்சியில் இருந்து போராடி கொண்டிருக்கும் போது, வேலுகுமார் ஆளும் கட்சியில் 5 வருடம் இருந்து 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்று கொடுக்கவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.

நான் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்,ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் பல கூட்டு ஒப்பந்தத்தில்,சம்பள பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டுள்ளேன். இ.தொ.கா ஒவ்வொரு சம்பள பேச்சுவார்த்தையின் போதும் கடுமையான வாக்குவாதம், போராட்டம் செய்தே சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்துள்ளது. இ.தொ.காவை பொறுத்த மட்டில் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போதிலும் அவர் முன்வைத்த 1000 ரூபாவை இ.தொ.கா பெற்றுகொடுத்தது. அதேபோல் தற்போது இ.தொ.கா முன்வைத்த கோரிக்கையை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும்.

வேலுகுமார் பெருந்தோட்ட கம்பனிகளின் தரகராக செய்ற்பட்டு, அதிக சம்பளம் தராத கம்பனிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை இ.தொ.கா மீது திசை திருப்ப முயற்சிக்கிறார். 10 பைசா வேலுகுமார் கம்பெனிகளுக்கு எதிராக எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் இவர் கம்பனிகளுக்கு கைகூலியாக செயற்படுவதை அவருடைய அறிக்கையில் வெட்டவெளிச்சமாக காண முடிகிறது.

கம்பனிகளுக்கு மறைமுகமாக கைக்கூலி வேலைப்பார்த்து கொண்டிருக்கும் 10 பைசா வேலுகுமாருக்கு இந்த பதில் போதுமானது என நினைக்கிறேன். பசுத்தோல் போர்த்திய நரியான 10 பைசா வேலுகுமார் தன்னை நியாமானவராக இனி வரும் காலநகளில் வெளிக்காட்ட கம்பனிக்கு எதிராக இனி அறிக்கை வெளியிடுவார். வேலுகுமாரின் போலி நாடகம் இனி அரங்கேராது என தெரிவித்துள்ளதோடு என்னுடைய அரசியல் அனுபவத்தில் பாதியே வேலுகுமாரின் வயது. இவரை போல் பல கம்பனிகளின் கைகூலிகளை எனது வாழ்நாளில் சந்தித்துள்ளேன் எனவும்,வெறும் செயல் இன்றி வாயலே தனது வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அமைதி வழியில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

2022 மார்ச் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நடைபெற்ற 30 போராட்டங்களில், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிக பலத்தை பிரயோகித்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. 

சட்டவிரோத பலவந்த பிரயோகத்திற்கு காரணமான அதிகாரிகளை நேரடி விசாரணைக்கு உட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை அவசரமாக மீளாய்வு செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை , சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தினார்.

தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்புப் பத்திரமே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.

புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், புத்தாண்டில் வேலைக்குப் புறப்பட்டு செல்லுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கான சுப நேரங்கள் மேற்படி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.