காணி விடுவிப்பு விவகாரங்களை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில் பதிலளித்த அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் 13ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே எமக்கும் அந்த சிக்கல் இருக்குமென தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஆவேசப்பட்ட சம்பந்தன், மேசையில் ஓங்கி அடித்து 13ஆம் திருத்தச் சட்டத்தை கூட முழுமையாக அமுல்படுத்த முடியாவிட்டால் நாங்கள் ஏன் பேச வேண்டும், அரசாங்கம் எமது பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பயனில்லை. நாம் எமது வழியில் பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதை அமுல்படுத்த முடியாதென நாம் தெரிவிக்கவில்லை. அதிலுள்ள சில முரண்பாடுகளையே குறிப்பிட்டோம். அதிகாரப்பகிர்வு குறித்து முரண்பாடுகளை நாமும் உருவாக்க விரும்பவில்லை. முழுமையான அதிகாரப்பகிர்விற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலங்காலமாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்து வருவதால் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
'இருண்ட எதிர்காலத்தை ஒளியேற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாட்டில் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் 43ஆவது பிரிவின் பிரதிநிதிகள் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அனுமதியுடன் கலந்துகொண்டனர்.
இது சம்பிக்க ரணவக்கவின் சமீபத்திய மற்றுமொரு அரசியல் பாய்ச்சல் என்பதையே காட்டுகிறது. சம்பிக்க ரணவக்கவின் சரித்திரமே இவ்வாறான அரசியல் மாற்றங்கள் நிறைந்ததாகவே தெரிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கரு பரணவிதான, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, ஊடகப் பிரிவின் பிரதானி தனுஷ்க ராமநாயக்க உள்ளிட்ட 43ஆவது பிரிவின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கடந்த 15ஆம் திகதி சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சம்பிக்க ரணவக்கவும் தீவிரமாக கலந்துகொண்டார். இதற்காக அவரது 43வது பிரிவின் துருப்புகளும் ஈடுபடுத்தப்பட்டன.
காலத்துக்கு காலம் அரசியலை மாற்றும் சம்பிக்க ரணவக்க மற்றுமொரு அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது.
1994 இல், அவர் சிஹல உறுமய (JHU) என்ற அமைப்பை உருவாக்கினார். 2001 தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றதுடன் அந்த ஆசனத்திற்காக கட்சிக்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டன.
அதன் பின்னர் சோம தேரரின் பிரபல்யம் என்ற போர்வையில் சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்தி சம்பிக்க ஹெல உறுமயவல உருவாக்கினார்.
நாட்டின் பல பிரபலமான துறவிகள் 2004 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தர்ம அரசை உருவாக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
நகர்ப்புறங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப் பெற்றனர். அங்கும் பெற்ற ஆசனங்களால் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும், ரணில் மற்றும் மைத்திரியின் நல்லாட்சியிலும் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்த சம்பிக்க ரணவக்க, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சஜித் பிரேமதாசவுடன் இணைந்துகொண்டார்.
கடந்த 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்திலும் சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டார்.
லங்கா IOC நிறுவனம் இன்று (25) நள்ளிரவு முதல் அனைத்து வகை பெற்றோலின் விலையை லீற்றர் ஒன்றிற்கு 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
விலைகளையும் இன்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில், அனைத்து ரக பெட்ரோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் 303 ரூபாவாகும், 95 ஒக்டேன் ரக பெட்ரோல் 332 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், நிதியமைச்சு மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"நுகர்வோர் அன்றாட தேவைக்கு அதிகமாக அதிக எரிபொருளை பயன்படுத்துகின்றனர் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மின்சார சபைக்கு 2,000 மெற்றிக் தொன் டீசல் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்திய கடனின் கீழ் மற்றுமொரு எரிபொருள் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம். எனவே டீசல் தட்டுப்பாடு ஏற்படாது. நாளாந்தம் தேவையான எரிபொருளை மாத்திரம் பெற்றுக்கொள்வதில் மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை. அதன்படி மின்சாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுப்போம். நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
கேள்வி - எரிபொருள் விலையில் மாற்றம் வருமா?
"இல்லை, தற்போதைய சூழ்நிலையில், விலையில் விரைவான வீழ்ச்சியை எதிர்பார்ப்பது கடினம். உலக சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அதைப் பற்றி யோசிப்போம். அந்த நிவாரணத்தை மக்களுக்கு எப்படி கொடுக்க முடியும் என்று.
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை ,கொழும்பு ஹைட் பார்கில் ஆரம்பமானது.
கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமான இப்போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர்.
‘நாட்டை மீட்டெடுப்போம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த அறவழி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக இன்று பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி டொலர் டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபா 95 சதமாகவும் விற்பனை பெறுமதி 391 ரூபா 25 சதமாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 44 சதமாக பதிவாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
அத்தோடு, வடக்கு கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இன்னல்கள் தொடர்பிலும் தன்போது ஜனாதிபதிக்கு கூட்டமைப்பினர் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
போதிய எரிபொருள் மற்றும் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் தற்போது ஆறரை மணிநேரமாக நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு அடுத்த வாரத்திற்குள் 10 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொருத்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.