web log free
December 07, 2025
kumar

kumar

1999ஆம் ஆண்டு இருவரைக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் உறுப்பினர் முஹந்திரம்கே ஹசித சமந்த என்ற சர்பயாவை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கை நிரூபிப்பதில் அரசு தரப்பு சாட்சியம் நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி மேலும் குறிப்பிட்டார்.

1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் வாகனத்திற்குள் இருந்தபோது சுட்டுக் கொளுத்தியஐ.தே.கவின் மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் நந்தசேன மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் துஷார தீபால் ஆகியோருக்கு எதிராக கொலை செய்த குற்றத்திற்காக ஹசித சமந்த என்ற சர்பயா மீது பிரிவு 296 இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் தர்ஷன குருப்பு ஆஜரானார்.

சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்

திஸ்ஸமஹாராம, ஜுல்பல்லம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெற்றோல் வரிசையில் மக்கள் குழுமியிருந்த வேளையில், பெற்றோல் வந்தவுடன் மற்றுமொரு வரிசை ஆரம்பிக்கப்பட்டு, பெற்றோல் எடுக்கச் சென்ற போது, ​​முன் வரிசையில் நின்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், மோதல் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாளை (21) பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அவருக்கு பலம் வாய்ந்த அமைச்சர் பதவி வழங்கப்படும்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் தனியார் துறை ஊழியர்களை வேலைக்கு அமர்த்துமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிறுவனங்களின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுமுறை பயணங்கள் உட்பட அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அமைச்சர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக தனியார் துறையினர்  அதிகாரிகளை அலுவலகங்களுக்கு அழைப்பதற்குப் பதிலாக, அவர்களை இணைய வழியில் கடமையில் அமர்த்துமாறும் கோருவதாக விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை லொரியில் ஏற்றி பொலீசார் கைது செய்தனர்.

அவர்களில் ஒரு பௌத்த துறவியும் நான்கு பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்ததுள்ளதுடன் மற்றுமொரு நுழைவாயிலையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறைந்துள்ளனர். 

தற்போதுள்ள எரிபொருள் வரிசையை மூன்றில் இரண்டு பங்காக குறைப்பதற்கு கடுமையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொழில்முறை முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த  அனைத்து தனியார் வாகனங்களுக்கும் இலக்கத் தட்டில் உள்ள கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருள் நிரப்புவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் தற்போதுள்ள வரிசைகளில் மூன்றில் இரண்டு பங்கு குறையும் என்றும் அவர் கூறினார்.

களுத்துறை மீகஹதென்ன பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

டில்லியில் பிரகதி மைதான மறுவளர்ச்சி திட்டப்படி ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய 920 கோடியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன.

இதற்கான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிரதான சுரங்கப்பாதை மற்றும் 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் மோடி, சுரங்கப்பாதையை நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிதறி கிடந்த குப்பைகள் மற்றும் பாட்டீல்களை எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டார்.

அது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல.

சுற்றுப்புறங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மோடி, கடந்த 2019ம் ஆண்டு மாமல்லபுரத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்கு கிடந்த பிளாஸ்டிக் பாட்டீல்கள், தட்டுகள் மற்றும் குப்பைகளை அகற்றினார்.

தூய்மை பாரத இயக்கம் அல்லது நமாமி கங்கா திட்டத்தில் தூய்மைக்கு பிரதமர் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

தூய்மையை வலியுறுத்தி கடந்த 2014 அக்.,2 ல் தூய்மை பாரத இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில், முக்கியமாக ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பறை கட்டுதல், பொது இடங்களில் கழிப்பறை மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

 

வத்தளை வெலிகடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்த வத்தளை பொலிஸார், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கிகளில் இரண்டு டபுள் பீப்ரல் துப்பாக்கிகள், ஒரு பீப்பாய் துப்பாக்கி மற்றும் 22 துப்பாக்கி ரவைகள் இருந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.

வீட்டில் துப்பாக்கிகளுடன் 59 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd