web log free
January 21, 2026
kumar

kumar

அமெரிக்க தூதரகத்தின் பெண் அதிகாரியின் தயவில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பான முறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சவேந்திரசில்வா தனது பணிகளை செய்து வருவதுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கோட்டாபயவிற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்து பல அறிக்கைகளை வெளியிட்டு தனது வேலையை திறமையாக செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை படையினர் தனது கடமைகளை சரிவர செய்ய தவறும் பட்சத்தில் அமெரிக்க படைகளை இலங்கையில் களமிறக்கவும் ரணில் தயங்கமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி நாட்டிற்கு மூன்று டீசல் கப்பல்களும் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் ஒன்றும் வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அடங்கிய மூன்று டீசல் கப்பல்களும் 35 ஆயிரம் மெட்ரின் தொன் ஏற்றிய ஒக்டேன் 92 ரக பெற்றோல் கப்பல் ஒன்றும் இலங்கையை வந்தடையவுள்ளன.

சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்காக எதிர்க்கட்சிகள் பரிந்துரைக்கவுள்ள பெயரை நாளையதினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபாநாயகருக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டளல் அழகப்பெருமவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துக்கொள்ளவில்லை

போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ள கோட்டையின் மேல் தளம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
போராட்டக்காரர்கள் பிடிபட்டதையடுத்து அங்கு ஏராளமானோர் பயணித்ததே இதற்குக் காரணம் சாலிடர் வரை செல்லும் மரக்கட்டைகளின் பகுதிகளும் உடைந்துள்ளன.இந்த மாளிகையை ஆய்வு செய்த தொல்பொருள் திணைக்களம், பல தொல்பொருட்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் வகையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சிறப்பான வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

அந்த அமைச்சுக்கள் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சுக்களின் கீழ் இருந்தன.
புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, அந்த நிறுவனங்கள் பதில் ஜனாதிபதி ,பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வரும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதி செயலாளரால் சபாநாயகருக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் விரைவில் அதனை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் கஞ்சா அருந்திக்கொண்டிருந்த செயற்பாட்டாளர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நீச்சல் தடாகத்திற்கு அருகில் மறைந்திருந்து கஞ்சா அருந்திய போதே கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து அபுதாபிக்கு செல்வதாக தான் பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த போராட்டம் இன்னும் சில காலம் நீடித்தால் கோட்டாபய ராஜபக்ச இரண்டு வருடம் இலங்கைக்கு செய்த வீழ்ச்சியை இந்த போராட்டக்காரர்கள் ஒரு வருடத்தில் செய்து விடுவர் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கோட்டாபய ராஜபக்ச இரண்டு வருடம் இலங்கைக்கு செய்த வீழ்ச்சியை இந்த போராட்டக்காரர்கள் ஒரு வருடத்தில் செய்து விடுவர்கள்

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப்படையினருக்கு, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்த, தனது மக்களையும், பொதுச் சொத்துக்களையும், நாட்டையும் பாதுகாக்கும் வகையில் அதனைப் பராமரிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இராணுவ ஊடகம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் உடனடியாக விலகிக்கொள்ளுமாறும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் இராணுவம் தங்களது பலத்தை பிரயோகிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கொழும்பு மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd