web log free
September 02, 2025
kumar

kumar

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் பதவி விலகும் நோக்கில் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் இருந்ததால் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தாமாக முன்வந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் நீக்கம் செய்துள்ளதால் ஆட்சியை தக்க வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

தன்னை விமர்சிப்பவர்கள் எதிரிகள் அல்ல என்றும், பொறுமையாக பணியாற்ற வேண்டும் என்றும், அரசியல் சகிப்புத்தன்மை குறித்து பிரதமரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

தங்களின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று முதல் அமுலாகும் வகையில் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

மோசமான அழிவை நோக்கிய பயணத்தில் தேசிய சுதந்திர முன்னணி தொடர்ந்தும் இணைந்து பயணிக்க முடியாது என்பதை தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியிலிருந்து விலக தீர்மானித்ததாகவும் ஜயந்த சமரவீர சுட்டிக்காட்டினார்.

பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, இன்று பகல் மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாணவியின் சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலி எல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘ஹிருணிகா ஒரு இரும்புப் பெண். அவள் குண்டர்களுக்கு பயப்படவில்லை. ஜனாதிபதி வீட்டின் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். ஹிருணிகாவின் வீட்டின் மீது மலக் கழிவு கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இப்போது மொட்டில் இருந்து மலசல துர்நாற்றம் வீசுகிறது.' என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார்.

இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும், சாம் பாம்பே என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார். 

பூனம் பாண்டே கூறும்போது, “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்’’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மார்ச் மாத இறுதிப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தயாராகியுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருடனான தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (08) மோதல் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்னால், சமகி ஜன பலவேகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டததை அடுத்து , இன்று பாராளுமன்றத்தில் குழு மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் ,

அமைச்சர் பதவியில் இருந்து விமல வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இன்று முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு வரவுள்ளதாகவும் . மகிந்த ராஜபக்சவை அவமதிக்கும் வகையிலும் சவால் விடுக்கும் வகையிலும் விமல் வீரவங்ச நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ஆத்திரமூட்டும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலைகளில் ஒன்று இன்று சபையில் காரசாரமான விவாதமாக மாறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் டொலரின் விற்பனை பெறுமதியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், 8 மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர்.

பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்களை அச்சுறுத்திய 2 காவலர்கள் பெண்களால் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தின் நிமித்தம், மன்னர் லூயிஸ் பிலிப் பதவியிலிருந்து விலகினார்.

இதனை அடுத்து பிரான்ஸ் பெண்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஐரோப்பா முழுவதும் ஆதரவு பெருகியது. ஜேர்மன், ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனை அடுத்து பிரான்ஸில் ஆட்சி அமைத்த லூயிஸ் பிளாங், பெண்களை அமைச்சரவை ஆலோசனை குழுவில் இணைத்ததுடன், அவர்களுக்கு வாக்குரிமை வழங்கவும் இணங்கினார்.  இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 1848 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்றது.

அதன் பின்னர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இடம்பெற்ற பெண்களின் புரட்சிகளைக் கருத்தில் கொண்டு, மார்ச் மாதம் 8ஆம் திகதியைச் சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

இந்தநிலையில், வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றைப் பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருவதாக மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நிலையான சமுதாயத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கருணை, ஆளுமை ஆகியவற்றைப் பகிரும் ஒரு பெண்ணின் பெருமையை ஒரு நாளுக்கு மட்டும் வரையறுக்க முடியாது. மனித இனத்தை மாற்றிய அனைத்து தீர்க்கதரிசிகளின் பிறப்பு முதல், மனித இருப்பை அடையும் வரை அனைத்திற்கும் பெண்தான் காரணம் என்பது இரகசியமல்ல.

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றைப் பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.  இந்த தைரியமான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்.

நிலையான எதிர்காலத்திற்கு இன்று பாலின சமத்துவம்  என்ற சர்வதேச எண்ணக்கருவின் கீழ் கொண்டாடப்படும் இந்த முறை சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாகுபாடுகளும் இலங்கை சமூகத்திலிருந்து துடைத்தழிக்கப்படும் தினத்தை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு, இம்மாத இறுதியில் விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க உள்ளார்.

அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை உள்ளிட்டவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீண்டகாலமாக நல்ல நட்புறவு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறது. ஒத்துழைப்புஇந்நிலையில், இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதிலிருந்து விடுபட, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை கோரியுள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். வரும் 30ம் திகதி கொழும்பில், 'பிம்ஸ்டெக்' எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, 31ம் திகதி யாழ்ப்பாணம் செல்கிறார்.


அப்போது, அந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். தமிழர்களின் நலன், அதிகரித்து வரும் பயங்கரவாதம், சீனாவுடனான இலங்கையின் நெருக்கம், இந்திய மீனவர்கள் பிரச்னை மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை உள்ளிட்டவை குறித்து மோடி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி, இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாக இது அமைய உள்ளது. ஆலோசனைதற்போதுள்ள சூழ்நிலையில், இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக அமைய உள்ளது. இதையடுத்து, பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. டில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை துாதர் மிலிந்த மொரகொட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதைத் தொடர்ந்து, இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். அடுத்து, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பைரிஸ், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கிடையே, இலங்கை துாதர் மிலிந்த மொரகொட, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை சமீபத்தில், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கலாசார ரீதியில் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து பேசப்பட்டது. மேலும், கடும் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவியையும் அவர் கோரியதாக கூறப்படுகிறது. அதனால் பிரதமர் மோடியின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மீண்டும் புதுப்பித்து கொள்ளவும், வலுப்படுத்தவும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- புதுடில்லி நிருபர் -

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd