web log free
May 12, 2025
kumar

kumar

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை கட்சியில் இருந்து நீக்குவதை தடுத்து கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நேரம் மற்றும் திகதியை முன்கூட்டியே பதிவு செய்து கடவுச்சீட்டுக்களை வழங்கும் முறை இன்று (28) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக வருகை முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய முறையின் மூலம் நாளொன்றுக்கு 750 கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையினால் நேற்று (27) காலை குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக திரண்ட பெருமளவான மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதன் காரணமாகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திரண்ட உணவு, மலசலக்கூடம் உள்ளிட்ட வசதிகளின்றி நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் காரணமாக இந்த கட்டுப்பாடு அவசியமானது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

இதன்படி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றிடமிருந்து விலை மனு பெறப்பட்டுள்ளதாகவும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முடிவுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் வந்து தங்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சீனா இடையே தற்போது உறவு சுமூகமாக இல்லை. நில எல்லை பகுதியில் சீன ராணுவம் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இலங்கை துறைமுகங்களுக்கு சீன போர்க் கப்பல்கள், உளவு கப்பல்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. இதற்கு இலங்கை அரசிடம், இந்தியா ஏற்கெனவே தனது அதிருப்தியை தெரிவித்தது. ஆனாலும், சீன போர்க்கப்பல்கள், இலங்கை துறைமுகம் வர அந்நாட்டு அரசு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் கடந்த திங்கள் கிழமை காலை சென்றது. அந்த கப்பலுக்கு இலங்கை கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் ஹெஃபே, வுசிஷான், கிலன்சான் ஆகியவையும் சுமார் 1,500 கடற்படை வீரர்களுடன் கொழும்பு துறைகத்துக்கு வந்தன. அவற்றுக்கும் இலங்கை கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுமுக உறவு இல்லாத இருநாட்டு போர்க்கப்பல்களும் ஒரே துறைமுகத்தில் வந்து தங்கியதால் அங்கு சலசலப்பான சூழல் நிலவியது. இந்தியா, சீன கடற்படை கப்பல்களுடன் இலங்கை கடற்படை நாளை தனித்தனியாக கூட்டுப் பயிற்சியும் மேற்கொள்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மாலத்தீவு சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்ததால், அங்கிருந்த ராணுவத்தை இந்தியா திரும்ப பெறும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இலங்கை துறைமுகத்துக்கும் சீன கப்பல்களின் வருகை அதிகரித்து வருகிறது. இலங்கை வந்துள்ள 3 சீன போர்க்கப்பல்களையும் இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த கப்பல்களின் நடமாட்டம் முன்பு எப்போதும் இல்லாத அளவில் நீடித்துள்ளது.

இந்திய கடற்படையில் 140 போர்க்கப்பல்கள் உள்ளன. ஆனால், சீனா 360 போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களுடன் உலகின் மிகப் பெரிய கடற்படையாக உருவெடுத்து வருகிறது.

தென் கொரியாவில் சுரங்கத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கைப் பெண்களுக்கும் கிடைத்துள்ளது.

கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற 120 பேர் கொண்ட குழு கொரியாவுக்குச் சென்றதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர், தென்கொரிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு இந்த தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

ஜே.வி.பி.யின் மாத்தறை மாவட்ட தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரேமசிறி மானகே, சமகி ஜன பலவேகவில் இணைந்துள்ளார்.

ஜே.வி.பி ஆளும்கட்சியாக இருந்த போது சக்திவாய்ந்த அமைச்சராகவும் பணியாற்றினார்.

அந்த முன்னணியின் தீவிர உறுப்பினரான பிரேமசிறி மானகே ருஹுனு பல்கலைக்கழகத்தில் பட்டதாரியும் ஆவார்.

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே கே. பியதாச தான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக கூறுகிறார்.

ஹட்டனில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கே. கே. பியதாச மேலும் கூறியதாவது:

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வியாபாரியாக அரசியலில் பிரவேசித்து, மத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய என்னால் இயன்றதை செய்தேன், ஆனால் இந்த வருட ஜனாதிபதித் தேர்தல் இந்த மாவட்டத்தில் இன்னும் செய்ய வேண்டியவைகள் ஏராளம் நாட்டின் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் எனவே இந்த நாட்டின் அனைத்து வாக்காளர்களும் மிகவும் கவனமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நாட்டின் எதிர்காலம் அழிந்துவிடும் எனவே இந்த தேர்தலில் போட்டியிடும் நான் உட்பட அனைத்து வேட்பாளர்களையும் கவனமாக பார்த்து பொருத்தமான நபருக்கு வாக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன். 

எஞ்சியுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களாக திரு.சஜித் பிரேமதாச அல்லது திரு.அநுர திஸாநாயக்க முன்வைக்கும் கொள்கைகளால் ஒரு நாடு முன்னேற முடியாது என காலி ஊதுகுழல் போராட்டத்தின் முன்னணித் தலைவராக இருந்த கலாநிதி பாத்தும் கேர்னர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதார நெருக்கடியை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளதாகவும் திரு.விக்கிரமசிங்க தனது அனுபவத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தை நிர்வகித்தமை பாராட்டப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திரு.சஜித் பிரேமதாசவுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும், தான் அமைச்சராக இருந்தபோதும் நிர்வாகத் திறனைக் காட்டவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தேசிய மக்கள் படையின் தற்போதைய அலை ஒரு பேரழிவு நிலை என்று தோன்றுவதாகவும் அவர்கள் நாட்டை நிர்வகித்தால் நாடு தவறான பாதையில் செல்லும் என்றும் அவர் கூறுகிறார்.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை நாளை (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி முடிவடைந்ததுடன், அதன்படி மூன்றாம் பாடசாலை தவணை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd