கலவானை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது கல்லூரி ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பாடசாலையில் 9ம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவரே கசிப்பூ விற்றுள்ளார்.
குறித்த மாணவன் இந்த கசிப்புகளை தண்ணீர் போத்தலில் எடுத்து பின்னர் கப்பில் போட்டு உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு மேலும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் புதிய உறுப்பினர்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இவ்விடயங்கள் தொடர்பில் கட்சியின் அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் இணைந்த புதிய எம்.பிக்கள் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலைமைகளின் அடிப்படையில் எதிர்வரும் தேசியத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (செப். 20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) துபாயில் இருந்து செயல்படும் பிரபல குற்றவாளியான ‘மன்னா ரமேஷுக்கு’ துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்ட அந்த பத்திரிக்கையாளர் ரகசிய தகவலை வழங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகளால் நேற்றிரவு மீகொட பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த ஊடகவியலாளர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் அவர் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.
‘மன்னா ரமேஷ்’ என்பவர் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பல தடவைகள் பணத்தை வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் வழங்கிய ஊடகவியலாளர் மூவரும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளரை 72 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ள அதேவேளை, ஏனைய மூன்று சந்தேகநபர்களை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று இரவு 11.20 அளவில் புத்தல பகுதியில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.4 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதி கையொப்பமிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழுவிடம் இன்று கையொப்பம் இடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவும், கல்வி துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டில் கென்ய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் டோகாவிலிருந்து நேற்று(24) இலங்கைக்கு வந்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
சந்தேகநபர் 03 பிஸ்கட் டின்களில் பொதி செய்யப்பட்ட 4 கிலோகிராம் கொக்கெய்னை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
34 வயதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருட்களுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொஹொட்டுவவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் திடீரென சந்தித்து இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அவ்வாறு இல்லை என்றால் நிமல் லான்சா உள்ளிட்ட அணியினரின் ஆதரவு தமக்கு இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு வந்ததையடுத்து, அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்தவர்களும், மீள்திருத்தம் குறித்து பேசப்படும் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களும் உறுப்பினர்களை அழைக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 08.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் EK-650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G-77 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, பின்னர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி, மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சந்தேகத்தில் பிரதான நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று (23) கைது செய்துள்ளனர்.
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 08.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக "அத தெரண" விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G-77 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, பின்னர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.