web log free
November 20, 2025
kumar

kumar

கலவான, தெல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கெஹெல்பத்தர பத்மே இந்தச் சந்தேகநபரான சட்டத்தரணிக்கு லட்சக்கணக்கான பணத்தை கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சட்டத்தரணியின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

சந்தேகநபரான சட்டத்தரணி கடந்த ஜூன் மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் வழியாக துபாய் சென்று திரும்பியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவர் அவ்வப்போது வாடகைக்கு வீடுகளைப் பெற்று தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

புதிய சிந்தனைகளைக் கொண்ட உண்மையான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சக்தி ஒன்று திரட்டப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.

அந்த நோக்கத்தை மனதில் கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராக வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள பேரணியை தனது கட்சி ஆதரிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

நாட்டில் உள்ள பிற பிரச்சினைகளை மறைக்க தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர், செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதை காட்டுகின்ற முகமாகவும் இன்றையதினம் செம்மணி பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று மக்களின் கண்ணீருக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி புதைக்குழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தின் வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக செம்மணிச்சந்தி வரை சென்றது.

பின்னர் உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலிக்காக செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு தூபியடியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பிற்பகல் இரண்டு மணி வரை பாடசாலை நேரங்கள் நீடிக்கப்படவுள்ளதால், சிறப்பு ஏற்பாடுகளில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 02 மணி வரை நீடிக்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இதற்கமைய, மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலைகளின் புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் ஐந்து முதல் தரம் 13 வரையான அனைத்து வகுப்புகளுக்கான நேரமும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படுவதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின் கீழ் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கை, மேலும் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவித்து நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட வழக்கு ஒன்றில் அவர் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், நீதவான் இசுரு நெத்திகுமார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்திற்கான அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

நீதிமன்றத்தில் ஜகத் மனுவர்ண சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், காணிப் பகிர்ந்தளிப்புக்கான தேசிய நிகழ்வொன்றில் தமது சேவை பெறுநர் கலந்துகொண்டமையால் இன்று நீதிமன்றில் அவரால் ஆஜராக முடியவில்லை என்று சுட்டிக்காட்டினர். 

எவ்வாறாயினும், விடயங்களைக் கருத்திற்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சந்தேக நபருக்குப் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

கணேமுல்ல சஞ்சீவவை படு செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை வழங்கிய சட்டத்தரணியை  மேலும் விசாரிக்க சிஐடி 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.

குறித்த பெண் சட்டத்தரணி நேற்று இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இதன்படி, வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி, கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 

பின்னர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, முன்னாள் ஜனாதிபதியை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை இன்றைய தினம் (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

நாட்டில், கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, தங்கத்தின் விலை அண்மைக் காலமாக வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

இதன் பிரகாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக நேற்று (28) பதிவாகியிருந்தது.

நாட்டில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 80,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 17 ஆம் திகதியன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 379,200 ரூபாவாக இருந்தது.

இதற்கிடையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் தங்கம் இன்று 322,00 0 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Page 7 of 586
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd