web log free
April 27, 2024
kumar

kumar

சர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரும் சந்தேகநபர்களும் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், 10ஆம் மற்றும் 11ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பொலிஸாரின் வீதித் தடையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், பொலிஸாருக்கு பதிலடி கொடுத்த மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கை விமானப்படை வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஹொரண தல்கஹவில பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குறித்த நபர் பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரான நிமல் சிறிபாத சில்வா அழைப்பில் இன்றைய தினம் (08) நடைபெறவுள்ள அரசியல் பீடக் கூட்டம் சட்டரீதியாக நடைபெறாது என கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அரசியல்பீட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் தலைவருக்கு மாத்திரமே உண்டு எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் சிரேஷ்ட உபதலைவர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் பெறப்பட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் தற்போது அந்த பதவியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு மாவனல்லை பதியதொர பிரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க முற்பட்ட 53 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பதியதொர பிரதேசத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் மாவனெல்லை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, நிலைமையை ஆராய்வதற்காக அதிகாரிகளை அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில், தகராறில் ஈடுபட்ட ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.

பதிலுக்கு, மற்றொரு அதிகாரி, அமைதியை மீட்டெடுக்க எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினார். எவ்வாறாயினும், தாக்குதலாளி அதிகாரியைத் தாக்க முயற்சித்து அச்சுறுத்தலைத் தொடர்ந்தபோது, அதிகாரி மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதன் விளைவாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் தந்தை படுகாயமடைந்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நபரே மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு காரணமான சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நிலவும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக எதிர்வரும் புத்தாண்டின் பின்னர் நாட்டில் பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதலில் பொதுத் தேர்தலை நடத்த விரும்பினாலும், முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை என்றால், பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் முன்மொழிவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும், அக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொதுஜன பெரமுன செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர் குழு கருத்து வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சுப் பதவிகளை வகிக்காத பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று, கட்சியின் வேலைத்திட்டத்தினால் ஏமாற்றமடைந்து, எதிர்காலத்தில் எதிர்க்கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குழுவொன்று கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டோர் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்து ஜனாதிபதிக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அதிக பணவீக்கம், மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த நடுத்தர வருமானம் பெறும் வறுமைக் கோட்டான ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு லட்சமாகவும், அடுத்த ஆண்டு மூன்று லட்சமாகவும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால நேற்று மாலை மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  

கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன கோப்புகளில் அக்கட்சியின் நிர்வாகம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள் உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த முறைப்பாடு தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவுக்கு அழைப்பு விடுக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா தவிர்ந்த, சட்டரீதியாக அழைக்கப்படக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கச்சத்தீவு இலங்கையின் கடுப்பாட்டுக்குச் சென்ற விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை என இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைக் குறிப்பிட்டார்.

கன்னியாகுமரிக்கு அருகாமையிலுள்ள வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா தனது நலன்களை கருத்திற் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் மீனவர்களுக்கும், கடல் தொழில் செய்பவர்களுக்கும் அதிக வளங்களை கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதியை எதிர்காலத்தில் இலங்கை உரிமை கோரக்கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா கையகப்படுத்தி இருக்கலாம் என தான் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க இடமளிக்க முடியாது என இலங்கை மீனவர்களும் கூறுகச்சத்தீவு பகுதியை காங்கிரஸ் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குக் கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

"கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரஸை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது," என பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதி இதனை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், கச்சத்தீவு விவகாரம் பாரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இலங்கையிலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (வியாழன், ஏப்ரல் 4) பதிலளித்தார்.

அப்போது அவர், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்ற வாத பிரதிவாதங்கள் இருக்கின்றது என்றும், இவை தேர்தல் காலகட்டங்களில் மேலெழுகின்றன என்றும் கூறினார்.

“1974-ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்திய அரசும் செய்த ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள் இலங்கைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடலுக்குள்ளும் போய் தொழில் செய்யலாம் என்று இருந்தது. பின் 1976-ஆம் ஆண்டு அது தடுக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதும், இலங்கை மீனவர்கள் இந்தியாவிற்குள் செல்வதும் தடுக்கப்பட்டிருந்தது,” என்றார்.

மேலும், “அதேபோல இந்த வாட்ஜ் பேங்க் என்று ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுமரிக்கு கீழ் அதிக வளங்களை கொண்ட பெரிய பிரதேசமாக இருக்கின்ற ஒரு பகுதி. அதாவது கச்சத்தீவை போல 80 மடங்குக்கு மேற்பட்ட ஒரு பிரதேசம். அந்த பிரதேசம் 1976-ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்டு, அவர்கள் அதனை உள்வாங்கிக் கொண்டார்கள்,” என்றார்.

அதிக வளங்கள் உள்ள பகுதி வாட்ஜ் பேங்க் என்றபடியால், இலங்கை மீனவர்கள் அங்கு தொழில் செய்வதைத் தடுக்கும் நோக்கில், எதிர்காலத்தில் இலங்கை அப்பகுதிக்கு உரிமை கோரிவிடக்கூடாது என்ற ஒரு உள்நோக்கத்துடன் தான் அது செய்யப்பட்டதாக தான் கருதுவதாக அவர் கூறினார்.

மேலும் “கச்சத்தீவை திருப்பி கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை," என டக்ளஸ் தேவானந்தாஇந்நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க முடியாது என இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணத்திடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''கச்சத்தீவு என்பது எங்களுடைய தீவு என்பதே முடிவு. அது சம்பந்தமாக இந்தியாவில் கதைக்கின்றார்கள் என்றால், முழுமையாக அரசியல் நோக்கமாக தான் கதைக்கின்றார்கள். அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இது பற்றிய கதை வருகின்றது,” என்றார் நற்குணம்.

“இந்திரா காந்தி அம்மையார் இருந்த நேரம் 1974-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம். அதனூடாக [கச்சத்தீவு] இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்திற்கு மாநில தரப்பு பெற்றுத்தருவதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்று,” என்றார்.

மேலும், “இந்திய வெளிவிவகார அமைச்சர்கூட சொல்லியிருக்கின்றார், இந்திய டோலர் படகுகள் எல்லை தாண்டிப் போவது குற்றம். கச்சத்தீவு பகுதிக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்வது என்பது சட்டப்படி குற்றம்,” என்றார்.

மேலும், வாக்கு அரசியலுக்காகவே இது இந்தியாவில் பேசுபொருளாகியிருக்கிறது என்று அவர் கூறுவாட்ஜ் பேங்க் பகுதி குறித்தும் நற்குணம் தனது கருத்தை வெளியிட்டார்.

''அந்த பிரதேசங்களில் நல்ல மீன் வளம் இருக்கின்றது. வாட்ஜ் பேங்க் என்ற பகுதிக்குள் நாங்களும் தொழில் செய்யக்கூடிய வகையிலான சட்ட அமைவு தான் இருக்கின்றது. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் அந்த பாரிய கடல் பிரதேசத்தை தாங்கள் எடுத்துக்கொண்டு, கச்சத்தீவு பகுதியை வழங்கினார்கள்,” என்றார் அவர்.

“கச்சத்தீவு சட்டப்படி எங்களுடையது. கச்சத்தீவை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களிடமும் சர்வதேச கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்யும் வகையிலான படகுகள் இருக்கின்றது. அதைக் கொண்டு வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் சென்று நாங்களும் மீன்பிடிக்க எத்தனிக்கலாம். அப்படியொரு கட்டத்திற்கு மாற வேண்டிய நிலைமையும் எங்களுக்கு ஏற்படும். அப்படியொரு தேவைப்பாடு எங்களுக்கு ஏற்படுகின்றது. கச்சத்தீவை வலியுறுத்தினால், நாங்களும் வாட்ஜ் பேங்க் பகுதியை வலியுறுத்தும் நிலை வரும்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.கின்றார். கூறினார்.கியுள்ளது.கின்றனர்.

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (05) முதல் விசேட பஸ் சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை தினமும் 12 விசேட புகையிரத சேவைகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

Page 7 of 426