web log free
April 26, 2024
kumar

kumar

தோட்டம் என்றால் அங்குள்ள தேயிலை, இறப்பர் பயிர்கள் மற்றும் காணி அல்ல. அது அங்கு உயிர் வாழும் மக்கள். 

இன்றைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும் போது இதோ இந்த இடத்தில் இருந்து எனக்கு வாக்குறுதி அளித்தார். காய்கறி பயிரிட்டு உணவு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள,தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு, காணி தருவதாக சொன்னார். 

விவசாய, பெருந்தோட்ட அமைச்சர்களை, எம்முடன் தொடர்புபடுத்தி காணிகள் தருவதாக சொன்னார். அந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக இப்போதும் போகிறது. 

இன்று, பிரதமர் ஜனாதிபதி ஆகிவிட்டார். ஆனால் எமது மக்களுக்கு காணி கிடைக்கவில்லை. 

அந்த திட்டத்துக்கு பெயரும் வைத்தார். "மனோ கணேசன் பிளான்" என்று சொன்னார். எனக்கு பெயரும் வேண்டாம். வாக்கும் வேண்டாம். அவற்றை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள். எமது மக்களுக்கு காணி கிடைத்தால் எனக்கு போதும். 

இந்த முக்கியமான விடயத்தை நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்காக எதிர்கட்சி தலைவருக்கு நான் நன்றி கூறுகிறேன். 

இந்த முக்கியமான விடயம் பேசும் போது இங்கே, விவசாய, கல்வி, பெருந்தோட்ட அமைச்சர்கள் இருக்கிறீர்கள். எங்கே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்? அவர் இங்கே சபையில் இருந்திருக்க வேண்டும். 

நீங்கள் காணி தருவது ஒருபுறம் இருக்கட்டும். இதை பாருங்கள். உங்கள் தென்மாகாண மாத்தறை தெனியாய மொரவக்க தோட்டத்தில், அப்பாவி தோட்ட மக்கள் விளைவித்த வாழை மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்களை காடையர்கள் வெட்டி நாசமாக்கி உள்ளனர். 

இதென்ன அநியாயம்? 

நாம் இந்நாட்டு பிரஜைகள்தானே? இன்று பிரஜாவுரிமை இருந்தாலும் முழுமையான பிரஜைகளாக நாம் இன்னமும் மாறவில்லை. 

நாம் இலங்கைக்கு வெளியே வழி தேடவில்லை. இலங்கை என்ற வரம்புக்குள் முழுமையான இலங்கையாராக வாழத்தான் விரும்புகிறோம். 

இன்று கல்வி, சுகாதாரம், எல்லாவற்றிலும் நாம் பின்தங்கி உள்ளோம். எமது மக்களுக்கு விசேட அவதானம் தேவைப்படுகிறது. அதை காட்டுங்கள்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நற்பெயருக்கு பொலிசார் சேதம் விளைவித்ததாக முறைப்பாடு செய்ததன் பிரகாரம் 07 மற்றும் 09 ஆகிய திகதிகளில் மரதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர்களை யாழ் மனித உரிமைகள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள பரீட்சை மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்ற தகராறு தொடர்பில் கடந்த 7ஆம் திகதி மாரதங்கேணி பொலிஸ் அதிகாரிகள் இருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் அலுவலகத்திற்கு வந்த நிலையில், கடந்த 2ஆம் திகதி தகவல் வழங்க வந்தனர். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தாக்க முயற்சித்ததாகவும், திட்டியதாகவும், அச்சுறுத்தியதாகவும் மாரதங்கேணி பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் மனித உரிமை அலுவலகத்திற்கு வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சில மணிநேர விசாரணையின் பின்னர் திரும்பிச் சென்றதையடுத்து மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மனித உரிமை அலுவலகத்திற்கு வர உள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய விசேட கலந்துரையாடலொன்று இன்று (ஜூன் 8) பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

வடக்கில் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தினருக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான் இந்த அழைப்பை விடுத்துள்ளார். 

அதன்படி கமல்ஹாசன் விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுமார் 300 வகையான பொருட்களுக்கான இறக்குமதி தடைகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

இன்று (07) காலை கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது வீட்டில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கைது செய்யப்பட்டார். 

அவரை கைது செய்ய கிளிநொச்சியில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று சென்றிருந்தது. 

இதன்போது, தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சபாநாயகரை தொடர்பு கொண்டு விடயத்தை தௌிவுபடுத்தினார்.

எனினும், பொலிஸார் அவரை கைது செய்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்றனர். 

இதேவேளை, மருதங்கேணி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். 

இன்று காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை 4 மணித்தியாலங்கள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக

யாழ். மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் த.கணகராஜ் குறிப்பிட்டார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வாக்குமூலம் பெறுவதற்காக யாழ். மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மருதங்கேணியில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி ஜெ.சற்குணதேவி, எஸ்.உதய சிவம் ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவராக சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (7) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஹர்ஷ டி சில்வா அந்தக் குழுவிற்கு முன்மொழியப்பட்டார்.

அதன்படி, குழுவில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களாலும் முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அறையில் அரச நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் பதவி 5 மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளது.

இதுவரை, குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக தலைவர்கள் குழுவின் பணியை வழிநடத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்பினர்கள் ஹர்ஷ டி சில்வாவுக்குத் தலைவர் பதவியை வழங்குமாறு சபாநாயகரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் அவருக்கு அது கிடைக்கவில்லை.

 ஹர்ஷ டி சில்வா ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபையில் பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக இருந்தார்.

பொது நிதிக்கான குழு பாராளுமன்றத்தின் மிக முக்கியமான குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரங்களை மேற்பார்வையிடும் பணி இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் துணை செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் முயற்சியில் தான் ராஜினாமா செய்ததாக குற்றம் சாட்டினார்.

எஸ்.ஜே.பி.யால் ராஜினாமா செய்ததாக போலி ஆவணம் ஒன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கமகே கூறினார்.

எனது இராஜினாமாவை சுட்டிக்காட்டும் இந்த போலி ஆவணம் மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து நீதித்துறையுடன் இவர்கள் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை என கமகே கூறினார்.

இது போன்ற ஒரு கடிதத்தை தாம் ஒருபோதும் அனுப்பவில்லை என இராஜாங்க அமைச்சர் கூறினார். துணை செயலாளர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்யவில்லை, அப்படி இருந்தால் முதலில் என்னை செயற்குழுவில் இருந்து நீக்க வேண்டும்,'' என்றார்.

எவரேனும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கட்சி விவரங்களை சரிபார்த்தால், SJB இன் பிரதிச் செயலாளராக அவரது பெயர் பட்டியலிடப்படும் என்று கமகே கூறினார்.

போலி ஆவணத்தில் இரண்டு சட்டத்தரணிகளும் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெரிவித்தார். இந்த போலிச் செயல் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

"ரஞ்சித் மத்தும பண்டார, உங்களை இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என்று அழைப்பது வெட்கக் கேடானது. உங்கள் அனைவரையும் நினைத்து நான் வருத்தப்படுகிறேன். சஜித் பிரேமதாச உள்ளிட்ட இந்தக் குழு நன்றியற்றவர்கள் மற்றும் நீக்கப்படுவதற்கு தகுதியானவர்கள்," என்று அவர் கூறினார்.

போலிச் செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான தனது நோக்கங்களை இராஜாங்க அமைச்சர் விவரித்தார். "இனி நான் பொறுமையாக இருக்க மாட்டேன், நான் அவர்களுக்கு சொல்ல வேண்டியது எல்லாம் தயாராக இருங்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

இரவு 11 மணியளவில் தோட்டக் கிணற்றில் இருந்து குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவியை யாரோ ஒருவர் பிடித்து துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக நிட்டம்புவ  பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி டவல் அணிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது இருட்டில் மறைந்திருந்த ஒருவர் திடீரென அவரை கட்டிப்பிடித்து, அவர் அணிந்திருந்த டவலை கழற்றி தரையில் வீசி பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக பொலீஸ் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது

மகளின் அலறல் சத்தம் கேட்ட தாய் ஓடிவரவே உடனடியாக மாணவியை கைவிட்டு சந்தேகநபர் ஓடியதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாயும் மகளும் சந்தேக நபரை அடையாளம் கண்டு பொலிஸில் புகார் அளித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ  பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். 

மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை வளாகத்தில் கூடி பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச் சாட்டின் பெயரிலேயே கொழும்பில் வைத்து கொள்ளுப்பிட்டிப் பொலிசார் கைது செய்து மருதங்கேணிக்கு அழைத்து வருகின்றனர். 

இவ்வாறு மருதங்கேணிக்கு அழைத்து வரப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குமூலம் பெறப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.