கட்சியின் தலைமையை விமர்சிக்கும் மற்றும் கட்சியின் கூட்டு முடிவுகளை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சமகி ஜன பலவேக தீர்மானித்துள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் ஒழுக்கம் சீர்குலைந்து விடும் என கட்சித் தலைமை கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது முழு குழுவும் சபையை விட்டு வெளியேறும் தீர்மானத்தை எடுத்தபோது, அதை புறக்கணித்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தங்கினர்.
இவ்வாறு குழுவாக தீர்மானங்களை எடுக்கத் தவறும் எம்.பி.க்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கட்சியின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை நேசிப்பதையும் ஜனாதிபதி அவர்களை நேசிப்பதையும் கண்டு பொறாமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியை சந்தித்து அனைத்து பேசும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களையும் வேலை செய்ய வைப்பதாக கூறியதாக தெரிவித்த தசநாயக்க அனைவரையும் பற்றி தனக்கு தெரியும் எனவும் தெரிவித்தார்.
ஆளும் கட்சியில் எவருக்கும் வழங்கப்படாத சலுகைகளை ஜனாதிபதியிடமிருந்து சமகி ஜன பலவேகவில் உள்ளவர்கள் இரகசியமாக பெற்று வருவதாகவும் சாமர சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உறுப்பினர்களை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி வருவதாகவும் தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றியை பதிவு செய்து, அரியணையேறியது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழந்தது.
எனினும், 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்த வெற்றியின் பின்னரே இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையுடன் புதிய அரசமைப்பு இயற்றப்பட்டது.
அதன்பின்னர் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி நடைபோட்டது.
சு.க. ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் ஐதேகவின் அரசியல் பலம் உள்ளிட்ட காரணிகளால் சுதந்திரக் கட்சியால் மீண்டெழ முடியுமா என அரசியல் ரீதியில் அச்சம் ஏற்பட்டது. 1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதி தேர்தலிலும் கை சின்னத்தில் களமிறங்கிய சுதந்திரக்கட்சி பின்னடைவை சந்தித்தது.
1977 இற்கு பின்னர் 1989 இலேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. (சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்ற ஆட்சிகாலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடித்துக்கொள்வதற்கு ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.)
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் கூட்டணியாக கதிரை சின்னத்தில் களமிறங்கியது. ( அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் கை சின்னத்திலேயே அக்கட்சி தனித்து - கூட்டணியாக களமிறங்கியது)
இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது, ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டு, சுதந்திரக்கட்சி மீண்டும் தலைதூக்கியது.
மக்கள் கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அதன் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 4 இலட்சத்து 64 ஆயிரத்து 58 விருப்பு வாக்குகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.
இலங்கையில் விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது அமைந்திருந்தது. (2015 இல் இச்சாதனையை கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க முறியடித்தார்.)
அதே ஆண்டு அதாவது 1994 நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கதிரை சின்னத்திலேயே சுதந்திரக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது. இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியை உருவாக்கிய தேர்தல் அது.
அதன்பின்னர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் கதிரை சின்னமே சுதந்திரக்கட்சிக்காக களத்துக்கு வந்தது.
அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கதிரை சின்னம் களத்துக்கு வரவில்லை. மக்கள் கூட்டணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக உதயமானது. வெற்றிலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2004 இற்கு பின்னர் அனைத்து தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி வெற்றிலை சின்னத்திலேயே கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக களமிறங்கியது.
2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. இதனால் அக்கட்சியின் வெற்றிலை சின்னமும் மாயமானது. மொட்டு சின்னம் ஆதிக்கம் செலுத்தியது. 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் மொட்டு கூட்டணியில் சுதந்திரக்கட்சி களமிறங்கினாலும் சில மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர் ‘கதிரை’ சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்து களமிறக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. மக்கள் கூட்டணி தற்போதும் சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியாக செயற்படுகின்றது.
முன்னணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவும், செயலாளராக லசந்த அழகியவண்ணவும் செயற்படுகின்றனர். முன்னணியின் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. தலைமைத்துவ சபையொன்றை உருவாக்கி அச்சபையின் தலைமைப்பதவியை சந்திரிக்கா அம்மையாருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இக்கூட்டணி தொடர்பில் சந்திரிக்கா அம்மையார் இன்னும் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி - ஆர் சனத்)
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் சந்தேகத்திற்குரிய இடங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் சாமரி பிரியங்கா முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மரணம் தொடர்பில் பல குறிப்பிட்ட உண்மைகளை முன்வைத்து சுமார் ஐந்து பக்கங்கள் கொண்ட விபரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா நேற்று (07) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப், கன்டெய்னர் ட்ரக் வண்டியுடன் ஜனவரி (25) மோதியதில் இராஜாங்க அமைச்சரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று காலை பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையை கேட்பதில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஏனைய நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டேன் என அவர் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படும் போது அவர்களை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொதுவான நடைமுறையாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளையும் தமது கட்சி கடுமையாக விமர்சிக்கும் வேளையில், ஜனாதிபதி இருக்கும் மேடையில் கயந்த கருணாதிலக்க ஏறுவது பாதகமானது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குற்றம் சுமத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தலைமைத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் எப்போதும் கருத்து வெளியிடும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ அழைப்பாக இருந்தாலும் இந்நேரத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடாது என்பதை வலியுறுத்த சீனியர்கள் குழுவினர் கேட்டுக் கொண்டதை அவர்கள் அறிந்திருக்கலாம்.
தம்புள்ளையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் கயந்த கருணாதிலக்கவும் இணைந்து கொண்டதாக சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விளக்கமறியலில் இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்துள்ளார்.
ஜேவிபி தலைவர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு இடையே இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இலங்கையின் NPP மற்றும் JVP தலைவர் அனுர திஸாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய நல்ல விவாதம்.
மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினார்.
இந்தியா, அதன் அயல் மற்றும் பிராந்திய கொள்கைகளுடன் எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்று கூறுகிறார்.
மக்கள் வங்கி தனது யூ டியூப் தளமானது 50,000 சந்தாதாரர்கள் என்ற சாதனை இலக்கினை எட்டியுள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவித்துள்ளதுடன், நாட்டில் எந்தவொரு நிதி நிறுவனமும் கொண்டுள்ள அதிகூடிய எண்ணிக்கையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை இலக்கினை இலங்கையில் எட்டியுள்ள முதலாவது நிதி நிறுவனம் என்ற வகையில், டிஜிட்டல் வழியிலான ஈடுபாட்டைப் பேணுவதில் தான் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் மக்கள் வங்கி இதன் மூலமாக நிரூபித்துள்ளது.
வங்கித்துறையில் எதிலும் முன்னோடியாகத் திகழ்வதில் பெயர்பெற்றுள்ள மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருப்பதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) அடங்கலாக டிஜிட்டல் தளங்களை தொடர்ச்சியாக உள்வாங்கி வந்துள்ளது.
திறன்மிக்க தொடர்பாடல் மற்றும் வாடிக்கையாளர்களை எட்டுவதில் பல்வகைப்பட்ட சமூக ஊடக தளங்களை உபயோகப்படுத்துவதில் வங்கியின் அர்ப்பணிப்பை யூ டியூப் தளத்தில் அதன் சாதனை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
மக்கள் வங்கியின் யூ டியூப் தளமானது பல்வேறுபட்ட தகவல் விபரங்களைக் கொண்டுள்ள ஒரு மையமாக மாறியுள்ளதுடன், நிதியியல் தொடர்பான அறிவு மற்றும் வங்கியின் செயல்பாடுகள் தொடர்பில் பெறுமதிக்க ஆழமான விடயங்களை வழங்குகின்றது.
சமூக ஊடக தளங்களை உபயோகிக்கும் வங்கியின் மூலோபாயமானது வாடிக்கையாளர்களுடனான இடைத்தொடர்பு மற்றும் தொடர்பாடல் ஆகியன மாற்றம் கண்டு வருகின்ற போக்கினை அனுமானித்து, அவற்றை முற்கூட்டியே உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமையை பிரதிபலிக்கின்றது.