web log free
July 27, 2024
kumar

kumar

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா சற்று முன்னர் இலங்கை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார்.

பத்திரிகையாளர் தரிந்து உடுவரகெதர நேற்று இலங்கை பொலிஸாரினால் கைதுசெய்ய்பட்டுள்ளார்.

ஈபிஎவ் ஈடிஎவ் திருட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போதே இவர் கைதுசெய்ய்பட்டுள்ளார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நீர்த்தாரை கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை காவல்துறை அதிகாரிகள், ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்வதுடன், அவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

"இலங்கை ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை கைது செய்தமை மற்றும் பொலிசார் தாக்கியமை பயங்கரமானது, அதிகாரிகள் உடனடியாக அவரை விடுவித்து மருத்துவ வசதியை வழங்க வேண்டும்" என CPJ இன் ஆசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பெஹ் லிஹ் யி தெரிவித்துள்ளனார்.

"இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை போலீசார் அடையாளம் காண வேண்டும் ,இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்
மற்றும் ஊடகவியலாளர்கள்அச்சமின்றி போராட்டங்களை செய்தியாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்."

 

வறிய மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து நலன்புரி திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக 17,089 மில்லியன் ரூபாவை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்  குறிப்பிட்டது. 

சமுர்த்திக்கு பதிலாக அஸ்வெசும நலன்புரி திட்டத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.

பயனாளிகளை தெரிவு செய்யும் முறையில் எழுந்த பிரச்சினையினால், மீண்டும் மேன்முறையீடுகள் கோரப்பட்டு, தரவுகள் மீளாய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுப்பனவிற்கான கடிதங்கள் வழங்கப்படுகின்றன.

பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தில், பயனாளிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 4 அரச வங்கிகளில் ஒன்றில் சமர்ப்பித்து கணக்கை ஆரம்பிக்க முடியும்.

இந்த செயற்றிட்டம் காரணமாக இந்நாட்களில் பிரதேச செயலகங்களிலும் அரச வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைகள் சங்கம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு பணம் மற்றும் அதற்கான வட்டிக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

ஜூலை மாதம் முதல் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் கூறியிருந்தாலும், அது வழங்கப்படவில்லை. அவ்வாறு 20 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படவிருந்த 17,089 மில்லியன் நிவாரணத் தொகைக்கும் அதன் வட்டிக்கும் என்ன நடந்தது என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் சாமர மத்துமகளுகே கேள்வி எழுப்பினார். 

2022ஆம் ஆண்டுக்கான நிதிப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி, கடந்த ஆண்டில் (2022) மது உற்பத்தி 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

2021ல் 37.5 மில்லியன் லிட்டராக இருந்த மது உற்பத்தி 2022ல் 41.2 மில்லியன் லிட்டராக 9.9 சதவீதம் அதிகரிக்கும் என்றும் ஆண்டறிக்கை கூறுகிறது.

நிதியமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மதுபானத்தின் மீது சுமத்தப்பட்ட கலால் வருமானம் 2021 இல் 138.6 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில் 2022 இல் 165.2 பில்லியன் ரூபாவாக 19.2 வீதத்தால் கணிசமாக அதிகரித்துள்ளது.

மதுபானம் தொடர்பான பொருட்களின் இலக்கு வருவாயை அதிகரிக்க, பாதுகாப்பு குறியிடல் மற்றும் பாதுகாப்பு குறியிடல் மேலாண்மை அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு கலால் திணைக்களம் முறையான மேற்பார்வை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை காட்டுகிறது.

பொமிரிய சுமணராம விகாரையில் அத்துமீறி நுழைந்து விகாரையின் தலைவர் பல்லேகம சுமண தேரர் மற்றும் இரு பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு சந்தேக நபர்களையும் தலா ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யுமாறு கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று (26) உத்தரவிட்டார்.

அத்துடன், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையிலும் சந்தேகநபர்கள் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொமிரிய சுமணராமய என அழைக்கப்படும் விகாரைக்குள் நேற்று இரண்டு பெண்கள் பிரவேசித்ததாகவும், அவர்கள் வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் நவகமுவ பொலிஸார் இந்தக் குழுவினருக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லட்டுவாஹெட்டி தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்த நிலையில், வழக்கின் மீள் விசாரணை நவம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என மின்சார சபை உறுதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சின் செயலாளரும் மின்சார சபைத் தலைவருடன் ஏற்படுத்திக் கொண்ட இயக்கத்தின் பிரகாரம் மின்சார சபையினால் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கண்டியில் நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிலுவை மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக திறைசேரியிலிருந்து 120 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மின் கட்டணம் செலுத்துவதில் சுமார் நான்கைந்து மாதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான நிலுவைத்தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படும் என உறுதியளித்ததன் அடிப்படையில் தலைவர் மருத்துவமனைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின்சார வாரியம் உடன்பாட்டுக்கு வந்தது. 

நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்களை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் முறையாக மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் தேவையான பணம் உரிய முறையில் வழங்கப்படும் என திறைசேரி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

கோட்டே பகுதியில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் குழுவிற்கு தனது அந்தரங்க உறுப்புகளை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கோட்டே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் டென்சில் பத்மசிறியை ஆகஸ்ட் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தம்பகல்ல ஏரிக்கு அருகில் இரண்டு பாடசாலை மாணவர்கள்  பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷ சந்தீப மற்றும் ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர என்ற இரு பாடசாலை மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள்.

 

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாட்டை பிரிவினைவாதத்திற்குப் பலியாக்கும் அபாயம் மற்றும் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு உண்மையான தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொடர்பிலான நீண்ட ஆவணமொன்றை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாட்டை பிரிவினைவாதத்திற்கு பலியாக ஆக்குவதன் அபாயம் குறித்து விளக்கினர்.

அதனையடுத்து, தேசியப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என எழுதப்பட்ட நீண்ட ஆவணத்தை விமல் வீரவன்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரன் இலங்கைக்கான விஜயத்தை இவ்வாரம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் இதுவாகும்.