ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலரின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று விசேட கலந்துரையாடலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், குறித்த தீர்மானம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும், பொறுப்பான அமைச்சர்களை எச்சரித்து இதனைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனவே, இறுதி முடிவை பட்ஜெட் குழு வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை மேலும் 3 நாட்களுக்கு கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு நேற்று (14) தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இம்மாதம் 24, 27, 28 ஆகிய திகதிகளில் கிரிக்கெட் நிறுவனங்களின் அதிகாரிகளை கோப் குழு முன்பு அழைக்க முடிவு செய்யப்பட்டது.
அங்கு, 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20/20 உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கை மற்றும் 2019ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கை ஆகியவற்றில் விசாரிக்கப்படும்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியைக் காண தனது மாமியார், மைத்துனர் உள்ளிட்ட நண்பர்கள் குழுவை அழைத்துச் சென்றதாக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா நேற்று கோப் குழுவிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுபவர்கள் மற்றும் நிறுவனத்தின் பரிந்துரைகள் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கை தொடர்பில் கலந்துரையாட கோப் குழு, கிரிக்கெட் நிறுவனத்தை அழைத்திருந்தது.
கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி உலகக் கிண்ணப் போட்டிகள் காரணமாக தனது மனைவிக்கு விசா கிடைக்கவில்லை என்றும் அதற்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்ததாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏனைய குழுவினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
அங்கு தயாசிறி ஜயசேகர எம்.பி, தான் எடுத்தவர்களை அறிவிக்குமாறு தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.
“ரொபர்ட் சில்வா எனது மைத்துனர், டெய்சி ஜீனெட், எனது மனைவியின் தாய். ஸ்ரீமால் குணரத்ன எனது நண்பர். நிஷாதி பத்மசிறி அவரது மனைவி, சஞ்சய் சமரசிங்க எனது நண்பர். ஆர். ஷெனுலா தினுசிகா மற்றும் சாரா தினாலி ஆகியோர் அமைச்சரின் மகள்களாவர். கடிதத்தை இருவரிடமும் கொடுத்தேன். அமைச்சருக்கும் கடிதம் கொடுத்தேன். ஆனால் அப்போது அரசியல்வாதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் விசா வழங்கப்படவில்லை. சுதத் ரோஹன சந்திரேஸ்கரவின் பெயருக்காக காத்திருக்கிறேன்..."
உலகக் கிண்ணப் போட்டிகளைக் காணச் சென்ற அனுராதா எதிரிசிங்க மற்றும் ஷலனி தாரக ஆகிய இரு நடிகைகளின் பெயர்கள் உப தலைவர் ஜயந்த தர்மதாசவினால் சேர்க்கப்பட்டதாக அங்கு சென்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட எம்.பி.க்கள் குழு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தால், தமது உறுப்பினர்களாலும், ஒட்டுமொத்த மக்களாலும் கட்சி நிராகரிக்கப்படும் என கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கட்சி மாநாடு மற்றும் வரவு செலவு திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் சமர்ப்பிக்கப்படும் போது பல சிக்கல் நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு முன்னர் இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்சவைச் சுற்றியிருக்கும் இளம் எம்.பி.க்கள் குழுவும் பரிந்துரைத்துள்ளது.
எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு கட்சித் தலைமையிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளில் கட்டப்பட்டிருந்த மாடுகளை திருடியதாக கூறப்படும் கடற்படை சிப்பாய் உட்பட மூவரை முந்தல் பொலிஸ் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், திருடப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கால்நடைகளையும், திருடப்பட்ட கால்நடைகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் லொறியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்படை முகாமில் பணிபுரியும் பட்டுலுஓயாவை வசிப்பிடமாகக் கொண்டவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் ஓராண்டு காலத்தில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதனால் பயிர்கள் பயிரிட முடியாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நாட்களில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தாலும் கடந்த காலத்தை விட விவசாயிகள் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள நீரை விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
டிசெம்பர் இறுதிக்குள் லானா எனப்படும் இயற்கையான காலநிலை நிலவும் என சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும், எனவே நீரை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரே பொறுப்பு கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) மதியம் 12.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4வின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
செனல் 4 அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.
எனினும் தெரிவுக்குழு நியமனம் தொடர்பான முன்னேற்றம் தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
மொத்தம் 311 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையில் ரூ. 36.8 மில்லியன் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) பிற்பகல் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் காணப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் 04 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும், வட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இருவர் வெட்டுக்காயங்கள் காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளும் பிரேத பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 10,000 ரூபா கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது.