web log free
December 10, 2023
kumar

kumar

கொழும்பு, மல்பாரா பகுதியில் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

சிறையிலுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இதனையடுத்து கொழும்பு பௌத்தலோக மாவத்தையை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தற்பொழுது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான ஊரகஹ இந்திக்கவின் அடியாட்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

24.08.2022 அன்று ஊரகஹா பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு 19.10.2022 அன்று யக்கலமுல்ல பொலிஸ் பிரிவில் 04 நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 

சந்தேக நபர்கள் மிலன் கோசல (ஜுண்டா) மற்றும் கமகே திலுகா (முலா) ஆகிய இருவரும் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

T-56 ரக துப்பாக்கி, 01 12 போர் வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அளுத்கம தர்கா நகரில் இருபத்தைந்து வருடங்கள் பழமையான அரச மரத்தை வெட்டிய மூன்று பௌத்த மதத்தினர் உட்பட ஏழு பேரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த ஏழு பேரும் இணைந்து ஒரே முடிவின் பேரில் தர்கா நகரில் உள்ள அம்கஹா சந்திப்பில் உள்ள இந்த அரச மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.

இது தொடர்பில், பௌத்த தேரர் மற்றும் பிரதேசவாசிகள் பலர் அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி சம்பவம் தொடர்பில் மூன்று சிங்கள பிரஜைகளும் நான்கு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் இந்த செயல் இனவாத கலவரமாக உருவாகியுள்ளது.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் தலையீட்டினால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமையினால்  வெட்ட முற்பட்டதாக பொலிஸார் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய அளுத்கம பொலிஸார், இவர்களது நடவடிக்கையினால் தேசிய இன நல்லிணக்கம் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியுள்ளனர்.

ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த களுத்துறை நீதவான் நீதிமன்றம் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளது.

திலினி பிரியமாலியுடன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன தனது தொடர்புகளைப் பயன்படுத்தி விளக்கமறியலில் உள்ள கைதிகளின் அறைகளை மாற்றியமைப்பதாக சுதந்திர ஊடகவியலாளரும் முன்னாள் விமானப்படை அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .

யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜானகி சிறிவர்தன சிறைச்சாலையில் அதிகாரங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

ஜானகி சிறிவர்தன முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபியுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு பிரஜையான பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு சமகி ஜன ஜனபலவேகவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (17) கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பிரஜை அல்லாத குறித்த எம்.பி.யை உடனடியாக குடிவரவு திணைக்களத்தின் மிரிஹானே தடுப்பு மையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து நாடு கடத்த வேண்டும் என ரகுமான் தெரிவித்தார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு பிரஜையாக இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு அளுத்கடை நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளது.

அவர் 2014 ஆம் ஆண்டு பெற்ற வதிவிட விசா மற்றும் அந்த வீசா 2015 ஆம் ஆண்டு ஏழாவது மாதத்தில் காலாவதியானது. இவ்விடயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அரசாங்கம் தெளிவாக மறைத்துள்ளதுடன், இவ்விடயத்தை ஆராய்ந்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவேன் என்கிறார்.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானா கமகே கருத்து தெரிவித்திருந்த போதிலும், அவருக்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, வழக்குக்கு தொடர்பில்லாத வெளி தரப்பினர் வந்து தமது கட்சிக்காரருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கில் சம்மந்தப்படாத வெளி தரப்பினரால் அவ்வாறான உத்தரவைப் பெற முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

எனவே வெளிநாட்டுப் பயணத்திற்கான தடையை நீக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இந்தக் கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதுவரை பயணத்தடை நீடிக்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை போலியானது என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த முறைப்பாடு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம்  பிணை வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சங்கம் மற்றும் அரசாங்கம் என்பன 150,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை வழங்க முன்வந்ததையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தினமும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும், இரவு 9 மணி மற்றும் காலை 6 மணி வரை வெளியில் செல்ல தடை உள்ளிட்ட பிணை நிபந்தனைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், டிண்டர் உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை அணுகுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லிந்துலை - மெராயா லிப்பக்கலை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் வளர்ந்து வரும் தொழிலதிபருமான யோகராஜ் ரஞ்சித்குமார் என்பவருக்கு உலக சமாதான பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி உள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் குறுகிய காலத்திற்குள் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து பல குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு இவர் பெரிதும் உதவி புரிந்துள்ளார்.

அத்துடன் வியாபாரத் துறையில் ஆர்வம் கொண்டு சிறு வயதிலேயே ஒரு நிறுவனத்தின் பொறுப்பாளராக வளர்ந்துள்ள யோகராஜ் ரஞ்சித்குமார் தனது துறையில் மென்மேலும் வளர வேண்டும் என ஊக்குவிக்கும் நோக்கத்தில் உலக சமாதான பல்கலைக்கழகத்தின் ஊடாக கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் நவரத்தினம் அவர்களால் இந்த கௌரவ கலாநிதி பட்டம் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டது. 

வவுனியா – செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறொன்றுக்குள் வீழ்ந்து 09 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கு அருகில் வெட்டப்பட்டிருந்த கிணற்றில் நீர் நிரம்பி காணப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் செட்டிக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.