இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு பைத்தியமில்லை என வெகுஜன ஊடகம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் அன்றாடச் செலவுகளுக்கும் அரசாங்கம் பணத்தை வழங்குவது மிகவும் சிரமமாக உள்ளது என்றார்.
எனவே இந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் வீடொன்றினுள் வைத்து தேரர் ஒருவரையும் இரு பெண்களையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் 8 பேர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர் பெண் ஒருவருடனும் அவரது மகளுடனும் வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த பிரதேச இளைஞர்கள் குழுவொன்று அவரையும் ஏனைய இருவரையும் தாக்கி வீட்டிலிருந்த தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பிக்கு ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கிய முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமது உறவினர் மற்றும் அவரது மகளுடன் வீட்டினுள் இருந்த போது இளைஞர்கள் குழுவொன்று வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து, தன்னையும் ஏனைய இருவரையும் தாக்கி வீட்டுப் பொருட்களை சேதப்படுத்தியதாக தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களுடன் அறையில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாங்கள் அந்த வீட்டுக்குச் சென்றதாகவும், அப்போது தேரர் அந்த இரு பெண்களுடன் நிர்வாணமாக அறையில் இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது வாக்குவாதம் மற்றும் தாக்குதலும் ஏற்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை தேரர் வாபஸ் பெற்று சமரசம் செய்ய சம்மதம் தெரிவித்ததால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, விக்கிரமரத்ன நாளை (9) அல்லது நாளை மறுதினம் (10) பணிக்கு சமூகமளிக்க உள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபராக இருந்த விக்ரமரத்ன மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று மாத காலத்திற்கு அவரின் சேவையை நீடித்தார்.
இந்த சேவை நீட்டிப்பு ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைந்தது.
பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும் போது அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு நடத்தப்படுவதாகவும், ஆனால் சேவை நீடிப்பு நாளில் அவருக்கான அணிவகுப்பு இடம்பெறவில்லை எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விக்கிரமரத்ன 2020 இல் பொலிஸ் மா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள ஒவ்வொரு நிர்வாக கிராம அதிகாரிகளையும் உத்தியோகபூர்வ சமாதான நீதியரசராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் நெருக்கடியை உருவாக்கி ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் சீர்குலைக்கும் நோக்கில் குழுவொன்று செயற்படுவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த குழுக்களின் உறுப்பினர்கள் கடந்த வாரம் கண்டி அல்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பயிலரங்கு ஒன்றை நடத்தியதாகவும், ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது மற்றும் கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நடைமுறை மற்றும் தத்துவார்த்த பயிற்சிகள் இங்கு நடத்தப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சட்டமூலம் தொடர்பான குழு அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான குழு அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது திருடர்களைப் பிடிப்பதாகக் கூறுபவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு அதனை செய்ய மாட்டார்கள். அப்போது எதிர்க்கட்சியில் இருப்போர் திருடர்களைப் பிடிப்போம் என்று கூறி இரு தரப்பினராகப் பிரிந்து விமர்சிப்பர். திருடர்கள் பிடிபடும் வரை மக்கள் எப்பொழுதும் காத்திருக்கிறார்கள் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திருடர்களை பிடிக்கும் முறைதான் நாளுக்கு நாள் மாறிவருகிறது என்று கூறிய அமைச்சர், இது முழுக்க முழுக்க நகைச்சுவையே என்றார்.
எந்த தகவலும் இல்லாமல் திருடர்களை திருடர்கள் என்று மக்களிடம் சொல்வது உண்மையான திருடர்களுக்கு செய்யும் மிகப்பெரிய கேடு என்றார்.
ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதத்தின் போது அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.
12.5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ கேஸ் சமீபத்தில் எடுத்த முடிவுடன், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் இன்று அதன் விலையை குறைத்துள்ளது.
இன்று (6) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப்ஸ் காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விலை குறைப்புடன், 12.5 கிலோ எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும். சில்லறை விலை ரூ. 3,690.
5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் குறைக்கப்படும். புதிய சில்லறை விலை ரூ.1,486 ஆகவும் இருக்கும் என்றார்.