web log free
July 27, 2024
kumar

kumar

தொழிற்சங்கப்  இணைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் ஜனவரி 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவிற்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை நீதிமன்றம் இன்று (24) விதித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதே தண்டனை விதிக்கப்பட காரணம்.

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உட்பட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே கூறுகிறார்.

தொலைதூர வைத்தியசாலைகளில் மட்டுமன்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் தீர்வை வழங்காவிடின் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச் செயலாளர்கள் இன்று(24) தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் சமகி ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை என கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்ற போதே அது இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நீதிவான் விசாரணையின் சாட்சிகளை அழைக்க முடிவு செய்ததாக அவர் அங்கு கூறினார்.

மரணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டதால், விசாரணையை தனிப்பட்ட முறையில் நடத்த வேண்டும் என்று தினேஷ் ஷாப்டர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

உலகச் சந்தையின் விலை அதிகரிப்பால் இந்நாட்டிலும் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்ற ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் பயன்படுத்திய 'கோட்டா கோ ஹோம்' என்ற கோஷத்தை முதலில் சமூகமயமாக்கியவர் யோஷித ராஜபக்ஷ, ஆனால் அவர் அதை உருவாக்கியாரா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று அவர் கூறுகிறார்.

போராட்டம் தொடங்கும் முன் நடந்த சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஆதரித்ததால் தான் ராஜபக்ச குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம், முறையான தயாரிப்பிற்காக சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் இந்த வாரம் பெற்றுக் கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அவரது கையொப்பத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்ட 10 மில்லியன் ரூபா நட்டஈடு தொகையை வழங்குவது சிறிய விடயம் என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் மாத்திரம் மைத்திரிபால சிறிசேனவுக்கு மூன்று வீடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இரண்டு வீடுகளும் கம்பஹாவில் ஒரு வீடும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வீடுகள் தனது சொந்த பெயரில் இல்லாவிட்டாலும், தனது நண்பர்கள் உறவினர்கள் பெயரில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.