மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(15.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளில் பகலில் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்தாவிட்டால் இலட்சக்கணக்கான மக்களை வீதிக்கு இறக்கி பிரச்சினையை தீர்க்க தயார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஆனால் அது அவரது நம்பிக்கையல்ல என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அதனூடாக தற்போதைய சிக்கல் நிலையை தீர்க்க முடியும் என தாம் நம்புவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே எனவும், கொவிட்காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புத்தளத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
போராட்டத்தின் மூலம் கோரப்பட்ட எந்த மாற்றமும் இது வரை எட்டப்படவில்லை எனவும், அகிம்சை ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டவன் என்ற வகையில் இது குறித்து தாம் வருந்துவதாகவும், வன்முறையை விரும்பும் சிலஅரசியல் குழுக்கள் இந்நாட்டைப் பொறுப்பேற்கிறோம் எனக் கூறுவது நகைப்புக்குரியது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்றும் இந்நாட்டை ஆள்வது ராஜபக்ச நிழல் அரசாங்கமே என்பதனால், ராஜபக்சர்களினால் தூண்டப்பட்ட இனவாதத்தை அழித்து சகோதரத்துவம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், ராஜபக்சர்களின் இந்த நிழல் அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் பிற நாடுகள் நமக்குப் பின்னால் இருந்தாலும், இந்நாடுகள் இப்போது நம்மை விட முன்னேறியுள்ளதாகவும், நாமும் அந்த வழியில் பயணிக்க ஒரு புதிய தொடக்கத்திற்கு செல்ல வேண்டும் எனவும், புதிய தொழில்நுட்ப போக்குகள் மற்றும் திட்டங்கள் மூலம் இளைஞர்களை வலுவூட்டி நாட்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
உரிய தொகை செலுத்தும் வரை தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரசு அச்சகம் மறுத்ததாக கூறப்படுகிறது.
பெப்ரவரி 22, 23, 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 52% வீதத்தில் வெற்றிபெறும் என இந்திய அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் உண்மையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு போட்டி இல்லை என்றும் அவர் கூறினார்.
கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எங்களது வீட்டில் நாயை திருடியவர் வீரகெட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் வாக்கு கேட்கிறார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த போராட்டங்களின் போது வீடுகளை எரிக்க வந்தவர்கள் ஜே.வி.பி பட்டியலிலும் வாக்கு கேட்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
மனித கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும் ஜே.வி.பியின் வேட்பாளராக மாறியுள்ளதுடன் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவரும் வேட்பாளராக முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்கள் தவறானவை என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க கூறுகிறார்.
“எமது கட்சியைப் பொறுத்தவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் கொடியை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தது தவறு. தன்னிச்சையாக கட்சியை மைத்திரிபாலவிடம் ஒப்படைத்த பின்னரே கட்சிக்கு இந்த அழிவு நடந்தது. கட்சியை இழந்தோம். அதற்கு மகிந்த ராஜபக்ச தான் பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உண்மையில் அவர் எடுத்த முடிவு தவறானது. அந்த விஷயங்கள் மட்டுமல்ல. அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கு மகிந்த ராஜபக்ச ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் நெருக்கடி காலத்தை உருவாக்கினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என அரசாங்கத்தின் அச்சுத் திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேவையான நிதி வழங்கப்படும் வரை வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசாங்க அச்சகத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தியவடன நிலமே நிலங்க தெல பண்டாரவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரண்மனையில் பணம் வழங்கப்பட்டதாகவும், அரண்மனையில் தங்கம் மற்றும் காணி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை பொய்யான தகவல்கள் எனவும் பொது அமைப்பின் தலைவர் நிலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்தை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிஹால் பெர்னாண்டோவின் கருத்துக்கள் அடிப்படையற்றவை எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2010 ஜனாதிபதித் தேர்தலின் போது 5000 ரூபா நாணயத்தாள்களை மூட்டையாக கட்டி மஹிந்த ராஜபக்ஷவிடம் கொடுத்ததாக குறிப்பிட்ட போதிலும் அப்போது 5000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லை என நிலாந்த ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நிஹால் பெர்னாண்டோவை கத்தோலிக்க அடிப்படைவாதிகள் குழுவொன்று பயன்படுத்தி தத்தா மாளிகைக்கு அவமதிப்பு ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.