web log free
June 07, 2023
kumar

kumar

நாட்டில் ஏன் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்ட்டது, எந்த காரணத்திற்காக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? சமூக வலைத்தளங்கள் நாட்டில் முடக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

இன்று நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. புது நிதி அமைச்சர் பதவி ஏற்றார் பின்னர் அவரே விலகிச் சென்றார் இதற்கான காரணம் என்ன? இன்று நாட்டில் நிதி அமைச்சர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.     

அமைதியான போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார்  சைக்கிள்களில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து செல்கின்றனர்.  யார் இவர்கள்? எதற்காக இப்படி வந்தார்கள்?  எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்எனினும் இதுவரை சபைக்குள் சமூகமளிக்கவில்லை என தெரியவந்துள்ளது .

ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சி தயாராகி வருகின்றது.

அரசாங்கத்திடமே பெரும்பான்மை உள்ளது. அவ்வாறு பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால், பாராளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
 
அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதையடுத்து தற்காலிகமாகவே அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்புக்கு இணங்கவே ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்ற முறையை மீறி செயற்பட முடியாது.ஜனாதிபதி அனைத்து அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கோரினார். அதன்படி அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர்.
 
அதனையடுத்து அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அனைத்து கட்சிகளும் இணைந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகவே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.
 
ஜனாதிபதி ஒரு போதும் அரசியலமைப்பை மீறி செயற்பட மாட்டார். எமது அரசாங்கத்துக்கே தற்போது பெரும்பான்மை உள்ளது.
 
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்றால் அதனை எவரும் நிரூபிக்கலாம். அதன்படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்லலாம்.
 
அல்லது எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் அவர்கள் ஆட்சி அமைக்கவும் முடியும். ஆனால் அவை எதுவும் இன்றி தன்னிச்சையாக செயற்படக் கூடாது.
 
மக்களின் பிரச்சனைகள், துன்பங்களை நாமும் அவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
 
அமைதியான முறையில் நாம் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்.
 
அதற்காகவே ஜனாதிபதியினால் சர்வ கட்சி மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் தேவைகள் மற்றும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

முன்னாள் பிரதி அமைச்சர்  நிருபமா ராஜபக்ஷ நேற்று இரவு 10.25 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது, இவர்  ராஜபக்சக்களின் சகோதரி என்பது குறிப்பிடதக்கது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, கொரிய குடியரசின் ஒருங்கிணைப்பு அமைச்சர் Koo Yun cheol, கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் கொரிய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபயவிடம் தெரிவித்தார்.

மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாளைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

மார்ச் 31 அன்று ஜனாதிபதி கோட்டாபயவுடனான அழைப்பின் போது, அமைச்சர் KOO Yun-cheol இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 45 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது அதை எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் இரு நாடுகளும் தங்களின் வலுவான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என அவர் தெரிவித்தார் .

மேலும் கொரிய தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதாகவும் கொரியாவின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உள்ளூர் மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் அமைச்சர் KOO Yun cheol விரும்புவதாகவும் தெரிவித்தார் .

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து கவர்ஸ் கோபரேட் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு ஏதேனும் கோரிக்கை விடுத்தால் அதனை அன்றைய தினம் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

மின்வெட்டுகளின் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் வாகன சாரதிகளையும் பாதசாரிகளையும் எச்சரித்துள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்தார்.

பெரும்பாலான ரயில் கடவைகள் மின்சாரத்தால் இயக்கப்படும் "பெல் மற்றும் லைட்" பொருத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மின் தடையின் போது அந்த ரயில் கேட்கள் பேட்டரியில் இயங்கும். ஆனால் நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பேட்டரி திறன் குறைவடைந்துவிடும் , எனவே, பெல் மற்றும் லைட் அமைப்புகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம் எனவும் சாரதிகளையும் பாதசாரிகளையும் கவனமாக நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுள்ளது .

எனவே மின்வெட்டு ஏற்படும் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக செனவிரத்ன தெரிவித்தார்.

வெற்றிடமாகவுள்ள நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் வினவிய போது, மீண்டும் பதவி ஏற்க தயாராக இல்லை என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபரும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனவும் அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பிறப்பித்த அவசர நிலை பிரகடனத்தை ஏப்ரல் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அரசு எதிர்ப்பு போராட்டங்களில் ஈழத்தமிழ், மலையக, முஸ்லிம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், எமது இன மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகளையும் வலியுறுத்த வேண்டும்.
 
தென்னிலங்கை சிங்கள மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்களை எழுப்பி, அரசை எதிர்த்து போராடுகிறார்கள். ஆகவே நாமும் போராடுவோம் என அவர்கள் எழுப்பும் அதே கோஷங்களை மாத்திரம் எழுப்பி போராடுவது உசிதமானதல்ல.
 
கோதாபய உட்பட அனைத்து ராஜபக்சர்களும் வெளியேற வேண்டும் என்பதில் எவரையும்விட நாம் மிக உறுதியாக இருக்கிறோம். அதேபோல், ராஜபக்சர்கள் வெளியேறுவதால் மாத்திரம், தமிழ் பேசும் மக்களின் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து, நமது வீடுகளிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் பாலுந்தேனும் ஓடப்போவதில்லை என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.