web log free
October 26, 2024
kumar

kumar

எரிபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறையால் பல அனல் மின் நிலையங்கள் ஏற்கனவே செயல்பாடுகளை நிறுத்திவிட்டன.
தற்போது இந்த நாட்டில் எரியும் எண்ணெய் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமையின் அடிப்படையில் எதிர்காலத்தில் மின்வெட்டு காலத்தை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு திரும்பி வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய அங்கிருந்து சவூதி அரேபியாவுக்கு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சவூதி சென்றதன் பின்னர் அங்கிருந்து நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்காவில் குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாபய அங்கு செல்வதை தவிர்த்து வருகிறார். அங்கு வாழும் அவரின் மகனின் பாதுகாப்பிற்காகவே அமெரிக்கா செல்வதற்கான திட்டத்தை முழுமையாக கைவிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

கோட்டாபய அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தில், தாய்நாட்டிற்கு தன்னால் இயன்றவரை சேவையாற்றியதாகவும் தொடர்ந்தும் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளேன் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விநியோகம் ஆரம்பிக்கும் வரை CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

எரிபொருளைப் பெறுவதற்கு தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு மற்றும் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஆகிய இரண்டும் கட்டாயமாக்கப்படும் எனவும், வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்கியுள்ளதுடன், சீனா 67.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய கடன் வசதி சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக வற்புறுத்தி நாளை (19ம் திகதி) தீவிர நடவடிக்கை எடுப்போம் எனவும் நாளை போராட்ட நாள் எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இன்று முதல் மக்கள் அண்மித்த நகரங்களில் போராட்டங்களை நடத்த வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்த வசந்த முதலிகே, முழு நாட்டையும் போராட்டக்களமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றியதாகவும் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் போராட்டத்தை வெற்றியுடன் முடிக்க முடியும் எனவும் வசந்த முதலிகே மேலும் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இன்று முதல் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

எதிர்கால ஜனாதிபதிகள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தமது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதியுயர் பாதுகாப்பு இல்லமாக இருந்த ஜனாதிபதி மாளிகையின் உள்ளே இருந்த இடம் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உலகிற்கு திறந்து விடப்பட்டதன் காரணமாக.

இதன் காரணமாக எதிர்கால ஜனாதிபதிகளும் பாதுகாப்பின்றி அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்படும் என பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர காலங்களில் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படும் நிலக்கீழ் பதுங்கு குழி உட்பட அனைத்து அறைகளின் இருப்பிடம் உலகறிந்த நிலையில், இது பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளதாக பாதுகாப்பு பிரதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இங்கு தங்கியிருப்பது அடுத்த ஜனாதிபதிக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என பாதுகாப்பு தரப்பினர் கருதுகின்றனர்.

இதன் காரணமாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை தங்க வைப்பதற்கு மற்றொரு பாதுகாப்பு இல்லம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் சில பதிவுகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியிடப்படுவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் ஊடாக சில நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வாக்கு அல்லது அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிப்பதாகவும், அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம், சமூக ஊடகங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளது

இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. இதன்படி லீற்றருக்கு புதிய விலை வருமாறு 

பெற்ரோல் 92 ஒக்டேன் - ரூ. 450/- குறைப்பு 20 ரூபா

பெட்ரோல் 95 ஒக்டேன் - ரூ. 540/- குறைப்பு 10 ரூபா 

 டீசல் - ரூ. 440/- குறைப்பு 20 ரூபா 

 சுப்பர் டீசல் - ரூ. 510/-  குறைப்பு 10 ரூபா 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd