web log free
September 07, 2024
kumar

kumar

புதிய அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (20) காலை, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

முழு விபரம் வருமாறு, 

சுசில் பிரேமஜயந்த - கல்வி

விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

டிரான் அலஸ் - பொது பாதுகாப்பு

ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி

மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்

ரமேஷ் பத்திரண- பெருந்தோட்டம்

நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து

நளின் பெர்னாண்டோ - வர்த்தகம் 

பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையை 25 ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி மேலும் 19 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் அமைச்சரவை உறுப்பினர்களில் பொஹொட்டுக்கு ஏழு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று அமைச்சரவை அமைச்சுகளைக் கொண்டுள்ளது. சமகி ஜன பலவேகயாவுக்கு 3 அமைச்சர் பதவிகளும் உள்ளன.

மேலும், சுயேச்சை சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகும் போது அமைச்சரவை 18 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அது 25 ஆக அதிகரிக்கவுள்ளது.

அண்மையில் சஜித் பிரேமதாசவை சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட உள்ளது.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மே 20 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவுற்றதையடுத்து, ஜூன் 6 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் (20) நிறைவடைகின்றது. இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. பரீட்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையே கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு 121 ரூபா குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது வாகனஙகளுக்கு எரிபொருளை நிரப்ப வேண்டுமாயின் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மானிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டை அடுத்து, நாரஹேன்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வினவி, பில்களை சரிபார்த்து, அந்தக் கூற்றுகள் பொய் என்பதை உறுதிப்படுத்தியதாக தொழிற்சங்க அதிகாரிகள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தனர். 

எம்.பி.க்களுக்கு ஒரு லிற்றர் ரூ.121க்கு எரிபொருள் விற்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் படங்கள் system upgrade இருந்தபோது படமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் இது எரிபொருளை விற்கும் விலை அல்ல என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட நாரஹேன்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது வாகன தாங்கிகளை நிரப்ப விரும்பினால், அவர்கள் வரிசையில் வருமாறும், விசேட முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என, தாம் அறிவித்துள்ளதாக CPC தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்தன.

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் சகல சம்பளங்களும் இடைநிறுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சில சிறப்புரிமைகள் துண்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை 50 சதவீதம் குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்றாடத் தேவைகளுக்கான நிதி திறைசேரியில் இல்லை என்றும், அதற்குத் தேவையான நிதியை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

தற்போதைய நெருக்கடியானது இலங்கையை மட்டும் பாதிக்கும் பிரச்சினையாக இல்லாமல் உலகளாவிய உணவு நெருக்கடியாக மாறும் தருவாயில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச சேவையின் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அவர், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை பிரிமா நிறுவனம் 40 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அந்த விலை அதிகரிப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், 450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி தின்பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விலைகள், இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென அச்சங்கம் அறிவித்துள்ளது.

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்படும்போது அதனை பொலிஸார் தடுக்க வேண்டாமென பொலிஸ்மா அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பொலிஸாருக்கு உத்தரவிட்டனர் என்பதே உண்மை என ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரமேஸ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்படுவதற்கு முன்னர் நான் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை எடுத்து வன்முறைச் சம்பவம் தொடர்பில் எச்சரித்து இதனை பொலிஸார் தடுத்து நிறுத்த வேண்டும் என்றேன். அப்போது இதனை நாம் தடுத்து நிறுத்துவோம் என்றே தேசபந்து தென்னகோன் என்னிடம் கூறினார். எனினும் அலரிமாளிகையில் இருந்து வந்தவர்கள் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டோரைத் தாக்கினார்கள். 

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க எனக்கு தொலைபேசியில் அழைப்பை எடுத்து இது தொடர்பில் கூறியதோடு, உடனடியாக ஜனாதிபதிக்கு இதனை அறிவித்து தடுத்துநிறுத்த வேண்டும் என கூறினார் என்றார்.

அப்போது நான் ஜனாதிபதியுடன் கூட்டமொன்றில் இருந்தேன். அங்குப் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னோடு இருந்தார்கள். உடனே விடயத்தை நான் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதும், அப்போதே தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் நான் காலையிலேயே கூறினேன் தானே இதனை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியதற்கு பொலிஸ்மா அதிபர் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டாமென தனக்கு உத்தரவிட்டுள்ளதாக தென்னகோன் கூறினார்.

இதன்போது ஆத்திரமடைந்த ஜனாதிபதி நானே இந்நாட்டின் ஜனாதிபதி. நான் சொல்கிறேன் இதனை தடுத்து நிறுத்துங்கள் என ஜனாதிபதிக் கூறியதன் பின்னரே பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

எரிவாயுவிற்கான நெருக்கடிக்கு முழுமையான தீர்வு கிடைக்க மேலும் ஒன்றரை மாதங்கள் செல்லுமென லிட்ரோ நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலையினால் ஏற்கனவே நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையின் கீழ் நாளொன்றுக்கு 30,000 சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஓமானிலிருந்து எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று(19) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரமளவில் குறித்த நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக லிட்ரோ தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தலைநகர் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில், இன்று ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
 
இவ்வாறு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 
யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
 
பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.