web log free
July 27, 2024
kumar

kumar

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 14 பேரும் மூன்று ஆண்டுகளுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவர்களை குற்றமற்றவர்களாக கருதி விடுவிக்க மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், அவர்களை விடுவிக்க மாவனெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

பாராளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான பெரும்பான்மை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவியை பெறுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், 40 சுயேச்சை உறுப்பினர்கள் குழு நீக்கப்படும் போது அரசாங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 108 ஆக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட மூவரும், சுயேட்சையாக செயற்படுவதாக தெரிவித்த அரசாங்கத்தின் பத்து பேரும் இணைந்து கொண்டால் அரசாங்கத்தின் பலம் 95 ஆசனங்களாக குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தில் எதிர்க்கட்சிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக 121 வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்நிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க அல்லது அரசாங்கத்தை அகற்றுவதற்கு ஆதரவளிக்கத் தயார் என அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய எம்.பி.க்களின் சுயேச்சைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர்கள், அரசாங்கம் இல்லாமல் நாட்டில் அராஜகம் ஏற்படுவது மோசமான அரசாங்கத்தை விட மோசமானதாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தயார் என்றால் நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஆதரவாக வாக்களிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

இன்று(05) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் மற்றும் சியம்பலாபிட்டி இடையே நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளை பெற்று பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டார். 

பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது.

அதன்படி இன்று பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கு நேற்று (04) நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை நியமிக்க அரசாங்க கட்சி குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரின் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று காலை இடம்பெறும் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 11 சுயேட்சை உறுப்பினர்களும் பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பியர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பியர் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளன

நாளையும் நாளை மறுதினமும் பாராளு மன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தலங்கம பொலிஸ், மிரிஹானவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், சட்டமா அதிபர் திணைக் களம் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக உத்தரவைப் பெற முயற்சித்ததாக சட்டத்தரணி கமல் விஜேசேகர தெரிவித்தார்.

பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கான சிறப்புரிமையை மீறுவதாக பொலிஸார் தெரிவித்ததாகவும், இது நிகழ்வுகளுக்கு தவறான வியாக்கியானம் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு நேற்று தீ வைத்ததாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பாணந்துறை வடக்கு, கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
12 மற்றும் 07 வயதுடைய குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
 
சில தவறுகளுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
பள்ளியின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலீசார் தெரிவித்தனர்.
 
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.