வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான வட்டி வீத அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
வங்கிகளில் குறைந்த வட்டியில் வாங்கிய கடனுக்கு தொழிலதிபர்கள், மக்கள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தலைமையில் நடந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே நிவாரணம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “கடனை செலுத்த எங்களிடம் பணம் இல்லை. பெரிய பட்ஜெட் இடைவெளி உள்ளது. வட்டி விகித உயர்வு தற்காலிகமானது. முதலில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது IMF உடன் பேசி வருகிறோம். ஜனவரிக்குள், இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு சாதகமாக பதிலளிக்கும். கடன் மறுசீரமைப்பு நடந்தவுடன், வட்டி விகிதம் மாறும்.
இதில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வங்கி வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்மைகளை விளக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விரைவான வட்டி வீதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள் குறுகிய காலத்திற்கு தமது கடனுக்கான வட்டியை மாத்திரம் செலுத்துவதற்கு உரிய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு ஆலோசனைக் குழுவிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
நேற்றைய தினம் வாகனேரி கண்டத்து வயல்களுக்கு நீர்பாச்சுகின்ற ஆறுகளிலும், வயல்களிலும், அணைகட்டுகளிலும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
அத்துடன் அதனை பார்வையிட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்;
சட்டவிரோத மண் அகழ்வு. வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இவ்வாறான மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றது.
இது பாரிய அளவில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது. பின்னணியில் யார் உள்ளார். மாவட்டத்தில் இரண்டு அரச சார் அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கான அமைச்சர் உள்ளார்.
பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணிகள் அரச காணிகள் வனத்துறைக்கு சொந்தமான காணிகள் என கையகப்படுதிவிட்டு. சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் வள சுரண்டல்களுக்கு இடமளிக்கின்றார்கள்.
ஆனால் அங்குள்ள மக்கள் காட்டுக்குள் விறகு வெட்டுவதற்காக செல்லும் வேளை வன பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தண்டனை உட்பட இருபதாயிரம் மட்டில் அபராதமும் செலுத்தியுள்ளார்கள்.
இவை இப்படி இருக்க மிகவும் வெளிப்படையான முறையில் மண் அகழ்வானது இடம்பெறுகின்றது. வனத்துறையினருக்கு சொந்தமான காணியில் மண் சேமிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது.
இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா? மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் இதுதான்.
இவ்வாறான விடயங்கள் வெளியில் வரும் என்னும் பயமே காரணம். மண் அகழ்வுக்கு எமது மாவட்ட இரு அமைச்சர்களும் பின்னால் உள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்புக்கு என கட்டப்படுள்ள வரம்பை உடைத்து அதன் மூலம் கடத்துகின்றனர்.
அடுத்ததாக இங்குள்ள அரசியல் வாதிகள் தமது அரசியல் சுயலாபம் மற்றும் சுயநலம் கருதி தமிழ் முஸ்லீம் என பாகுபாடு காட்டி மக்களை பிரித்துவிட்டு இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் ஒன்றாக செயல்படுகின்றார்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பக்கமாக பிரித்து மக்களுக்கு சொந்தமான வளங்கள் சூறையாடப்படுகின்றது.
இவ் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் அல்லாதுவிடில் எமது மக்களும் எதிர்கால சந்ததியும் நிர்க்கதியாகுவது வெகு விரைவில் நடைபெறும். என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்ஸ நிகழ்வொன்றில் இன்று (நவ.18) கலந்துக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இவ்வாறு கலந்துக்கொண்டிருந்தார்.
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், ஜுலை மாதம் 13ம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஸ, ஜுலை மாதம் 14ம் திகதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அதன்பின்னர், நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்ஸ பொது நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவில்லை.
எனினும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராக சுப்ரமணியம் சுவாமியுடன், கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது.
அதனைத் தொடர்;ந்து, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் பொது வெளி நிகழ்வொன்றிற்கு முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்ஸ கலந்துக்கொண்டுள்ளார்.
பொதுவாகவே பெண்கள் பூவைப்போல ரொம்ப மென்மையானவர்கள் என்கிற கருத்து வெகு நாட்களாகவே உலவிவருகிறது. பெண்களின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில பெண்கள், தங்களை வெளிப்படுத்த தயக்கங்களோடும் பயத்தோடும்தான் இருப்பதை மறுக்கமுடியாது. எனவே பெண்களுக்கு மிகவும் தேவையான குணங்களில் ஒன்று “மனவலிமை”. எப்போதும் எந்த ரூபத்திலும் பெண்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடிய சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே பெண்கள் வீட்டிலும் வெளியிலும் சாதிக்க மனவலிமையோடு இருப்பது அவசியம். அதற்கு அடிப்படையான 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?
எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், எதிர்விதமான விமர்சனங்கள் எழுவது இயல்பு அதிலும் பெண்கள் என்றால் அவை இரட்டிப்பாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் மீதான விமர்சனங்களை கடந்து வரவேண்டும். உங்களுக்கு உடன்பாடு இல்லாத விஷயம் முன்வைக்கப்பட்டால் துணிவோடு விமர்சனம் செய்யவும் தயங்கக்கூடாது. அதே போல் நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையுமே பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வதில் தான் உங்களின் மனவலிமை அடங்கி உள்ளது.
2. உங்களிடம் உள்ள திறமைகளை யாருக்காகவும் எவருக்காகவும் வெட்கப்பட்டு மறைக்கவோ, ஒடுக்கவோ செய்யாதீர். நம் திறமைகளை முதலில் அங்கீகரிக்கும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. வெட்கம் எனும் தேவையற்ற சுமையைத் தூர எறியுங்கள்.
3. இலக்கை அடைவதற்கு தெளிவான சிந்தனை மற்றும் சோர்வில்லாத செயலும் மிகவும் முக்கியமானது. இவை சரியாக இருப்பதில் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு பெரிய பங்கு உண்டு. எனவே, பழகும் நபர்களைப் பற்றி நேர்மறையாகவோ எதிர்மறையாகவே முடிவெடுக்காதீர்கள். அவர்களின் செயல்களை ஊன்றிக் கவனித்து, தெளிவாக புரிந்துகொண்டுப் பழகுங்கள்.
4 .உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பிறரிடம் பேசும்போதும், அது எவ்வளவு கொடுமையானதாகவோ, கவலைத் தரக்கூடியதாக இருந்தாலும் உண்மையை மட்டுமே பதிவு செய்யுங்கள். ஏனெனில், இந்த உண்மைதான் உங்களின் மனவலிமையையும், தைரியத்தையும் அதிகரிக்கும்.
5. உங்களின் உள்ளுணர்விற்கு மதிப்பு கொடுங்கள். ஏனெனில், பெரும்பாலான சமயங்களில் அவை மிகச் சரியாகவே அமையும். ஒருவேளை உங்களின் உள்ளுணர்வும் நடப்பவையும் ஒரு சேர சரியாக அமைந்தால் உங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அது நாம் எடுக்கும் முடிவுகள் சரிதான் என்ற மன தைரியத்தைக் கொடுக்கும்.
6. மனவலிமையோடு வாழ்வதென்பது, பிறரிடமிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதல்ல. பலரின் மத்தியிலும் நானும் ஒரு தனி இடத்தை பிடித்து காட்டுவேன் என்பதுதான். எனவே ஒரு உதவி தேவைப்படும் நேரத்தில் ஒரு நண்பனிடமோ சகோதரனிடமோ உதவிகள் கேட்பதோ தவறல்ல.
7. முதலில் உங்களை நேசிக்க பழகுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். அதற்கு எதிரான பழக்கங்களை விட்டொழியுங்கள். உடல் ஆரோக்கியமாக இருப்பது நம் கனவுகளை நாம் அடையவதற்கு முக்கியமாக உதவும். உடல் வலிமை என்பது மன வலிமை சிறக்க மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
8. நீங்கள் உங்களின் கருத்துகளை எங்கே பதிவு செய்தாலும், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்த முடியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதையும் மீறி அதில் ஏதேனும் குறை கூறினால், அந்தக் குறை நியாயமானதாக இருப்பின் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டாதீர்.
9. தனிமையில் பயணம் செய்யும் போது, உங்களைச் சுற்றி ஆண்கள் மட்டுமே இருந்தால் பயமோ, மிரட்சியோ கொள்ள வேண்டாம். அவர் ஓர் ஆண்' எதிர்பாலினம் மட்டுமே. அவருக்கு எந்த வகையிலும் நான் குறைந்தவள் அல்ல என்ற எண்ணத்தை முதலில் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.
10. கணவன், குழந்தைகள் என எல்லாவற்றையும் தாண்டி உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கென மட்டுமே சில ஆசைகள் இருக்கக்கூடும். அதை நிறைவேற்றிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில்தான் உங்களின் மனவலிமை ஒளிந்து கொண்டிருக்கிறது.
எவரும் பிறக்கும்போதே மனவலிமையோடும் தைரியத்தோடும் பிறப்பதில்லை. பிறந்து, வளர்ந்து, வாழும் வாழ்கைச் சூழல்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றது. இது, ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். எனவே தன்னம்பிக்கையும் மன வலிமையையும் வளர்த்துக்கொள்வது நம்முடைய பயிற்சிகளும் முயற்சிகளும்தான் என உணருங்கள். துணிச்சலோடு செயல்பட்டால் வெற்றி உங்களின் மிக அருகில்தான்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பொரளை புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
இன்று காலை சிறைச்சாலைக்கு வந்த அவர் வசந்த முதலிகேவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
கொழும்பு, மல்பாரா பகுதியில் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
சிறையிலுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இதனையடுத்து கொழும்பு பௌத்தலோக மாவத்தையை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தற்பொழுது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான ஊரகஹ இந்திக்கவின் அடியாட்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
24.08.2022 அன்று ஊரகஹா பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு 19.10.2022 அன்று யக்கலமுல்ல பொலிஸ் பிரிவில் 04 நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் மிலன் கோசல (ஜுண்டா) மற்றும் கமகே திலுகா (முலா) ஆகிய இருவரும் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
T-56 ரக துப்பாக்கி, 01 12 போர் வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அளுத்கம தர்கா நகரில் இருபத்தைந்து வருடங்கள் பழமையான அரச மரத்தை வெட்டிய மூன்று பௌத்த மதத்தினர் உட்பட ஏழு பேரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த ஏழு பேரும் இணைந்து ஒரே முடிவின் பேரில் தர்கா நகரில் உள்ள அம்கஹா சந்திப்பில் உள்ள இந்த அரச மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.
இது தொடர்பில், பௌத்த தேரர் மற்றும் பிரதேசவாசிகள் பலர் அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி சம்பவம் தொடர்பில் மூன்று சிங்கள பிரஜைகளும் நான்கு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களின் இந்த செயல் இனவாத கலவரமாக உருவாகியுள்ளது.
பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் தலையீட்டினால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமையினால் வெட்ட முற்பட்டதாக பொலிஸார் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய அளுத்கம பொலிஸார், இவர்களது நடவடிக்கையினால் தேசிய இன நல்லிணக்கம் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியுள்ளனர்.
ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த களுத்துறை நீதவான் நீதிமன்றம் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளது.
திலினி பிரியமாலியுடன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன தனது தொடர்புகளைப் பயன்படுத்தி விளக்கமறியலில் உள்ள கைதிகளின் அறைகளை மாற்றியமைப்பதாக சுதந்திர ஊடகவியலாளரும் முன்னாள் விமானப்படை அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .
யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜானகி சிறிவர்தன சிறைச்சாலையில் அதிகாரங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
ஜானகி சிறிவர்தன முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபியுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு பிரஜையான பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு சமகி ஜன ஜனபலவேகவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (17) கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பிரஜை அல்லாத குறித்த எம்.பி.யை உடனடியாக குடிவரவு திணைக்களத்தின் மிரிஹானே தடுப்பு மையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து நாடு கடத்த வேண்டும் என ரகுமான் தெரிவித்தார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு பிரஜையாக இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு அளுத்கடை நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளது.
அவர் 2014 ஆம் ஆண்டு பெற்ற வதிவிட விசா மற்றும் அந்த வீசா 2015 ஆம் ஆண்டு ஏழாவது மாதத்தில் காலாவதியானது. இவ்விடயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அரசாங்கம் தெளிவாக மறைத்துள்ளதுடன், இவ்விடயத்தை ஆராய்ந்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.