web log free
September 15, 2025
kumar

kumar

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலையங்களில் மார்ச் மாதத்தின் பின்னர் மிகக்குறைந்த தங்க விலை பதிவாகியுள்ளது. அதற்கமைய, 22 கரட் தங்கத்தின் பெறுமதி 160000 ரூபாயாகவும், 24 கரட் தங்கத்தின் விலை பெறுமதி 174000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முதலீடாக தங்கத்தை கொள்வனவு செய்தவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் இது பாவனையாளர்களுக்கு சாதகமான நிலைமை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த வெற்றி என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.

"சமூக நீதிக்கான தேசிய இயக்கம், இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக தொடர்ந்து வாதிடும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சிவில் மற்றும் அரசியல் சக்திகளுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

இலங்கையை சதிகார ஆட்சிக்கு மாற்றும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து 22ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியுள்ளது என்றார்.

"முன்னாள் ஜனாதிபதியின் அபிலாஷைகளை அடைவதற்காக 20A அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்த ஒரு அமைப்பாக நாங்கள் முன்னின்று செயல்பட்டு உள்ளேன் .

“இன்று பாராளுமன்றத்தால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானமானது ஒரு மிக முக்கியமான இடைக்கால அரசியலமைப்பு சீர்திருத்தமாக நாங்கள் கருதுகிறோம், இது புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதன்படி, இதை குறிப்பிடத்தக்க சாதனையாக கருதுகிறோம். சமூக நீதிக்கான தேசிய இயக்கம், மக்களுக்கு கண்ணியம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பிற்காக எப்போதும் அசைக்காமல் நிற்கிறது.

இத்தருணத்தில், அனைத்து அரசியல் சக்திகளும் இந்த சாதனையால் வலுப்பெற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டை மக்களின் நலனுக்காக எடுத்துச் செல்லும் இந்தப் பணியில் முன்னின்று செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், நாட்டில் இருந்து பாரிய ஊழலை ஒழிப்பதற்கும் தொடர்ந்து முன்னின்று செயற்படும்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான மூலப்பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும் மேல்முறையீடுகளைத் தொடர்ந்து 700 தயாரிப்புகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

"அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வாகன உதிரி பாகங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்தந்த துறைகளில் உள்ள தனிநபர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நீக்கப்படும்" என்று அவர் கூறினார்

இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

"இந்த எம்.பி.க்கள் அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்தால், அவர்கள் பதவி விலக வேண்டும்," என்று அவர் கூறினார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மீண்டும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.

எதிராக எந்தவித வாக்குகளும் அளிக்கப்படவில்லை. ஒருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தார்.  

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் வாகனம் , பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஏலத்தில் இறக்குமதி செய்த நபருக்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூலமான கோரிக்கை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இன்று (21) பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதற்கு முன்னர் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியதுடன், அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

பின்னர் அது பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் நடந்த பொது ஏலத்தில், சம்பந்தப்பட்ட காரை இறக்குமதியாளரே வாங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடி அறிக்கையை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

2022ஆம் ஆண்டுக்கான  கல்வி விதிமுறைகளை திருத்துவதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தவறான செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்கும், அந்தத் தவறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில் பணிகளை முன்னெடுப்பதற்கும் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது.

அதன்படி கட்சியை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் முதலில் கட்சிக்குள் ஜனநாயகம் உருவாக்கப்பட வேண்டும், கட்சிக்கு மத்திய குழுவும் செயற்குழுவும் இருக்க வேண்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கு கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ளது. 

ராஜபக்ச குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்பது தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய அதனை விரும்பவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஆனால் ராஜபக்ஷக்கள் அதிகளவான மக்களுக்கு அமைச்சரவை அமைச்சர்களை வழங்கியதாகவும் இவை தவறான தீர்மானங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு பசில் ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்களில் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

"அவரும் ஒப்புக்கொள்கிறார். அவரும் அந்த விவாதங்களுக்கு வந்தார். அது இல்லாமல் சாத்தியமில்லை. இதை செய்யவில்லை என்றால் இந்த கட்சியே உடைந்து விடும். இத்தனை விஷயங்களுக்குப் பிறகும் கட்சிக்கு புரியவில்லை என்றால் கட்சி இன்னும் உடைந்து விடும். நான் புரிந்து கொண்ட வரையில், கட்சியில் இந்தக் கருத்துக்காக நான் பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறேன். எனது நாவலப்பிட்டி சந்திப்பில் எமது செயற்பாட்டாளர்களை நான்கு கதைகளை கேட்க வைக்கிறேன். பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர ஆகியோர் பேசுகின்றனர். ஒருவர் நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுகிறார். அடுத்தவர், நாட்டில் ஊட்டச்சத்து உணவுப் பற்றாக்குறை ஏற்படுமா என்று பேசுகிறார். எரிபொருள் நெருக்கடி பற்றி காஞ்சனா பேசுகிறார். நாம் புதிய வழியில் செல்ல வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செல்ல வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்பு போல் தொடர்ந்தால், நம் வாழ்வில் அரசுகளை உருவாக்க வேண்டியதில்லை. எனவேதான் கட்சியின் இளைஞர்களுக்கு பதவி வழங்க வேண்டும். புதிய முகத்தைப் பெற வேண்டும். இந்த சம்பவங்களின் பின்னர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற குழு பசில் ராஜபக்ஷ உட்பட அனைவரையும் சந்தித்தோம். அங்கே நாம் பேசியதைச் சொன்னேன். பசில் ராஜபக்ஷவும் அதனை ஏற்றுக்கொண்டார். ரமேஷ் பத்திரன, காஞ்சனா விஜேசேகர போன்ற இளைஞர்களுக்கு கட்சியில் இடம் கொடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ நல்லவர். மேலும் மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். கட்சிக்கு புதிய முகத்தை கொடுத்து, புதிய வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும்" என்றார். 

தன்னம்பிக்கையை அடைவதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் வியாழன் அன்று இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அதன் பாதுகாப்புப் படையினர் இந்தியாவில்  பயிற்சிகளுக்கு பெயரளவிலான கட்டணத்தை செலுத்த முடியவில்லை  இணை அமைச்சர் அஜய் பட் சுட்டிக்காட்டினார்.

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தோனேசிய நாட்டில் அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்தோனேசியா கூறுகையில், "திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்துகிற (நச்சு) பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் இறந்துள்ளன" என தெரிவித்தது. மேலும், இந்தோனேசிய சுகாதார மந்திரி புதி குணாதி சாதிகின் கூறுகையில், " 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில (நச்சுத்தன்மை கொண்ட) டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது" என தெரிவித்தார். இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd