web log free
July 27, 2024
kumar

kumar

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து தற்சமயம் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.  

மருதானை, டெக்னிக்கல் வீதி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஆர்ப்பாட்ட பேரணியில் வருவோர் காலி முகத்திடல் போராட்டக் களத்திற்குச் செல்வர் என தெரிவிக்கப்படுகிறது. 

இன்று இடம்பெறவுள்ள போராட்டங்களை தடுப்பதற்கு பொலிஸாரால் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டு நிரந்தர வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு திடீரென இந்த வீதி தடுப்புகள் அமைக்கப்பட்டன.

பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக இன்று கொழும்பு நோக்கி வருகை தருகின்றனர். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த சுயாதீன குழு, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.  

நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையுமாயின், இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பிலான திட்டங்கள் குறித்தும் அந்தக் குழு கலந்துரையாடியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 20க்கு கீழ் மட்டுப்படுத்திக்கொள்வது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது.

 

இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் தானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவித்துள்ள அவர் என்னுடனோ அல்லது அமைச்சர்களுடனோ பேச்சுவார்த்தைகளிற்கு வராதவரை அவர்கள் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினால், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குணவர்தனவுக்கு பிரதமர் பதவியைத் தவிர வேறு அமைச்சுப் பதவியும் வழங்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

அவர் தற்போது மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அவைத் தலைவராகவும் உள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளதாக அக் கட்சின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று கூடிய கட்சியின் உயர்பீடமே இந்த முடிவை மேற்கொண்டதாகவும் ,வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் கட்சியின் ஒழுக்கத்தை மீறியதற்காக நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளதாகவும் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டரீதியாக இதனை உறுதிப்படுத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கு சதொச ஊடக பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
 
சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனது செய்ய முடியும்
 
ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நடிகை குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை, ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.

நாட்டில் அதிக பிரபலம் வாய்ந்த அரசுத் தலைவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இந்த பிரமுகர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு முதல் பரவி வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தேடுதலில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதியானது.

குறித்த பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று அவரது பேச்சாளர் கூறினார்.