web log free
May 08, 2024
kumar

kumar

சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் குபேரனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள்.


தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.


குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

அரசியல் தீர்வு கேட்கும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் இன்று அவர் மேலும் உரையாற்றுகையில், 

நாட்டில் நாளுக்கு நாள் புதிது புதிதாக பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன.
குறிப்பாக சிறுபான்மை தமிழ் மக்களின் அபிலாஷைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் தீர்வு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இநதநிலையில்அதிகாரப்பரவலாக்கம் இன்றியமையாதது என இந்தியா கூறி கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

நாட்டின் இனப்பிரச்சினைக்கான தற்காலிக தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இன்று அந்த மாகாண சபை முறையையும் முழுமையாக அமுல்படுத்தாத நிலையே காணப்படுகிறது. மாகாண சபைகள் கலைக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகி -. இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது.

தேர்தலை நடத்தினால் தோல்வி நிச்சயம் - என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல இழுத்தடிப்பு செய்து வருகிறது. உள்ளூராட்சி சபை தேர்தல் பிற்போட பட்டது போன்று - மாகாண சபை தேர்தலையும் - பிற்போடும் நாடகத்தை - அரசாங்கம் அரங்கேற்றி வருகிறது. என்னதான், நாடகம் அரங்கேற்றினாலும் - இந்த அரசாங்கத்திற்கு மூட்டை - முடிச்சுகளை கட்டிக் கொண்டு - வீட்டுக்கு செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

தேர்தல் நடத்த சட்டப்பிரச்சினை இருந்தால் - அதற்கான திருத்தத்தை - பாராளுமன்றுக்கு கொண்டு வாருங்கள் -. அதற்கு நாங்கள். பூரண ஆதரவு தருகிறோம் -. பின்னர் தேர்தலை நடத்துங்கள் -. அந்த தேர்தல் இந்த அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும்

நடைமுறையிலுள்ள அவசரகால சட்டமானது - இலங்கை மனித உரிமைகளை மீறும் நாடு - ஜனநாயகத்தை மதிக்காத நாடு - என்ற அவப்பெயரை சர்வதேச அளவில் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

நாட்டில் அசாதாரண யுத்த சூழ்நிலை காணப்பட்ட போது பயங்கரவாத தடை சட்டம் அமலில் இருந்தது. ஆனால்,,இன்று அதற்கான தேவை இல்லை
அப்படி இருக்கும்போது – அரசாங்கம் இந்த பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்தி - ஜனநாயக குரல்வளையை நசுக்க பயன்படுத்தி வருவதை காணமுடிகிறது.

தற்காலத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக கைதுசெய்யப்பட்ட சிலர் - வழக்கு விசாரணையில் நிரபராதிகள் ஆக விடுவிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் - நீதிமன்றத்தின் மூலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சர்வதேச அழுத்தங்களின் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தில் - ஒரு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ள போதும் - முக்கிய விடயங்களில் திருத்த முன்மொழிவுகள் உள்ளடக்கப்பபடவில்லை எனினும், இந்த சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.

நாட்டில் இன்று எரிபொருள் விலை மீண்டும் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் - தட்டுப்பாடு ஏற்படும் பொருட்கள் பட்டியலில் கடதாசியும் இணைந்துள்ளது.. அத்துடன், கடதாசி தாங்கிய சுமார் 8 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் வாங்குவதற்கு மாத்திரம் - ஏனைய நாடுகளை நாடிச் செல்லாமல் அங்கு முன்னெடுக்கப்படும் சிறந்த திட்டம் குறித்தும் கவனம் செலுத்தி அதனை செயற்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, எமது அண்டைய நாடான இந்தியாவின் அண்மையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்
தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டு டிஜிட்டல் வரவு செலவுத் திட்டமாக முன்வைக்கப்பட்டது. இங்கு எவ்வித கடதாசி பயன்பாடும் இன்றி செலவீனம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற திட்டங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

நாட்டில் தற்போது கேஸ் வெடிப்பு நாடகம் ஒத்திவைக்கப்பட்டு தற்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத அரிசி விலை காரணமாக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். இந்த அரசாங்கத்தால் இன்னும் அரிசி விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கும் கொரோனாவை காரணம் காட்டி தற்போது வௌிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன - அவற்றில் சுமார் 500 அரிசி கொள்கலன்களும் அடங்கும்.

நாட்டில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் கொரோனாவை காட்டி நழுவிச் செல்லும் கைங்கரியத்தையே அரசாங்கம் கையாண்டு வருகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டு்ள்ள பொருளாதார நெருக்கடி கொரோனாவால் ஏற்பட்டதல்ல - கடனால் ஏற்பட்டது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க அந்த அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு பணம் அச்சிட்டதே காரணம் என்பதுடன் பணம் அச்சிடுவதில் சாதனை படைத்துள்ள அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் இதுவரை ஒரு லட்சத்து 49 அயிரத்து 905 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்ததுடன் - பொருட்களின் விலையும் அதிகரித்து - கடன் சுமையும் அதிகரித்துள்ளது.

தெ்ற்காசியாவில் பணவீக்கம் அதி்க்ம் உ்ள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது - அதேபோல ஆசியாவில் பணவீக்கம்
வேகமாக அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் ஆசியாவிலேயே இலங்கை தான் முதலிடத்தில் உள்ளது. அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் மற்றும் முடிவுகள் காரணமாக நாட்டு மக்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். எனவே, மக்களின் இந்த கஷ்ட நிலையை கருத்திற் கொண்டு - அரச ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு - தனியார் ஊழியர்களுக்கும் - 500 ரூபா பெறுமதியான கோதுமை மா கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ள - பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா வழங்கப்பட வேண்டும்.

இந்நிலையில் நாட்டை முன்னேற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால், இலங்கை CCC தரத்திலிருந்து CC தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. உலக நாடுகளில் 'பட்டினி' மதிப்பீட்டு தரவரிசைப்படுத்தலில் 116 நாடுகளில் இலங்கை 65 வது இடத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை 129-ஆவது இடத்தில் உள்ளது.
TRANSPARANCY INTERNATIONAL நிறுவனத்தால் 2021 ஆம் ஆண்டுகான ஊழல் மதிப்பாய்வு தரவரிசையில் இலங்கை 94ஆம் இடத்தில் இருநது
102ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

டிசெம்பர் மாதத்தில் 3.3 பில்லியன் அன்னிய செலவாணி கையிருப்பில் இருப்பதாக மார்த்தட்டிய அரசாங்கத்திடம் தற்போது அது சுமார் 2 பில்லியனாக குறைந்துள்ளதுடன் அதில் அமெரிக்க டொலர் கையிருப்பு 1 பில்லியனை விட குறைவாகவேயுள்ளது. தற்பொது இந்தியாவின் உதவியும் ஒத்துழைப்பும் மாத்திரமே எமக்கு உந்து சக்தியாக உள்ளது. எல்லாம் நடந்து முடிந்து - மூக்கு மூழ்கு அளவிற்கு - தண்ணீர் நிரம்பிய பின்னர் - உதவியை நாடுவதற்கு ஒப்பாக - இந்த அரசாங்கம் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்த பின்னர் - தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்கிறது.

ஆரம்பத்தில் கொரோனா பரவலின் போது, விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளாது - ஆற்றில் பானையை வீசியது போலவே பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்த பின்னர் தற்போது தான் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்கின்றனர். இப்படியே தான்தோன்றித்தனமாக அரசாங்கம் செயற்பட்டு - நாட்டு மக்களை இறுதியில், எங்கே கொண்டு நிறுத்தப்போகிறது - என்ற அச்சத்துடன்- சந்தேகத்துடன் - எனது உரையை முடிக்கிறேன்." இவ்வாறு கூறினார். 

 

ஹலிஎல டீன்புர அம்போக்க பகுதியில் 14 வயதும் 7 மாதமும் நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 4 மாதம் கர்ப்பிணியாக்கிய 42,36,28 வயதுகளை உடைய மூன்று நபர்களை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டபோது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

விடயத்தை அறிந்திருந்தும் குறித்த சிறுமியின் தாயார் மறைத்துள்ளார்.

இதனால் சிறுமியின் தாயாருடன் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்த ஹாலிஎல பொலிஸார் சந்தேக நபர்களை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் சந்தேக நபர்களை 14 நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பலபிட்டிய, கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் கணவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று மீனவராக தொழில் செய்து வருகிறார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கணவர் அவரை அடித்து, அவரது சீருடையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

M.W. ராஜசிங்கம் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் Solve Xi அணி NCC அகாடமி அணியை தோற்கடித்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

M.W. ராஜசிங்கம் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த பெப்ரவரி 6ம் திகதி அன்று NCC மைதானத்தில் 50 ஓவர்கள் போட்டியாக இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சோல்வ் Xi அணி 48.3 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்த அணியைச் சேர்ந்த செல்வராஜன் ருஷாந்தன் மற்றும் மகாதேவன், கோபியன் ஆகியோரின் பெறுமதியான ஓட்டங்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தனர். 

இந்த சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய NCC அணி ஒரு கட்டத்தில் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது, ஆனால் ஹன்சஜா குணசேகர மற்றும் அஷான் ஹப்புஆராச்சி ஜோடி இணைந்து பொறுப்பை ஏற்று ஐந்தாவது விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை குவித்தது.

ஹன்சஜாவின் ஆட்டமிழப்புடன் பின்னடைவை சந்தித்த NCC அணி அதன் தலைவர் விமுக்தி பண்டார மற்றும் ஷமல்க ஹேஷான், நுவான் ஜயரத்ன மற்றும் நிமேந்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதும் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் NCC அணி 209 ஓட்டங்கள் பெற்று தோல்வியடைந்தது. 

சோல்வ் பவுண்டேஷனின் தலைவி பவதாரணி ராஜசிங்கம் வடக்கிலிருந்து இந்த அணியை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன் தனது கணவர் தீபன் ராஜசிங்கத்துடன் இணைந்து திறமையான யாழ். இளைஞர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்தார். 

NCCயின் வாரியம் மற்றும் அதிகாரிகளுக்கும் குறிப்பாக அசோக டி சில்வா, லலித், திலக் மற்றும் பிரான்கி ஆகியோருக்கு வடக்கிலிருந்து சோல்வ் Xi க்கு எதிராக கொழும்பில் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

போட்டி நிலவரம் வருமாறு, 

சோல்வ் Xi அணி - 48.3 ஓவர்களில் 217 /10

ஜெலாம் கோபியன் 47,

ஜெயக்குமார் சஞ்சீவன் 48,

அந்தோணி அருண்பிரகாஷ் 45,

செல்வராஜன் ருஷாந்தன் 11,

மகாதேவன் கோபியன் 15 நாட் அவுட்,

பந்து வீச்சில் NCC சார்பில்

சசிந்து கவிதிலக 2/17,

அஷான் 7/39,

நுவின் 7/39

விமுக்தி பண்டார 3/28)

NCC அகாடமி - 50 ஓவர்களில் 209/9

ஹன்சஜா குணசேகர 69,

அஷான் ஹப்புஆராச்சி 44,

விமுக்தி பண்டார 19,

ஷமல்க ஹேஷான் 14,

நுவான் ஜெயரத்ன 10,

நிமேந்திரா 12

பந்துவீச்சில் சோல்வ் Xi அணி சார்பில்

நிரியநாதன் நிருக்ஷன் 2/38,

பிரதீப் 2/34)  

 

 

 

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் ஏற்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்துவரும் வடக்கு முதல் தெற்கு வரையான கையெழுத்து பெறும் திட்டத்தின் அடுத்தக் கட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி 281ம் இலக்க முகவரியில் உள்ள சமூக கேந்திர நிலையத்தில் பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நியாயம் கோரும் வகையில் மலையக அரசியல் அரங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

நுவரெலியா, யாழ்ப்பாணம் என பல மாவட்டங்களிலும் இவ்வாறு கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் பிரநிதிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பாரியளவில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த கூட்டணி தெரிவித்துள்ளது.


எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த போதிலும், விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிப்பார்கள் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என்றும் இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதன்படி, எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் வெகுவிரைவில் கணிசமான அளவு அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுமென்று என்றும் வன்முறையை தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் உடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவர்கள் விவகாரத்தில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக இரு தரப்பு மீனவர் குழுக்களிடையே விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினார்.

மேலும், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

சம உரிமை, அமைதி, நீதி மற்றும் மரியாதை, இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனக் கூறிய மத்திய அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஆதரவான கருத்துகளுக்கு அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

"இது எங்கள் வீட்டுப் பிரச்சினை. இதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஒவைஸி பேசினார்.

“பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் ஒன்றை சொல்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என பார்க்காதீர்கள், அங்கேயே பாருங்கள். உங்களுக்கு பலூச்சிஸ்தான் பிரச்சினை, உள்நாட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை பாருங்கள். இந்த நாடு என்னுடையது. இது உங்களுடையது அல்ல. இது எங்கள் வீடு. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்க முயன்றால் காயமடையும் என்று ஒவைஸி எச்சரிக்கும் வகையில் பேசினார்.

 

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டில் நஞ்சு அருந்தி சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை தற்கொலைக்கு காரணம் தனது செயற்பாடு என்று அயலவர்கள் பேசத்தொடங்கியதால் சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.