web log free
May 19, 2024
kumar

kumar

கொடதெனியாவ வனாத்தமுல்ல பிரதேசத்தில் அல்கொய்தா எனப்படும் கும்பலால் மக்கள் துன்புறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் பீதியடைந்துள்ளது.

இதனால் அச்சம் காரணமாக அப்பகுதி மக்கள் மாலை வீடுகளின் கதவு, ஜன்னல்களை பூட்ட நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த 15ம் திகதி, மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுமிகளைக் கொல்ல முயன்ற குண்டர் கும்பல், அதைத் தடுக்க வந்த வயதான தம்பதியினரைத் தாக்கியது கிராம மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது.

அதன் பின்னரே அப்பகுதி மக்கள் இதனை உடனடியாக நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர்.

எவ்வாறாயினும், அல்கொய்தாவுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அல்கொய்தா உறுப்பினர்களை கைது செய்தமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கொடதெனியவில் இடம்பெற்றது.

இதில் பிரதேச மகா சங்கத்தினர், சமூக பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை லலிதாவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெனியாய − விஹாரஹேன பகுதியில் இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விஹாரஹேன − அடாரதெனிய பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகளுக்காக, வீதியின் இரு புறத்திலும் உள்ள மண்மேடுகளை வெட்டிய போது, அடாரதெனிய முச்சந்தியில் இந்த சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு சுரங்கப் பாதைகளும் ஒரே இடத்தில் ஆரம்பமாகும் அதேவேளை, சுரங்கப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் வீடுகள் கிடையாது என தெரிய வருகின்றது.

எனினும், சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதைகள் எந்த காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது? அவ்வாறு இல்லை என்றால் இயற்கையாகவே உருவானதா? என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, இந்த சுரங்கப் பாதை குறித்து ஆய்வுகளை நடத்த இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என அந்த பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

வௌிநாடுகளுக்கு செல்வோருக்காக போலியாக PCR அறிக்கைகளை தயாரித்த மூவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 33 மற்றும் 28 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வைத்தியசாலையொன்றின் பெயரைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் போலியாக PCR அறிக்கைகளை தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

டொலர் நெருக்கடி உருவாகுவதற்கு முன்னர் இலங்கைபெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் மூன்று வாரங்களிற்கான எரிபொருள் கையிருப்பு இருப்பது வழமை ஆனால் தற்போது ஐந்து அல்லது ஆறு நாட்களிற்கே எரிபொருளை சேமிக்க முடிகின்றது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாப அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த ஊகங்கள்காணப்பட்டன ஆனால் மத்திய வங்கி உட்பட ஏனைய வங்கிகளின் உதவியுடன் நாங்கள் இதுவரை வந்துள்ளோம் ஆனால் தற்போது தீர்க்கமான கட்டத்தில் உள்ளோம் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கேடி ஒல்கா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிற்சாலைகள் மற்றும் போன்றவற்றிற்கான நாளாந்த தேவை 6000 மெட்ரிக் தொன் ஆனால் தற்போது இது 9000 தொன்னாக அதிகரித்துள்ளது.

மின்சக்திதுறைக்கே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

மேமாதம் வரையிலான வரட்சிக்காலங்களில் நீரை சேமிக்க முயல்கின்றோம்,

ஆறுமாதங்களிற்கு முன்னர் 15 முதல் 21 நாட்களிற்கு எரிபொருளை சேமிக்கும் நிலையிலிருந்தோம்,நுரைச்சோலைமின்நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதும் எரிபொருளை சேமிக்க முடியாத நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது ஐந்து ஆறுநாட்களிற்காக சேமிப்பே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

88 இணைப்புகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியப் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அறிக்கை இன்று நாடாளுமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக இது கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டவளை ரொசல்ல - ஹைட்ரி விகாரையின் பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20ஆம் திகதி விகாரைக்கு சென்ற மாணவனுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவனின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இல்லாமை காரணமாகவே, மின்சாரம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, 2 தொடக்கம் 3 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையான காலப் பகுதிக்குள் இந்த மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிடுகின்றார். 

மேஷம்-எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் மடல் மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியமொன்று இனிதே முடியும். வழக்குகள் சாதகமாகும். உத்யோக முயற்சி கைகூடும்.


ரிஷபம்-கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். உடல் நலத்தில் இருந்த சோர்வுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.

மிதுனம்-நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பிறர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.

கடகம்-தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். உறவினர் பகை மாறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

சிம்மம்-அஞ்சல் வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.


கன்னி-எடுத்த காரியங்கள் எளிதில் வெற்றி கிட்டும் நாள். செல்வநிலை உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். புண்ணிய காரியங்களுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள்.

துலாம்-கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

விருச்சகம்-முன்னேற்றம் கூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். தொலைபேசி வழியே தொழில் முன்னேற்றம் தகவல் வந்து சேரும்.

தனுசு-பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலத்தில் சிறுஇடையூறுகள் ஏற்பட்டு அகலும்.

மகரம்-வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி எடுக்கும் நாள். நண்பர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர். வெளிநாட்டுப் பயணம் விரும்பியபடியே கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும்.


கும்பம்-சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பப் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடக்க முற்படுவீர்கள். உத்தியோக நலன்கருதி பயணமொன்றை மேற் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்-உணர்ச்சிவசப்படுதவன் மூலம் உறவுகள் பகையாகும் நாள். சிரித்துப்பேசும் நபர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த 200 வருட பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டிலிருந்து தலவாக்கலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்தபோது தலவாக்கலை லோகி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் வெட்டிக் கொண்டிருந்த ஆலமரத்தின் கிளையொன்று உடைந்து பிரதான வீதியின் நடுவில் விழுந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றபோது காயமடைந்த நபரை முச்சக்கரவண்டியில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் போது வீதியில் சென்ற முச்சக்கர வண்டியொன்றும் சேதமடைந்துள்ளது.