web log free
July 27, 2024
kumar

kumar

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கூட இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர் பதவி விலகினால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினமே பதவியை விட்டு வெளியேறினாலும், நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியாது.

புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றமே நியமிக்க முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் கூட, எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இவ்வாறான மென்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு தழுவிய போராட்டங்களை உடனடியாக நிறுத்துமாறும், விரும்பினால் ஹிட்லராக மாறி அவ்வாறு செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தௌிவுபடுத்தி, அனைத்து வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் விசேட கடிதமொன்றை மாகாண கல்வி பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் அனுப்பி வைத்துள்ளார்.

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கடிதத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் வினாத்தாள்களுக்கு அமைவாக, தவணைப் பரீட்சையை நடத்த முடியுமான அனைத்து பாடசாலைகளிலும் பரீட்சை அட்டவணைக்கமைய பரீட்சைகளை நடத்த முடியும்.

பரீட்சைகளை நடத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் பாடசாலைகளில், வினாத்தாள்கள் மற்றும் பரீட்சை அட்டவணை என்பனவற்றை பாடசாலை மட்டத்தில் தயாரித்து பரீட்சைகளை நடத்த முடியுமென குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 04, 09, 10, 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகளை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் நடத்தவும் மேல் மாகாண கல்வி பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் வௌியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாலைத்தீவில் உள்ள பறக்கும் பலகை பயிற்றுவிப்பாளர், நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் அடிப்படை வசதிகள் இன்றி இலங்கையர்கள் தவித்து வரும் நிலையில், ராஜபக்ச மாலைதீவுக்கு விஜயம் செய்ததன் நோக்கம் என்ன என சமூக ஊடகங்களில் பல இலங்கையர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனமொன்றுக்கு 10 லீற்றர் டீசல் மட்டுமே வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக வந்த கப்பலிலுள்ள டீசலை சபுகஸ்கந்தவில் சேமித்து வைக்க முடியாததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
போக்குவரத்து நெரிசல் காரணமாக டீசல் கப்பலில் இருந்த டீசலை முத்துராஜவெலயில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், இந்த நிலையிலேயே இந்த பிரச்சினை உருவாகியுள்ளது.

எரிபொருள் கொண்டு செல்லும் லொறி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் விநியோக வலையமைப்பையும் சீர்குலைத்துள்ள நிலையில், விநியோகத்தை சீரான முறையில் முன்னெடுக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் - பாலாவி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன ​பேரணி குறித்து முழு நாடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த பேரணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

நாட்டில் எரிபொருள் இன்றி மக்கள் வரிசையில் நிற்கும் நிலையில் இவ்வாறான பேரணியை அரசாங்க தரப்பின் உயர்மட்டத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. 

எனினும் இதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பேரணி படங்கள் வருமாறு, 

இந்தியாவுடன் இலங்கை, ஒரு பில்லியன் ​அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம், புதுடெல்லியில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியா சென்று இருந்த வேளை இந்தியாவுடனான ஒரு பில்லியன் ரூபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பரவுகின்ற தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமை சீர்செய்ய தவறியதால் மத்திய வங்கி ஆளுநரை ஜனாதிபதி பதவி விலகக் கூறியதாகவும் பசில் ராஜபக்ஷவுடன் அவருக்கு முறுகல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வௌியாகி உள்ள நிலையில் ஜனாதிபதி ஊடாக் பிரிவு மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

 

மைக்ரான் போலவே ஸ்டெல்த் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மிக சிறப்பாக செயல்படுகிறது. வழக்கமான கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்தால் இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.


கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது.


கொரோனா வைரஸ், ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் போன்ற பல்வேறு வகைகளில் உருமாறி பாதிப்பை ஏற்படுத்தியது.
இப்போது ஒமைக்ரான் வைரஸ் ‘ஸ்டெல்த் ஒமைக்ரான்’ ஆக உருமாறி உள்ளது. உருமாறிய ஸ்டெல்த் ஒமைக்ரான் வைரஸ் சீனாவில் வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தினமும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஸ்டெல்த் ஒமைக்ரானால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் அங்கு ஊரடங்கு போடப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதேபோல் அமெரிக்காவிலும் ஸ்டெல்த் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.


ஒமைக்ரான் தொற்று கட்டுக்குள் வந்து உலகமே நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது ஸ்டெல்த் ஒமைக்ரான் சீனாவையும், அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த ஸ்டெல்த் வைரஸ், ஒமைக்ரானை விட ஒன்றரை மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது.
இதன் உருமாற்றத்தை சோதனைகளில் கண்டறிவது மிக மிக கடினம். ஸ்டெல்த் என்ற வார்த்தைக்கும் ‘கண்டறிவது கடினம்’ என்பது தான் அர்த்தம். ஸ்டெல்த் என்பது ஒமைக்ரான் தோன்றும் போதே உருவானதுதான். எனவே இதை சிஸ்டர் வேரியன்ட் என்று அழைக்கிறார்கள்.
இது வேகமாக பரவினாலும் பாதிப்பு மிக மிக குறைவுதான். மயக்கம், அயர்ச்சி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். இவை தவிர காய்ச்சல், இருமல், நாக்கு- தொண்டை வறட்சி, தலைவலி, தசைகளில் அயர்ச்சி, அதிக இதயத்துடிப்பு போன்ற லேசான அறிகுறிகளும் தென்படும்.
தீவிர பாதிப்பு இருந்தால் இருமல், சளி, தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு, மயக்கம், வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வயிற்று உப்பிசம் ஆகிய அறிகுறிகள் தென்படும். தொற்று பாதிக்கப்பட்ட 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகே அறிகுறிகளை உணர முடியும்.
ஒமைக்ரான் போலவே ஸ்டெல்த் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மிக சிறப்பாக செயல்படுகிறது. வழக்கமான கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்தால் இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.


இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:-
ஸ்டெல்த் ஒமைக்ரான் தொண்டையில் சளி பாதிப்புடன் முடிந்து விடும். தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் நுரையீரலை தாக்கும். தடுப்பூசி போட்டு ஒரு வருடம் கடந்தவர்கள் தொற்று நோய் உள்ளிட்ட இணை நோய்களால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தடுப்பூசி போடாதவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும். இதன் வீரியம் குறைவு. ஆனால் பரவல் வேகம் அதிகம். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் அபாயம் அதிகம். எனவே தடுப்பூசிகளை டாக்டர்கள் அனுமதியுடன் மீண்டும், மீண்டும் எடுத்துக் கொள்வது முக்கியம்.

உலக சுகாதார அமைப்பு இதைத்தான் நமக்கு அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறது.
இப்போதைய சூழலில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளை நாம் திரும்பத்திரும்ப தூண்டி விடுவது முக்கியம். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு 400-க்கு மேல் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் அந்த சக்தி வேலை செய்யாது. 8 வருடத்திற்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு 300-க்கு மேல் இருந்தாலே எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

எனவே அவர்கள் உடலிலும் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. அவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யும். அதே நேரத்தில் தடுப்பூசி போடும் போது கொரோனா தொற்றில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளவுக்கு அதிகமான நீர் உடலில் தங்கி நுரையீரலில் சேரும். இதனால் அவர்களின் நுரையீரலில் காற்று செல்வது குறையும். அவர்களுக்கு ஸ்டெல்த் ஒமைக்ரான் பாதித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நேரிடும்.

தொடுவதன் மூலம் கொரோனா தொற்று பாதிக்காது. அது காற்றின் மூலம் பரவுகிறது. காற்றோட்டமான இடங்களில் அதன் பாதிப்பு குறைவாக இருக்கும். நெரிசலான இடங்களில் அது வேகமாக பரவும். முக கவசம் அணிவது, தடுப்பூசி போடுவது மட்டும்தான் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழியாகும்.

இந்தியாவிலும் ஸ்டெல்த் ஒமைக்ரான் பரவ வாய்ப்பு இருக்கிறது. விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் நோய் பரவலாம். கொரோனா அடுத்த அலை வருமா என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியாது. இப்போது இந்தியாவில் 50 சதவீதம் பேருக்குதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இன்னும் ஏராளமானோர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் மூலம் கொரோனா பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கொரோனா என்பது தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை அது வெறும் சளி, இருமலோடு நின்றுவிடும். எல்லோருமே தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் இந்த பிரச்சினையை தடுக்க முடியும்.