web log free
September 19, 2024
kumar

kumar

உத்தர பிரதேச மாநிலம் சரவஸ்தி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,

வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஜன்தன் கணக்குகளை கேலி செய்தார்கள் என்றும், ஆனால் விவசாயிகளுக்கு இப்போது அதன் உண்மையான அர்த்தம் புரிந்து விட்டது எனவும் கூறினார்.

3 மாதங்களுக்கு ஒருமுறை 10.50 கோடி விவசாயிகளின் கணக்குகளில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வகுப்புவாத அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ,வங்கதேசத்திலோ,ஈரானிலோ,ஈராக், இந்தோனேசியாவிலோ சட்டப்பூர்வ முத்தலாக் கிடையாது என்பது தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடைமுறையில் இருந்த முத்தலாக் முறையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் நமது மதச்சார்பற்ற தேசத்தில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி சுதந்திரம் அளித்துள்ளதாகவும் நட்டா தெரிவித்தார்.

லாஸ்லியா கிளாமர் லுக்கில் தற்போது, வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் 3 நிகச்சியின் மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் உடனான காதல் பரபரப்பான பேசுபொருளாக மாறியது. பின்னர்,அவருக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. இருப்பினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதை தொடர்ந்து, தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து, திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய லாஸ்லியா உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.

இதுதவிர பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என லாஸ்லியாவுக்கு அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.குறிப்பாக இதில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார்.

இவர் நடத்தும் போட்டோஷூட்டிற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.அந்த போட்டோவில் நடிகை லாஸ்லியா தன்னுடைய பின்னழகை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளதால், அதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

 

 

எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் வன்னி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பல அரசியல் கட்சிகள் உருவாக்கப்படவுள்ள கூட்டமைப்பில் இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாட்டுக்காக உழைக்கக் கூடிய பல சகோதர அரசியல் கட்சிகள் இவ்வாறு ஒன்றுபடும் என்றார். அடுத்த தேர்தலில் இந்த கூட்டணியின் மூலம் வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது நாடளாவிய ரீதியில் நகர்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் நம்பிக்கையில் இவ்வாறான கட்சி அமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சிறிசேன வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக உள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

எனவே, அரசாங்கத்தை தாம் தொந்தரவு செய்யப்போவதில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டு மக்களின் பிரச்சினைகளில் தமது கட்சி தலையிடும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் நீதி கிடைக்கவில்லை என கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சுக்களின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயப் பரப்புகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சுக்களின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது  

    என அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

சில அமைச்சுக்களில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சர்கள் சிலர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு அறிவித்ததையடுத்து இது தொடர்பான ஆராயப்பட்டது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காகவே இராஜாங்க அமைச்சர்களின் விடய தானங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகும் வரை நீடித்ததுள்ள குழப்ப நிலை என்பன தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார்.

ஹிஜாப் அணிந்திருந்த அவர் வாக்கு செலுத்துவதற்காக வாக்கு எந்திரம் உள்ள பகுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பா.ஜ.க. பூத் ஏஜெண்ட் கிரிராஜன், அந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. ஏஜெண்ட் கருத்துக்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

மேலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவை புறக்கணித்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்ட் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

இதன் காரணமாக அல்அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என மின்சார சபை சங்கத்தின்  செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அவர்களில் கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சக்திவாய்ந்த அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சரின் வீட்டுக்கு மட்டும் சுமார் 12 மில்லியன் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமல் இருப்பதாக ஜெயலால் வெளிப்படுத்தினார்.

ஆகையால், சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சரின் வீட்டிற்கு மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கிருலப்பனை மின்சார சபை அலுவலகத்தின் உள்ளுர் மின் பொறியியலாளர்கள் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் சம்பந்தப்பட்ட அமைச்சரின் வீட்டிற்குச் சென்றதாகவும் ஆனால் அவர்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் தனது பாதுகாப்புப் தரப்பினரை வைத்து மின் மீட்டரை அணுக பொறியாளர்களை அனுமதிக்க மாட்டார் என்றும் ஜெயலால் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து தனித்து செயல்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஏசியன் மிரருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

"உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தலில் தனித்தனியாகக் கேட்கத் தயாராகுங்கள்." என்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி பதுளை சைமன் பீரிஸ் ஞாபகார்த்த மண்டபத்தை அண்டியுள்ள அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் பதுளை தொகுதியின் பிரதேச அமைப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளதாக ஏசியன் மிரருக்கு செய்தி வந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி பதுளைக்கு வருவதற்கு தயாராகும் வகையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

“மொட்டுடன் கைகோர்த்து வாக்கு கேட்டாலும் நாங்கள் எதிர்பார்க்கும் வேட்புமனு கிடைக்காது. எனவே தனித்து கேட்க தயாராக வேண்டும். எங்கள் கட்சிக்கு தனித்து கேட்பது கடினம். . ஆனால் நாம் அதை செய்ய வேண்டும். அதற்கு இப்போதே தயாராகுங்கள்." என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“மொட்டுக்கு இப்போது மக்கள் அலுத்துவிட்டனர். என அமைச்சர் கூறியதாக ஏசியன் மிரருக்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட வினாத்தாள் விநியோகம் மற்றும் நேரக் கணிப்பீடு என்பன புதிய தொழில்நுட்ப முறையின் கீழ் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வலய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேற்பார்வை நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.

 

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுவதாகவும் அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இன்று ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை 200, 300 ரூபாவுக்குக் கூட வாங்க முடியாது.

எனவே கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.