web log free
September 19, 2024
kumar

kumar

 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்று தர தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்தார். 

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட மீனவர் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீனவர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வினைத்திறனாக செயற்பட முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறிவருகின்றேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது.

தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வினை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அவர் அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு தீர்வினை பெற்றுதர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம்பெரும், குறிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

நாளை பெப்utup 24ம் திகதி 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஏ,பி மற்றும் சி வலயங்களுக்கு 4 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 4 மணிநேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

அழகுக்கலை கலைஞர் சந்திமால் ஜயசிங்கவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக புஷ்பிகா டி சில்வா இன்று (23) தெரியவந்துள்ளது.

புஷ்பிகா டி சில்வா சார்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு வருகை தந்த சட்டத்தரணி சஜித் பத்திரத்ன இதனைத் தெரிவித்தார்.

சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்த புஷ்பிகா டி சில்வா இன்று (23) ஆஜராக முடியாது எனத் தெரிவிக்க சட்டத்தரணி பத்திரத்ன இன்று (23) பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார்.

புஷ்பிகா டி சில்வா இன்று (23) சட்டத்தரணி ஒருவருடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திமால் ஜயசிங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டத்தரணி ஒருவருடன் விசேட சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளதாக பத்திரத்ன பிலியந்தலை பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி பிலியந்தலை பொலிஸில் ஆஜராகுமாறு புஷ்பிகா டி சில்வாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக திருமதி அழகி போட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் புஷ்பிகா டி சில்வாவும், சந்திமால் ஜயசிங்கவும் ஊடகங்களில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து, புஷ்பிகா டி சில்வா வைத்திருந்த இலங்கை திருமதி அழகி கிரீடத்தை அகற்றுவதற்கு உலக திருமண அழகி அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி சந்திமால் ஜெயசிங்க நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா.

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும். இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும். அதன்பின் நீடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக கொழும்பு கோட்டையில் இன்று(23) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம், அகில இலங்கை பொது கடற்றொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட பல மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து, சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

நாடு முழுவதும் இன்றைய தினம் நான்கரை மணித்தியால மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

3 வலயங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும், ஏனைய வலயங்களுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

இன்றைய தினம் 7 மணித்தியால மின்சார தடையை ஏற்படுத்த அனுமதி வழங்குமாறு, இலங்கை மின்சார சபை தம்மிடம் கோரியதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

எனினும், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைத்தமையினால், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலையீட்டில், அந்த கால எல்லை குறைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

700 மெகா வோர்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்உற்பத்தி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, இன்றைய தினம் காலை 8:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

கொடதெனியாவ வனாத்தமுல்ல பிரதேசத்தில் அல்கொய்தா எனப்படும் கும்பலால் மக்கள் துன்புறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் பீதியடைந்துள்ளது.

இதனால் அச்சம் காரணமாக அப்பகுதி மக்கள் மாலை வீடுகளின் கதவு, ஜன்னல்களை பூட்ட நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த 15ம் திகதி, மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுமிகளைக் கொல்ல முயன்ற குண்டர் கும்பல், அதைத் தடுக்க வந்த வயதான தம்பதியினரைத் தாக்கியது கிராம மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது.

அதன் பின்னரே அப்பகுதி மக்கள் இதனை உடனடியாக நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர்.

எவ்வாறாயினும், அல்கொய்தாவுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அல்கொய்தா உறுப்பினர்களை கைது செய்தமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கொடதெனியவில் இடம்பெற்றது.

இதில் பிரதேச மகா சங்கத்தினர், சமூக பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை லலிதாவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெனியாய − விஹாரஹேன பகுதியில் இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விஹாரஹேன − அடாரதெனிய பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகளுக்காக, வீதியின் இரு புறத்திலும் உள்ள மண்மேடுகளை வெட்டிய போது, அடாரதெனிய முச்சந்தியில் இந்த சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு சுரங்கப் பாதைகளும் ஒரே இடத்தில் ஆரம்பமாகும் அதேவேளை, சுரங்கப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் வீடுகள் கிடையாது என தெரிய வருகின்றது.

எனினும், சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதைகள் எந்த காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது? அவ்வாறு இல்லை என்றால் இயற்கையாகவே உருவானதா? என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, இந்த சுரங்கப் பாதை குறித்து ஆய்வுகளை நடத்த இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என அந்த பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.