web log free
September 19, 2024
kumar

kumar

 

வௌிநாடுகளுக்கு செல்வோருக்காக போலியாக PCR அறிக்கைகளை தயாரித்த மூவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 33 மற்றும் 28 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வைத்தியசாலையொன்றின் பெயரைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் போலியாக PCR அறிக்கைகளை தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

டொலர் நெருக்கடி உருவாகுவதற்கு முன்னர் இலங்கைபெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் மூன்று வாரங்களிற்கான எரிபொருள் கையிருப்பு இருப்பது வழமை ஆனால் தற்போது ஐந்து அல்லது ஆறு நாட்களிற்கே எரிபொருளை சேமிக்க முடிகின்றது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாப அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த ஊகங்கள்காணப்பட்டன ஆனால் மத்திய வங்கி உட்பட ஏனைய வங்கிகளின் உதவியுடன் நாங்கள் இதுவரை வந்துள்ளோம் ஆனால் தற்போது தீர்க்கமான கட்டத்தில் உள்ளோம் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கேடி ஒல்கா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிற்சாலைகள் மற்றும் போன்றவற்றிற்கான நாளாந்த தேவை 6000 மெட்ரிக் தொன் ஆனால் தற்போது இது 9000 தொன்னாக அதிகரித்துள்ளது.

மின்சக்திதுறைக்கே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

மேமாதம் வரையிலான வரட்சிக்காலங்களில் நீரை சேமிக்க முயல்கின்றோம்,

ஆறுமாதங்களிற்கு முன்னர் 15 முதல் 21 நாட்களிற்கு எரிபொருளை சேமிக்கும் நிலையிலிருந்தோம்,நுரைச்சோலைமின்நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதும் எரிபொருளை சேமிக்க முடியாத நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது ஐந்து ஆறுநாட்களிற்காக சேமிப்பே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

88 இணைப்புகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியப் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அறிக்கை இன்று நாடாளுமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக இது கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டவளை ரொசல்ல - ஹைட்ரி விகாரையின் பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20ஆம் திகதி விகாரைக்கு சென்ற மாணவனுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவனின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இல்லாமை காரணமாகவே, மின்சாரம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, 2 தொடக்கம் 3 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையான காலப் பகுதிக்குள் இந்த மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிடுகின்றார். 

மேஷம்-எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் மடல் மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியமொன்று இனிதே முடியும். வழக்குகள் சாதகமாகும். உத்யோக முயற்சி கைகூடும்.


ரிஷபம்-கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். உடல் நலத்தில் இருந்த சோர்வுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.

மிதுனம்-நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பிறர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.

கடகம்-தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். உறவினர் பகை மாறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

சிம்மம்-அஞ்சல் வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.


கன்னி-எடுத்த காரியங்கள் எளிதில் வெற்றி கிட்டும் நாள். செல்வநிலை உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். புண்ணிய காரியங்களுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள்.

துலாம்-கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

விருச்சகம்-முன்னேற்றம் கூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். தொலைபேசி வழியே தொழில் முன்னேற்றம் தகவல் வந்து சேரும்.

தனுசு-பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலத்தில் சிறுஇடையூறுகள் ஏற்பட்டு அகலும்.

மகரம்-வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி எடுக்கும் நாள். நண்பர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர். வெளிநாட்டுப் பயணம் விரும்பியபடியே கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும்.


கும்பம்-சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பப் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடக்க முற்படுவீர்கள். உத்தியோக நலன்கருதி பயணமொன்றை மேற் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்-உணர்ச்சிவசப்படுதவன் மூலம் உறவுகள் பகையாகும் நாள். சிரித்துப்பேசும் நபர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த 200 வருட பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டிலிருந்து தலவாக்கலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்தபோது தலவாக்கலை லோகி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் வெட்டிக் கொண்டிருந்த ஆலமரத்தின் கிளையொன்று உடைந்து பிரதான வீதியின் நடுவில் விழுந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றபோது காயமடைந்த நபரை முச்சக்கரவண்டியில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் போது வீதியில் சென்ற முச்சக்கர வண்டியொன்றும் சேதமடைந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் அனைத்து எதிர்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் பூட்டப்பட்டியிருந்த அறையொன்றில் சந்தித்தனர்.

இந்தக் கலந்துரையாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த சந்திப்பின் இரண்டாவது கட்டமும் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இரண்டாவது விவாதம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையை நிர்வகிப்பது குறித்து கவனம் செலுத்தியது.

நான்கு முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திடுவதற்கும் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்த விவாதத்தில் ஒரு சிறப்புக் குறைபாடு இருந்தது.

முதலாவது கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது கலந்துரையாடலை புறக்கணித்தார்.

இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்த சுமந்திரனிடம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை தொடர்பில் வினவிய போது விசேட காரணத்தினால் கலந்துரையாடலில் பங்குபற்றவில்லை என தெரிவித்திருந்தார். என்ன காரணம் என்று கூறவில்லை.

தற்போதைய ராஜபக்ச ஆட்சியை பாதுகாக்க ஐ.தே.க தலைவர் செயற்படுவதாக பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க.வை சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் டீல் அரசியலில் ஈடுபடுவதாக அரசியல் களத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

முதல் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சஜித் பிரேமதாசவும் ரணில் விக்கிரமசிங்கவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்கு வெளியே சந்தித்தனர்.

அதுமட்டுமின்றி ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

அதேபோன்று தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யவும் அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி உள்ளது.

மேலும் இலங்கை- தமிழக மீனவர்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாக செந்தில் தொண்டமான் கூறியுள்ளார். 

முஸ்லிம் ஆண்களின் பல திருமணத்தை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கும் கொள்கை முடிவு எடுப்பது உள்ளிட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைச் சேர்க்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரையின் பேரில், நீதி அமைச்சு மார்ச் 8, 2021 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம் ஆண்களின் பலதார மணத்தைத் தடை செய்யவும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், காதி நீதிமன்றங்களை ஒழிக்கவும் முடிவு செய்தது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் சமூகம் பலதார மணத்துக்கான சட்டங்களை மாவட்ட நீதிமன்றங்களில் சமர்ப்பித்துள்ளமையும் சட்ட தாமதத்திற்கு மற்றொரு காரணமாக இருப்பதால் காதி நீதிமன்றங்களில் சட்டத்தை அமுல்படுத்துவதே பொருத்தமானது என நீதி அமைச்சு கருதுகிறது.

தீர்க்க முடியாத பிரச்சினைகளை மாத்திரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.