எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
அதில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து கைது செய்ததுடன், 2 நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
முதற்கட்ட விசாரணை முடித்து மீனவர்கள் 9 பேரும் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது.
9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடையச் செய்துள்ளது.
இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து 9 மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.
முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்து உள்ள கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் அனைவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது காரைக்கால் மீனவர்கள் 11 பேரையும் வரும் 7-ந் திகதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்தில் தென்படவுள்ள பிரதான விண்கல் மழைகளில் ஒன்று இன்றும் (03) நாளையும் இரவில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்தய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை அதிகாலை 4.00 மணிக்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வடகிழக்கு திசை வானத்தில் இந்த விண்கல் மழை தென்படவுள்ளது.
மணிக்கு சுமார் 80 விண்கற்கள் தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையத்தின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியிடம் உலகிலேயே மிக மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிலர் செயற்பட்டு வருவதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு விழா மேடையில் உரையாற்றிய அமைச்சர்,
“என்னை அவதூறாக பேசினால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இங்கு யாரை இலக்காகக் கொண்டு இந்த செயற்பாடுகள் நடைபெறுகின்றன? ஒரு பெண்ணாக இருக்கும் பிரதமருக்கு எதிராக உலகில் உள்ள மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர்,
“உங்களிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினர் இன்றி வந்தால் அவரைத் தாக்குவீர்களா? தாக்கத் திட்டமிடுகிறீர்களா?
எதுவும் செய்யாமல் இருக்கும் காட்டுப் பன்றியும் ஆபத்தானது. குண்டு பட்ட காட்டுப் பன்றி இன்னும் அதிகமாக ஆபத்தானது. தான் இறக்கப் போவதை அறிந்ததால், இறப்பதற்கு முன் பெரிய தாக்குதலை நடத்த முயலும். அரசியல் ரீதியாக சுடப்பட்டு, இன்று அநாதைகளாக மாறியுள்ள சில ஊழலாளர்களே இதன் பின்னணியில் உள்ளனர்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் செய்திகளை போலீஸ் ஊடகப் பேச்சாளர் வழங்கினால், அரசுக்கு ஊடக அடக்குமுறை தேவையில்லை என மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி, பூஜ்ய வல்வாஹெங்குண வேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
“போலீஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லரை எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தி வாசிக்க நியமிக்க வேண்டும். அப்படியானால் அரசுக்கு ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஊடகங்கள் உண்மையை வெளிப்படுத்தும் போது இவர்களுக்கு கோபம் வருகிறது.
வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காமல், வேலை செய்து காட்டியிருந்தால், ஊடகங்கள் இவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. தங்களது இயலாமையை மறைக்க ஊடகங்களின் வாயை அடக்க முயற்சிப்பது தவறான செயல்.
1971 மற்றும் 1989 காலகட்டங்களில் அச்சுறுத்தலும் வன்முறையும் மூலம் அதிகாரத்தைப் பெற முயன்றனர். ஆனால் அது வெற்றியடையவில்லை. குறைந்தபட்சம் இப்போது அதிகாரம் கிடைத்த பிறகாவது, இந்த அச்சுறுத்தலும் கர்ஜனையும் நிறுத்தப்பட வேண்டும்.
அதிகாரம் பெற்ற பிறகும், முன்பு செய்த அதே செயல்களையே இவர்கள் தொடர்கிறார்கள். புத்தமதத்துக்கும் புத்த கலாசாரத்துக்கும் தாக்குதல் நடத்தப்படுகின்றது. அதே நேரத்தில், மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களுக்கும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றினால், இயற்கை தண்டனை வழங்கும். அதனால்தான் சமீபத்தில் நாடு பெரும் பேரழிவை சந்தித்தது” என தம்மரதன தேரர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேங்காய் உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், உள்நாட்டு சந்தையில் தேங்காய் விலை அசாதாரணமாக உயர்ந்திருப்பது குறித்து தேங்காய் அபிவிருத்தி சபை கூட ஆச்சரியமடைந்துள்ளதாக அதன் தலைவர் டாக்டர் சுனிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் ரூ.122 முதல் ரூ.124 வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், அதே தேங்காய்கள் தற்போது திறந்த சந்தையில் ரூ.180 முதல் ரூ.200 வரை விலைக்கு விற்கப்படுவது மிகவும் கவலைக்கிடமான நிலை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஏலங்களில் குறைந்த விலையில் தேங்காய்களை வாங்கி, அதிக விலையில் மீண்டும் விற்பனை செய்யும் இடைத்தரகர்களின் செயற்பாடுகளே இந்த கடும் விலை உயர்வுக்கான பிரதான காரணம் என அவர் கூறினார். இதன் மூலம் நுகர்வோரின் மீது அநியாயமான சுமை ஏற்படுத்தப்படுவதாகவும் டாக்டர் ஜயகொடி வலியுறுத்தினார்.
இந்த நிலைமைக்கு தீர்வாக, இந்த ஆண்டிலிருந்து மாவட்ட மட்டத்தில் நேரடியாக தேங்காய் விற்பனை செய்து சந்தையில் தலையிட தேங்காய் அபிவிருத்தி சபை தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன்படி, சபை நிர்வகிக்கும் 11 தேங்காய் தோட்டங்களில் இருந்து கிடைக்கும் உற்பத்தி, மாவட்ட மட்டத்தில் நேரடியாக நுகர்வோருக்கு வழங்கப்படும்.
களுத்துறை, கொழும்பு, பத்தரமுல்ல, மகரகம போன்ற பகுதிகளில் முன்பே நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் தேங்காய் விற்பனை திட்டங்கள் மூலம் விலை நிலைநாட்டலும், நுகர்வோருக்கு நியாயமான அணுகலும் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.
தேங்காய் அபிவிருத்தி சபையின் தகவலின்படி, கடந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி சுமார் 2,900 மில்லியன் தேங்காய்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 3,000 மில்லியன் தேங்காய்கள் வரை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.
பூச்சி தாக்குதல்கள் மற்றும் பிற விலங்குகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்து குறைந்தபட்சம் 10 சதவீத உற்பத்தியை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தியை பாதுகாக்க தேவையான திட்டங்கள் ஏற்கனவே தயாராக உள்ளன என்றும் டாக்டர் ஜயகொடி தெரிவித்தார்.
தேங்காய் விலை உயர்விற்கு இடைத்தரகர்களின் தலையீடு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க தேங்காய் அபிவிருத்தி சபையின் நேரடி தலையீடு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி முதல் மார்ச் வரை) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை (CEB) தனது பரிந்துரைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
நிதி நிலைமை மற்றும் கட்டண உயர்வுக்கான காரணங்கள்:
வீட்டுப் பாவனைக்கான புதிய கட்டண முன்மொழிவு:
மின்சார சபையின் முன்மொழிவின் படி, வீட்டுப் பாவனைக்கான அலகு ஒன்றின் விலை மற்றும் நிலையான கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பின்வருமாறு (அடைப்புக்குறிக்குள் தற்போதைய விலை):
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.1% ஆக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், இந்தக் கட்டணத் திருத்த முன்மொழிவுக்காக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி ரூ. 308.65 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்ட பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
தற்போதைய அரசின் கல்விக் கொள்கைகள் மற்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவின் செயல்பாடுகள் குறித்து சீலரதன தேரர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய 6ஆம் வகுப்பு ஆங்கில மொழி பாடத்திட்டத்திற்கான புதிய மொடியூல் மூலம், மாணவர்களிடையே ஒருபால் ஈர்ப்பு (சமலிங்கத்தன்மை) ஊக்குவிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த நடவடிக்கைகள் அப்பாவி குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் செயற்பாடுகளாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமரின் தோற்றம் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சீலரதன தேரர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குழந்தையை பெற்றெடுக்காத ஒருவர், தாய்மையின் அன்பையும் குழந்தையின் பெறுமதியையும் உணர முடியாது என அவர் கூறினார். அதேசமயம், பிரதமருக்கு திருமணத்திற்கான துணையைத் தேடித் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் கிண்டலாக குறிப்பிட்டார்.
நாட்டின் கல்வி அமைப்பு மேலும் அழிவடையாமல் தடுக்க, கல்வி அமைச்சை உடனடியாக ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் சீலரதன தேரர் வலியுறுத்தினார்.
மேலும், தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தற்போது கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வருவது குறித்து தனது கவலையை வெளியிட்டார். அவர்கள் தாங்களே இந்த நிலைமை உருவாக காரணமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
SJB மற்றும் UNP ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது. சஜித் தலைமையின் கீழ், ரணில் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
"ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இது பற்றி கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அவர் தெரியப்படுத்துவார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்தாலும் பொது விடயங்களின்போது ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டுப் பயணம் இடம்பெறும்.
மீண்டும் நாடாளுமன்றம் வருவதில் ரணில் விக்ரமசிங்க ஆர்வம் காட்டவில்லை. வலுவானதொரு கூட்டு எதிரணியை உருவாக்கவே அவர் முற்படுகின்றார். எனவே, சஜித்தின் தலைமையின் கீழ் ரணிலின் ஆலோசனையுடன் இணைந்து பயணித்தால் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அரசியல் ரீதியில் சவால் விடுக்கக் கூடியதாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.