மகா சிவராத்திரி என்பது இந்துக்கள் கொண்டாடும் மிகப் புனிதமான இரவு. இது பெரும்பாலும் பங்குனி மாதத்தில் (பிப்ரவரி–மார்ச்) அமாவாசை தினத்துக்கு முன் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாள் பரம சிவனை அர்ப்பணித்ததாக கருதப்படுகிறது.
விரதத்தின் முக்கியத்துவம்
விரதம் கடைப்பிடிக்கும் முறை
1. நோன்பு இருப்பது
2. ஜாகரம் (இரவு முழுவதும் விழிப்பு)
3. அபிஷேகம் மற்றும் பூஜை
விரதத்தின் பலன்கள்
மகா சிவராத்திரி என்பது உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை சுத்திகரிக்கும் ஒரு புனித ஆன்மிக அனுபவமாக கருதப்படுகிறது.
வஸ்கடுவா வாடியமண்டக பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் வஸ்கடுவா பகுதியைச் சேர்ந்த எஸ். புஷ்குமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2026ஆம் ஆண்டிற்காக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பீரிவெனங்களில் கல்வி பயிலும் கிருஹஸ்த மற்றும் சந்நியாசி மாணவர்கள், மேலும் சீலமாதாக்கள் ஆகியோருக்கு ரூ.3000 பெறுமதியுள்ள காலணி பரிசுப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பரிசுப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் இன்று (15) முடிவடையவிருந்த நிலையில், அதன் காலவரம்பு பிப்ரவரி 28ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நீட்டிப்பின் மூலம் பயனாளிகள் பரிசுப்பத்திரங்களை பயன்படுத்தி காலணிகளை பெற்றுக்கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் நாட்டில் அமைதியின்மையை உருவாக்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு பயன்படுத்திய ஒரு உத்தி எனும் குற்றச்சாட்டை சர்வஜன பலய தலைவர் திலித் ஜெயவீர முன்வைத்துள்ளார்.
சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அவர் கூறியதாவது,
“இந்த நாட்டிற்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் கலாசார தாக்குதலை கண்டிக்கவே நாம் தலையிட்டோம். திருகோணமலையில் நடைபெற்ற சம்பவம் அவற்றில் ஒன்றே தவிர, அதைவிடவும் தீவிரமான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன” என்றார்.
நாட்டில் குழப்பநிலையை உருவாக்கவும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கவும் அரசாங்கம் இவ்வாறான சம்பவங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என்பதே தங்களுக்கு தெளிவாக இருப்பதாக கூறினார்.
“நாட்டில் அமைதியின்மையை உருவாக்கி, இன ஒற்றுமையை பாதிக்க இந்த அரசு செயல்படுகிறது என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த நால்வர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
• சஸ்டஜன் - பெற்றோர்களின் ஆரோக்கியமிக்க தலைமுறையின், வாழ்க்கைக்கு ஆதாரமான போசணை
இலங்கை அதனது முக்கியமான குடிப்பரம்பல் பாதையில் தற்போதுள்ளது. பிறப்பு வீதம் தொடர்ந்தும் குறைவடைய வாழ்க்கை எதிர்பார்ப்பு வீதம் அதிகரித்துள்ளமையினால், 2030 ஆம் ஆண்டாகும்போது, இலங்கையர்களில் ஐந்தில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்.
இத்துரிதமான மாற்றமானது அடைந்துக்கொள்ள முடியாத பொருளாதார மற்றும் சமூக பின்விளைவுகளை – உற்பத்தித் திறன்மிக்க குடித்தொகையின் சுருக்கம், அதிகரித்துள்ள சுகாதார மற்றும் ஓய்வூதிய செலவீனங்கள், வைத்தியசாலை தகவுகளின் மீது சுமையாகும் அழுத்தம், மற்றும் குடும்பங்களிலும் அதேப்போல தேசத்திலுமாக ஒரு சிரமமாகக்கூடிய உயரும் தங்கியிருப்போர் வீதம்- ஏலவே உருவாக்கியுள்ளது.
அதனிலும் இவ்வெண்ணிக்கைகள் ஆழமாக வேரூன்றியுள்ள மனித உண்மையொன்றினையும் உள்ளடக்கியுள்ளது. எமது பெற்றோர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களது உலகம் மேலும் சுருங்கிவிடும். வழக்கமான செயற்பாடுகள் சீர்குழையும், ஆர்வங்கள் கைவிடப்படும், அத்துடன் நோக்கங்கள் மாறி – உடல் பலம், உணர்வுசார் நெகிழ்திறம் மற்றும் உளநல கூருணர்வு என்பன படிப்படியாக அற்றுப்போகும்.
60 வருடப் பாரம்பரியத்துடன் இலங்கையின் அதிநம்பிக்கைக்குரிய வயது வந்தோர் போசணை வர்த்தக நாமமான, சஸ்டஜன், மூப்படைவதை இந்த தேசம் எவ்வாறு பார்க்கின்றது என்பதனை மீள்சட்டகமிட முன்வந்துள்ளது. இது படிப்படியான பின்வாங்கலாகவன்றி – பெற்றோர்கள் வினையூக்கத்துடனும், சுயாதீனமாகவும் உத்வேகத்துடனும் வாழும் ஒரு புதிய அத்தியாயமாக காணப்படவேண்டும்.
இந்நம்பிக்கையானது சஸ்டஜனின் புதுப்பிக்கப்பட்ட முன்மொழிவான – தவிர்க்க முடியாத தரம் - ஆரோக்கியமான பெற்றோர் பரம்பரை-என்பதன் ஊடாக உயிரூட்டப்பட்டுள்ளது. இது – அவர்களது வாழ்வை முழுமையாக வாழத் தேவையான போசணையினால் ஆதாரப்படுத்தப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தினை எமது பெற்றோருக்கு வழங்குவதற்கான – சத்தியத்தினையும் செயலுக்கான அழைப்பினையும் வழங்குகின்றது.
இவ்வியக்கத்தின் நாதமானது எளிமையானதாயினும் சக்திமிக்க சிந்தனையொன்றாகும்: ஆரோக்கியமான முதுமையடைதலானது இலட்சியமொன்றையும் – அத்துடன் அதனை நிலைப்பேணுவதற்கு சரியான போசணையையும் தேவைப்படுத்துகின்றது. சஸ்டஜன், அதனது விஞ்ஞானபூர்வமாக உருவாக்கப்பட்ட 24 அத்தியாவசிய போசணைகளது கலவையின் ஊடாக, நம்புவதற்கான தெளிவான மற்றும் தொடர்புடைய காரணிகளுடன் இந்நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது. முக்கியகவனமானது ஆரோக்கியமான முதுமையடைதலுக்கு உதவும் மூன்று தூண்களில் செலுத்தப்படுகின்றது: வினையூக்கம், நோயெதிர்ப்பு மற்றும் அறிகை பலம். அறுபதிலும் அதற்கு அப்பாலும் புதுவாழ்க்கையொன்றை தொடங்குவதற்கான நம்பிக்கையானது உடல் வலுவடைந்து, நோயெதிர்ப்புசக்தி உந்தப்பட்டு, சிந்தனை கூர்மையாக காணப்படும்போதே வருகின்றது.
இத்தேசியப் பிரச்சினை மீதான கவனத்தை கூர்மைப்படுத்துவதற்காக, இலங்கையில் ஆரோக்கியமான முதுமையடைதல் குறித்த கலந்துரையாடலை வலுவாக நெறிப்படுத்திய அறிவார்ந்த மற்றும் சிந்தனைகிளறல் குழுக் கலந்துரையாடல் ஒன்றினை சஸ்டஜன் நடாத்தியது. நன்கறியப்பட்ட ஊடக ஆளுமையான மாதவ அவர்களினால் தொகுத்தளிக்கப்பட்ட, அக்குழுவானது ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மதுரா (உணவு விஞ்ஞானம் மற்றும்தொழிநுட்பம்), நிலைபேறாக்கப்பட்ட உடல்நலம் மற்றும் வலிமைக்காக மதிக்கப்படும் குறியீடாக திகழும் கிரிக்கெட் வீரரும் பயிற்றுவிப்பாளருமான சமிந்த வாஸ், மற்றும் தங்களது வயதாகும் பெற்றோர் குறித்து அக்கறைக்கொள்ளும் பிள்ளைகளது தலைமுறையின் பிரதிநிதியாக, புகழ்பெற்ற நடிகர் ரொஷான் ரனவண மற்றும் முன்னாள் இலங்கை அழகி அனுமதி குணசேகர ஆகியோரினை ஒருங்கே கொணர்ந்திருந்தது. இக்கலந்துரையாடல் பெற்றோர் தங்களது பின்னாட்களை எவ்வாறு அனுபவிக்கவேண்டும் என்பதனை கூட்டாக வடிவமைக்கும் சிந்தனை, நோக்கம், குடும்ப ஆதரவு மற்றும் போசணை என்பவற்றை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போது, பேராசிரியர் மதுரா அவர்கள் ஆரோக்கியமான முதுமையடைதலை இயலச்செய்வதில் போசணையின் வகிபாகத்தினை அழுந்தக்கூறினார்.
“பெற்றோர்களுக்கு வயதாகுகையில், அவர்களது போசணைத் தேவைகள் குறிப்பிடத்தக்களவில் மாற்றமடையும். வினையூக்கத்தினை பேணுவதற்கும், நோயெதிர்ப்புசக்தியை தூண்டுவதற்கும் மற்றும் அறிகைபலத்தினை பாதுகாப்பதற்கும் போதுமானளவு அத்தியாவசிய போசணைகளினை உள்ளெடுப்பது மிகமுக்கியமானதாகும். வினையூக்கமான வாழ்க்கைமுறை மற்றும் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன் சரியான போசணைகள் இணையும்போது, முதியோரின் வாழ்க்கைத் தரத்தினை பாரியளவில் மேம்படுத்தும்.”
மகன்களுக்கும் மகள்களுக்குமாக – பெரும்பாலும் அறியப்படாத தீர்மானம் மேற்கொள்பவர்களான- இவ்வியக்கமானது பொறுப்புக்களை வாய்ப்புக்களாக மீள்வரையறுத்துள்ளது. இதுவொரு சக்திவாய்ந்த கேள்வியினை கேட்கின்றது: உங்களது பெற்றோர்கள் கண்டுபிடிக்க நீங்கள் உதவக்கூடிய புதிய ஆரம்பம் எது? எப்போதோ மறந்துப்போன ஆர்வம்; மகிழ்ச்சியினை கொணரக்கூடிய வழக்கமான நடவடிக்கை; மற்றும் ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளும் காலையில் விழிப்பதற்கானவொரு காரணம். சஸ்டஜன் சக்திக்கான உந்துதலாகவும், நோயெதிர்ப்புச் சக்தியினை வலுப்படுத்துவதும் மற்றும் மனநல தெளிவிற்கு உதவுவதுமான நாளாந்த நிகழ்வுகளது பகுதியொன்றாவதன் ஊடாக இப்பயணத்திற்கு உதவவுள்ளது.
ரெக்கிட் ஸ்ரீ லங்கா – சந்தைப்படுத்தல் முகாமையாளரான, அனுராதா ஹேவாகே அவர்கள் இவ்வர்த்த கநாமத்தின் நோக்கத்தினை பகிர்ந்துக்கொண்டார்:
“இலங்கையர்களுக்கு வயதாகின்றபோது, கலந்துரையாடல்கள் கரிசனங்களில் இருந்து செயல்களை நோக்கியதாக நகர வேண்டும். சஸ்டஜன் ஊடாக, தங்களது பெற்றோர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட நோக்கமொன்றை வழங்கும் அதேநேரம், அவர்கள் ஆரோக்கியமாக முதுமையடைவதற்கு தேவையான போசணை ஆதரவினை வழங்குவதற்குமாக பிள்ளைகளை ஈர்க்க விரும்புகின்றோம். இதுவொரு வர்த்தக நாமத்தின் துவக்கம் என்பதனைக் காட்டிலும் - பெற்றோர்களது ஆரோக்கியமான தலைமுறையையும் அதிஉச்சமாக, பலமான இலங்கைகையும் கட்டியெழுப்புவதற்கான தேசத்திற்கான பணியாகும்.”
இந்நிகழ்வு பங்கேற்பாளrkaள் போசாக்கு இடைவெளிகளைஅடையாளப்படுத்துவதற்கான எளிய மதிப்பாய்வில் பங்கேற்பதற்கும் மற்றும்விழிப்புணர்வை அர்த்தமிக்க செயல்கார்கள் நோக்கி திருப்புவதற்காக – சக்திமிக்க போசணைகள் எவ்வாறு ஆரோக்கியமான முதுமையடைதலுக்கு உதவக்கூடும் என்பதனை புரிந்துக்கொள்வதற்குமான சஸ்டஜன் போசணை ஆய்வுக்கூடத்தினையும் உள்ளடக்கியிருந்தது.
சஸ்டஜன் இலங்கையில் ஆரோக்கியமான முதுமையடைதலை நோக்கிய கலந்துரையாடல்களுக்கு தொடர்ந்தும் தலைமை தாங்கும். ஏனென்றால், எம்மால் காலத்தை நிறுத்த முடியாது, ஆனால் எம்முடைய பெற்றோர்களது வயதினை நோக்கத்துடனும், கண்ணியத்துடனும், வலுவுடனும், மற்றும் அவர்கள் உயிர்வாழ உண்மையிலே தேவையான போசணைகளுடனுமான வழியில் எம்மால் மாற்றமுடியும்.
காதலின் மகத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டாடும் நாளாக காதலர் தினம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் திகதி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறப்பு நாளாக இது திகழ்கிறது.
வரலாற்றுப் பின்னணி❤️
காதலர் தினத்தின் வரலாறு Saint Valentine என்பவரைச் சுற்றி அமைகிறது. ரோமப் பேரரசர் Claudius II இளைய வீரர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எதிராக காதலர்களுக்கு ரகசியமாக திருமணம் நடத்தித் தந்ததாகச் சொல்லப்படும் கிறிஸ்தவ ஆசாரியர் தான் செயிண்ட் வாலன்டைன். இதனால் அவர் தண்டிக்கப்பட்டு பிப்ரவரி 14ஆம் திகதி உயிரிழந்தார் என்று வரலாறு கூறுகிறது. பின்னர், அவரது நினைவாக இந்த நாள் “Valentine’s Day” என உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இன்றைய கொண்டாட்டம்❤️
இன்றைய காலத்தில் காதலர் தினம் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது:
சிவப்பு நிறம் இந்த நாளின் அடையாளமாகக் கருதப்படுகிறது; அது காதலும் உணர்ச்சியும் குறிக்கிறது.
சமூகத்தின் பார்வை❤️
சிலர் காதலர் தினத்தை மேற்கு நாட்டுப் பண்பாட்டின் தாக்கமாகக் கருதினாலும், பலர் இதை அன்பை வெளிப்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். காதல் என்பது காதலர்களுக்கு மட்டும் அல்லாது, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள் போன்ற அனைவரிடமும் பகிரப்பட வேண்டிய உணர்வு என்பதே பலரின் கருத்தாகும்.
முடிவு❤️
காதலர் தினம் என்பது வெறும் பரிசுகள் அல்லது நிகழ்வுகள் மட்டுமல்ல; அது அன்பை வெளிப்படுத்தும் ஒரு நினைவுநாள். அன்பு, மரியாதை, புரிதல் ஆகியவை உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய அம்சங்களாகும்.
“அன்பு இருந்தால் உலகம் அழகாகும்” என்பதைக் நினைவூட்டும் நாளாக காதலர் தினம் திகழ்கிறது. ?
காதலின் மகத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டாடும் நாளாக காதலர் தினம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் திகதி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறப்பு நாளாக இது திகழ்கிறது.
வரலாற்றுப் பின்னணி❤️
காதலர் தினத்தின் வரலாறு Saint Valentine என்பவரைச் சுற்றி அமைகிறது. ரோமப் பேரரசர் Claudius II இளைய வீரர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எதிராக காதலர்களுக்கு ரகசியமாக திருமணம் நடத்தித் தந்ததாகச் சொல்லப்படும் கிறிஸ்தவ ஆசாரியர் தான் செயிண்ட் வாலன்டைன். இதனால் அவர் தண்டிக்கப்பட்டு பிப்ரவரி 14ஆம் திகதி உயிரிழந்தார் என்று வரலாறு கூறுகிறது. பின்னர், அவரது நினைவாக இந்த நாள் “Valentine’s Day” என உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இன்றைய கொண்டாட்டம்❤️
இன்றைய காலத்தில் காதலர் தினம் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது:
சிவப்பு நிறம் இந்த நாளின் அடையாளமாகக் கருதப்படுகிறது; அது காதலும் உணர்ச்சியும் குறிக்கிறது.
சமூகத்தின் பார்வை❤️
சிலர் காதலர் தினத்தை மேற்கு நாட்டுப் பண்பாட்டின் தாக்கமாகக் கருதினாலும், பலர் இதை அன்பை வெளிப்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். காதல் என்பது காதலர்களுக்கு மட்டும் அல்லாது, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள் போன்ற அனைவரிடமும் பகிரப்பட வேண்டிய உணர்வு என்பதே பலரின் கருத்தாகும்.
முடிவு❤️
காதலர் தினம் என்பது வெறும் பரிசுகள் அல்லது நிகழ்வுகள் மட்டுமல்ல; அது அன்பை வெளிப்படுத்தும் ஒரு நினைவுநாள். அன்பு, மரியாதை, புரிதல் ஆகியவை உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய அம்சங்களாகும்.
“அன்பு இருந்தால் உலகம் அழகாகும்” என்பதைக் நினைவூட்டும் நாளாக காதலர் தினம் திகழ்கிறது. ?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று தான் நம்புவதாகவும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகிறார்.
அரசியலமைப்பை மீற முடியும் என்றும், கருத்தியல் ஆதரவை வழங்குவதன் மூலம் போராட்டத்தை அங்கீகரித்ததாகவும், எனவே இந்த மரண தண்டனைக்கு தானும் பொறுப்பு என்றும் அவர் மக்களிடம் கூறியதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மக்கள் எழுச்சியை ஆதரித்த அனைவரும் இந்த 12 பேருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு பொறுப்பானவர்கள் என்றும், அந்தப் பொறுப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றும் நிர்மல் ரஞ்சித் தேவசிறி வலியுறுத்துகிறார்.
தனது ஆன்லைன் சேனலில் ஒரு காணொளியை வெளியிட்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவை கொலை செய்த குழுவிற்கு மரண தண்டனை விதித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களைப் போல குற்றவாளிகளைப் பாதுகாக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன கூறுகிறார்.
“கடந்த காலங்களில், சில அரசாங்கங்கள் குற்றவாளிகளைப் பாதுகாத்தன. ஆனால் இப்போது, அத்தகைய நிலைமை இல்லை என்பது செயல்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீதித்துறை அதன் வேலையைச் செய்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இருப்பினும், நான் இன்னொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் சிறைக்குச் செல்ல வேண்டிய பலர் உள்ளனர். அதைக்கூட நாங்கள் தீர்மானிக்கவில்லை, அது நீதித்துறைதான். அந்த வழக்குகளும் வீழ்ச்சியடையும் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இது தலைகீழாக மாறும் அரசாங்கம் அல்ல, 2026 என்பது 2025 இல் நாம் அமைத்த சாதனையை நாமே முறியடிக்கும் ஆண்டாகும்.”
அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு கூறினார்.