web log free
November 22, 2025
kumar

kumar

கொழும்பில் துப்பாக்கி சூட்டினை நடத்திய மூவர் இன்றையதினம் (8) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07.11.2025) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அந்தவகையில் துப்பாக்கி சூட்டினை நடாத்தியவர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பதுங்கியிருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

நாடு முழுவதும் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, மாணவர்களைக் குறிவைத்து, இலங்கை காவல்துறை மற்றொரு தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள எந்தவொரு அதிபரும், போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை வளாகங்களுக்குள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு காவல்துறை நாய்களின் உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் அனைத்து அரசு நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்தும் "நாடு ஒன்றாய்" தேசிய பணியின் முக்கிய அங்கமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த தேசிய திட்டத்திற்கு இலங்கை காவல்துறை நேரடியாக பங்களித்து வருகிறது, மேலும் மாணவர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆளாகாமல் தடுக்க பாடசாலைகளை மையமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளது என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தங்கள் பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பாக ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அத்தகைய சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ, சம்பந்தப்பட்ட அதிபர் நேரடியாக இலங்கை காவல்துறையின் அதிகாரப்பூர்வ நாய் பிரிவின் இயக்குநரை தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.

தேவையான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளைச் செய்ய, காவல்துறை அதிகாரி நாய் பிரிவின் இயக்குநரை 071-8591816 அல்லது 081-2233429 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு மேலும் தெரிவிக்கிறது.

கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் புதிய தியவதன நிலமேயாக நிலங்க தேல தெரிவு செய்யப்பட்டார்.

நிலங்க தேல 195 வாக்குகளைப் பெற்ற அதேவேளை, ஏ.எம். கண்டி ஸ்ரீ மகா கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தமிந்த பண்டார உதுரவன 50 வாக்குகளையும், ஏ.டபிள்யூ. ஸ்ரீ நாத தேவாலயம் மற்றும் எம்பேக்க ஸ்ரீ கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே சரத் பண்டாரநாயக்க 13 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தியவடன நிலமேயின் பதவிக் காலம் 10 ஆண்டுகள்.

தற்போது செயற்படும் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலா தியவதன நிலமேயாக 20 வருடங்களாக இரண்டு தடவைகள் கடமையாற்றியுள்ளதோடு, அவரது பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற வகையில் நியாயமான சம்பளம் அவசியம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளாந்த சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்படுகின்றது.  2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அது 1,550 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்மொழிகின்றேன்.

1,550 ரூபா சம்பளத்துக்கு மேலதிமாக அரசாங்கத்தால் வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபா வழங்குவதற்கு முன்மொழியப்படுகின்றது.

தோட்ட நிர்வாகம் 1,550 ரூபா வழங்கும், அரசாங்கம் 200 ரூபா வழங்கும். அந்தவகையில் நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா கிடைக்கப்பெறும்.

தோட்டத் தொழிலாளர்கள் 25 நாட்கள் வேலைக்கு வந்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறுகின்றது.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய குத்தகை ஒப்பந்தம் 2042 இல் நிறைவு பெறுகின்றது. முறையாக நிர்வாகிக்கப்படாத பெருந்தோட்டங்கள் மீள பெறப்படும்."

இவ்வாறு வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.  

அனைத்து அரசுப் பாடசாலை மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று (07) முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் டிசம்பர் (08) அன்று தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் நவம்பர் (24) அன்று தொடங்கும் என்று கல்வி அமைச்சு கூறுகிறது.

2024 ஆம் ஆண்டு கனடா ஒட்டாவாவில் நடந்த ஒரு கத்திக்குத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு குடும்ப நண்பர் உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையர் பெப்ரியோ டி சொய்சா (20 வயது), என்பவருக்கு கனேடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் பிணை இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கொலையாளியான பெப்ரியோ டி சொய்சா ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்துள்ளார்

நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக, இலங்கை மாணவரான சொய்ஷா , விக்ரமசிங்கவின் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்திலேயே சொய்ஷா கைது செய்யப்பட்டார்.

மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்ஷா, தன்னிடம் பணம் இல்லாது போனமையால் கொலையை செய்ய எத்தணித்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கொலையை நடத்துவதற்கு 05 நாட்களுக்கு முன்னரே தாம் திட்டத்தை வகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை கொண்டு, ஏற்கனவே தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவர்களான 35 வயதுடைய தர்ஷினி பண்டாரநாயக்க எனும் தாய், அவரது 7 வயது பிள்ளையான இனுக விக்ரமசிங்க, 4 வயது பிள்ளையான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயது பிள்ளையான ரியானா விக்ரமசிங்க, 2 மாதக் குழந்தையான கெல்லி விக்ரமசிங்க, மற்றும் குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சலாகே காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

செய்தது பிழை வருந்துகிறேன்.

நீதிபதி ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது,

விசாரணை முழுவதும் டி சொய்சா அமைதியாக அமர்ந்திருந்ததுடன் தான் செய்ததற்கு மிகவும் வருந்துவதாகவும், "நான் செய்ததன் உண்மையை ஒப்புக்கொள்வதில் வாழ்நாள் முழுவதும் செலவிடுவேன்" என்றும் குற்றவாளியான டி.சொய்ஷா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு "நல்லவர்களாகவும், அன்பானவர்களாகவும்" இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், ஒரு சமூகத்தை பதறவைக்கும் வகையில் கொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை சீர்குழைத்து, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் நீதிமன்றத்தின் கூட்டுத் தீர்மானங்களுக்கு தாம் இணங்குவதாக தெரிவித்த நீதிபதி பிலிப்ஸ் வழக்கை நிறைவுறுத்தியுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளமையால் சந்தேகநபருக்கு, பிணையற்ற வகையில் குறைந்தபட்சம் 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கணவன் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

திஸ்னா நிரஞ்சலா குமாரி என்ற பெண் உறுப்பினரே இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

அவரது கணவர் மற்றும் மகன் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று (07) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும் என அந்தச் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பெரியமுல்ல, எத்துக்கால, குடாப்பாடுவ, தளுபொத்த, கட்டுவ, லெவிஸ் வீதி, செல்லக்கந்த வீதி மற்றும் வெல்ல வீதி ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நீர்கொழும்பு நீர் வழங்கல் திட்டத்தின் பெரியமுல்ல நீர் கோபுரத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சிலாபம் - தெதுறு ஓயாவில் நீராடச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

முன்னதாக நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில் தற்போது ஐவரும் உயிரிழந்துள்ளனர்.

10 பேர் கொண்ட குழுவொன்று சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர். 

காணாமல் போனவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன ஐந்து பேருமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பொருளாதாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். 

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா: 

"மத்திய வங்கியின் ஆளுநரே, பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நிதி கொள்கை குறித்து, உதாரணமாக, பணவீக்கம் அல்லது அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து கேள்வி எழுப்பினால், பொதுவாகப் பதில் கிடைப்பதில்லை, ஏன் என்றால் பாராளுமன்றத்தில் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் இல்லை." என'றார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க: 

"ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு கேள்வியை எழுப்பினால், அது நேரடியாக நிதி அமைச்சருக்கே அனுப்பப்படுகிறது. பின்னர் அவர்கள் சில சமயங்களில் எங்களுடன் தொடர்பு கொள்வார்கள். குறித்த கேள்விக்கான பதில் நாளை தேவை என்றால், அது இன்று எங்களுக்குக் கிடைக்கும். 

நாங்கள் எப்படியாவது அந்தக் கேள்விகளுக்குப் பதில்களை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். அதன் பிறகு, அது நிதி அமைச்சரிடம் அனுப்பப்படும். 

இதுதான் செயல்முறை. நிதி அமைச்சர் மூலமாக மத்திய வங்கிக்குக் கிடைக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான நேரத்தில் பதில்களை அனுப்புவோம் என்று என்னால் உறுதியளிக்க முடியும். 

இருப்பினும், இந்தச் செயல்முறை உரிய நேரத்தில் நடப்பதில்லை. சில கேள்விகள் மத்திய வங்கிக்கு மட்டும் தொடர்புடையவை அல்ல.  அந்தக் கேள்விகள் மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் பிற நிறுவனங்களுக்கு தொடர்புடையவை. 

நிதி அமைச்சர் அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் பெற்று, ஒரு அறிக்கையைத் தயாரித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு வழங்குவார்.  எங்களுக்கு அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை." என்றார்.

Page 5 of 587
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd