web log free
July 27, 2024
kumar

kumar

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக் கட்சி இணைந்து நடத்தும் பதுளை மாவட்ட மக்கள் பேரணி ஜூலை 14ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு பதுளை வில்ஸ் பார்க் விளையாட்டரங்கில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேசத்தை வெல்வோம் - எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் மூன்றாவது பொதுப் பேரணி இதுவாகும் என புதிய கூட்டணியின் பிரதான ஊடக இணைப்பாளர் ருச்சிர திலான் மதுசங்க தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் பதுளை மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் ஆரம்பத்துடன் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பேரணிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாக மதுசங்க தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் சக்தியை சரியான திசையில் அணிதிரட்டப்போகும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு இலங்கை கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஏற்பாடு செய்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து புதிய கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக புதிய கூட்டணியின் நிறுவனர் நிமல் லான்சா தெரிவித்தார்.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க, சுசில் பிரேம்ஜயந்த, நளின் பெர்னாண்டோ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சுரேந்திர வசந்த பெரேரா என்ற க்ளப் வசந்தா பச்சை குத்தும் வியாபாரத்தை ஆரம்பிக்க வந்த தருணத்தில் இருந்து அதுவரை நடந்த அனைத்து நிகழ்வுகளையும் படுகொலைத் திட்டத்தைச் செயல்படுத்தியதாகக் கூறப்படும் மரணத்தை டுபாயில் பதுங்கியிருக்கும் சஞ்சீவ புஷ்பகுமார என்ற லொகு பாட்டி நேரலையில் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை அவர் தனது மொபைல் போன் மூலம் நேரலையில் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, உயிரிழந்த சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தாவின் சடலத்தை பொரளையில் உள்ள மலர்மாலை ஒன்றில் அடக்கம் செய்யக்கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து வந்ததாக கூறப்படும் அழைப்பு ஒன்றின் ஊடாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் குறித்த மலர்மாலை உரிமையாளர்கள் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மலர்சாலை பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் எழுத்து மூலம் தனது ஆட்சேபனையை சமர்ப்பித்துள்ளார்.

இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (11)அழைக்கப்பட்ட போது, அரசாங்க சட்டத்தரணியால் இந்த ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.

அதன் பின்னர், ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணைக் கோரிக்கை மீதான விசாரணை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொடை பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு நிற டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று, தடுத்து வைத்து தாக்கியதாக முன்வைக்கப்பட்ட 18 குற்றச்சாட்டுக்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அரச சேவையில் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்பில் கலந்து கொள்ளாத பணியாளர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்கி அரச சேவையில் பிளவுகளை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 25,000 ரூபா கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு கோரி அரச ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத அரச ஊழியர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச சேவையின் அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

கிளப் வசந்தாவின் மனைவி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பச்சை குத்தும் வியாபாரத்தின் உரிமையாளரின் சகோதரியின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் கே. சுஜீவாவும் மற்ற நபரும் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு மேலதிக சிகிச்சையில் உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட 10 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்களைப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி பியுமி ஹன்ஸ்மாலி என்ற மாடல் அழகி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் விதம் நியாயமானது அல்ல என்றும், அவர்கள் கடும் பாரபட்சம் காட்டுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் வழிநடத்தல் குழு கூட்டம் நாடாளுமன்றத் அவைத் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நிமல் லான்சா எம்.பி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பலமான இரண்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக அரசாங்கத்திற்கு உதவ முன்வரும் குழுவொன்று தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (09) முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் அது தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவையின் நிறைவேற்றுத் தரம் அல்லாத சில சேவைகளில் உள்ள ஒரு சில தொழிற்சங்கங்கள் 2024 ஜூலை 08 மற்றும் 09 திகதிகளில் சுகயீன விடுமுறை மற்றும் வேலைநிறுத்தத் தொழிற்சங்க நடவடிக்கைகளை அறிவித்திருந்தன. 

கடுமையான பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்நோக்கியிருந்த நாடு கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான பொருளாதார கொள்கை சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஓரளவு ஸ்திரப்படுத்த முடிந்ததுடன், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு மேலதிகமாக அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கியது. 

தற்போதைய நிதி நிலைமையின் கீழ், மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்தாமல், முழு அரச சேவைக்கும் தற்போது வழங்கப்படும் சம்பளத்திற்கு மேலதிகமாக சம்பள அதிகரிப்பையோ கொடுப்பனவுகளையோ வழங்குவதற்கு சாத்தியமில்லை எனவும் திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் இருந்த மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை. மறுபுறம், சில அரச ஊழியர்கள் மேலதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுக் கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் அனைவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எவ்வாறாயினும், இதுபோன்ற நியாயமற்ற பணிப் புறக்கணிப்புக்களைச் செய்யாமல், 2024 ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அரச உத்தியோகத்தர்களைப் பாராட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இன்று நடைபெற்ற சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக 2024 மே 04ஆம் திகதி தொழில்நுட்ப அமைச்சினால் இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், இது 28 வருடங்களின் பின்னர் திருத்தப்பட்டுள்ளது.

இதுவரை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றும் வகையில், போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தலை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இந்தத் திருத்தச்சட்டமூலம் வழங்குகின்றது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார். 

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகப்பூர்வ பயணமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் சென்றார். 

பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்பில் மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை ஆளுநர் செந்தில் தொண்டமான் நடத்தினார். 

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கான சாதகமான காரணிகள் குறித்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசிய பிரதமருடன் கலந்துரையாடினார். 

அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பையும் பிரதமர் இப்ராஹிம்க்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்ததுடன், இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட நினைவு முத்திரையையும் மலேசியப் பிரதமருக்கு வழங்கியிருந்தார்.

இதேவேளை, மலேசிய நிதியமைச்சர் அமீர் ஹம்சா, பிரதமர் துறை அமைச்சர் (இஸ்லாமிய சமய விவகாரங்கள்) நைம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.

Page 5 of 453