அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை பிக்குவானா 70 வயதுடைய நாவோதுன்னே விஜிதா என்பவரே குறித்த குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மெல்பர்னில் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் இலங்கை பிக்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
1994 -2002 க்கு இடையிலான காலப்பகுதியில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. வயதான பிக்குவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான அனைத்து சிறுவர்களும் விகாரையில் சமய நெறி கற்க சென்றவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக துன்பம் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகளிலும், அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி பாலியல் ரீதியாக 5 வயது சிறுமியையும் துன்புறுத்தியதாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 92, சுப்பர் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
பெற்றோல் ஒக்டேன் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை.
அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.
CEYPETCO/ LIOC
சமீபத்திய கொலைகள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு கோரும் அனைத்து எம்.பி.க்களுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தன்னைப் பற்றி சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் வருத்தம் தெரிவித்ததாகவும் ஜகத் எம்.பி. கூறினார்.
இந்த முடிவு குறித்து எம்.பி. ஜகத் விதானகே ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (31) நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அவசரக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் பங்கேற்றார்.
எம்.பி.க்களின் பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது, இதன் விளைவாக, பொலிஸ் மா அதிபர் மற்றும் சபாநாயகர் இருவரும் பாதுகாப்பு கோரும் எந்தவொரு எம்.பி.க்கும் பாதுகாப்பு வழங்க ஒப்புக்கொண்டனர்.
கலவான, தெல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே இந்தச் சந்தேகநபரான சட்டத்தரணிக்கு லட்சக்கணக்கான பணத்தை கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சட்டத்தரணியின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சந்தேகநபரான சட்டத்தரணி கடந்த ஜூன் மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் வழியாக துபாய் சென்று திரும்பியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் அவ்வப்போது வாடகைக்கு வீடுகளைப் பெற்று தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
புதிய சிந்தனைகளைக் கொண்ட உண்மையான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சக்தி ஒன்று திரட்டப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.
அந்த நோக்கத்தை மனதில் கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராக வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள பேரணியை தனது கட்சி ஆதரிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
நாட்டில் உள்ள பிற பிரச்சினைகளை மறைக்க தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர், செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதை காட்டுகின்ற முகமாகவும் இன்றையதினம் செம்மணி பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று மக்களின் கண்ணீருக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி புதைக்குழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தின் வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக செம்மணிச்சந்தி வரை சென்றது.
பின்னர் உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலிக்காக செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு தூபியடியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
பிற்பகல் இரண்டு மணி வரை பாடசாலை நேரங்கள் நீடிக்கப்படவுள்ளதால், சிறப்பு ஏற்பாடுகளில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 02 மணி வரை நீடிக்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
இதற்கமைய, மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலைகளின் புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்து முதல் தரம் 13 வரையான அனைத்து வகுப்புகளுக்கான நேரமும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படுவதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின் கீழ் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கை, மேலும் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவித்து நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட வழக்கு ஒன்றில் அவர் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், நீதவான் இசுரு நெத்திகுமார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்திற்கான அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் ஜகத் மனுவர்ண சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், காணிப் பகிர்ந்தளிப்புக்கான தேசிய நிகழ்வொன்றில் தமது சேவை பெறுநர் கலந்துகொண்டமையால் இன்று நீதிமன்றில் அவரால் ஆஜராக முடியவில்லை என்று சுட்டிக்காட்டினர்.
எவ்வாறாயினும், விடயங்களைக் கருத்திற்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சந்தேக நபருக்குப் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.