web log free
April 19, 2024
kumar

kumar

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று (03) இணையம் வாயிலாக நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு பிரதிநிதிளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

2023 ஜனவரியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ரணிலுடன் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை மற்றும் முதிர்ச்சியின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதால், ரணிலுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவதே மிகச் சரியான முடிவு என மொட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் நாட்டுக்கு கடுமையான பொருளாதார முகாமைத்துவம் தேவைப்படுவதாகவும், அதற்கு மிகவும் பொருத்தமான அரசியல் தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவே என தமது கட்சியில் உள்ள பெரும்பாலானோர் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபடாமல் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்காவிட்டால் இனி எந்த அரசியல்வாதியும் பிழைக்க மாட்டார் எனவும் எனவே கட்சி முத்திரை குத்தப்பட்ட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மருதானை, புறக்கோட்டை பகுதியைச் சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தலைமுடி மற்றும் தாடியை அழிக்க வேண்டும், செருப்பு அணியக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது என கூறி சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தன்னை தாக்கியதாக களனி பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவன் கிரிபத்கொட பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். 

ஆனால் இவை அனைத்திற்கும் தாம் எதிர்ப்பு தெரிவித்ததால் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தன்னை பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று முகத்திலும் உடலிலும் தாக்கியதாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை அழைத்துச் சென்ற மூன்று சிரேஷ்ட மாணவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் கூறியுள்ளார். 

களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தனக்கு நாவல் ஒன்றை வழங்கியதாக அதே பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி ஒக்டோபர் 31ஆம் திகதி மாலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

தாக்குதலின் போது 7 சிரேஷ்ட மாணவர்கள் இருந்ததாகவும் அவர்களின் பெயர்கள் தனக்கு தெரியாது எனவும் முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்களை மீண்டும் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என பொலீசாரிடம் கூறியுள்ளார்.

எனினும் முறைப்பாடு செய்தவரை ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்த பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய கிரிபத்கொட பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது அருவருப்பதாக இருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச என்னையும் மனுஷ நாணயக்காரவையும் தவளைகள் என்று வர்ணித்துள்ளார். தவளைகள் போல் கிணற்றுக்குள் இருந்திருந்தால், எந்த நன்மையும் ஏற்படாது.
இதன் காரணமாகவே கிணற்றில் இருந்து

வெளியில் பாய்ந்து குதிக்க தீர்மானித்தோம். நாடு ஸ்திரமின்மையை இழக்கும் விதத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என நான் சஜித் பிரேமதாசவிடம் கோருகிறேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

 

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலி இன்று (02) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவிற்கு முதலிகே அழைத்து வரப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (02) எதிர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்திருந்தனர். 

நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொரளை சிறிசுமண தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறிசுமண தேரரை இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் இணைந்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக பொரளை சிறிசுமண தேரர் நேற்று (01) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

மருதானையில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.


இந்த போராட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட 15 இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இது என்பதுடன், கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், இன்றைய தினம் வேலை நாள் என்ற போதும் கூட கொழும்பில் அதிகளவில் மக்கள் நடமாட்டத்தை காண முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழலில் போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் சில வேளைகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்களும் இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி - அடிக்கடி சிறிதளவில்மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்

இரத்தினபுரி - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்