web log free
September 08, 2024
kumar

kumar

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் குற்றம் சுமத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஜனாதிபதியின் அனைத்து செலவினத் தலையீடுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ராஜினாமா செய்துவிட்டு புதிய பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிகிறார்.

சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை எனவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான இன்றைய சந்திப்பு மிகவும் காரசாரமான வடிவம் பெற்றுள்ளது.

கடும் வாக்குவாதத்திற்கு இடையே குழு கூட்டம் முடிந்தது. முக்கியமாக இடைக்கால அரசு குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இடைக்கால அரசாங்கம் தேவை இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, மொட்டுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும பிரதமராவதற்கு சதி செய்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள டலஸ் அழகப்பெரும, தான் எந்தவொரு சதிச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குடும்பப்பிரச்சினை எனவும் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குடும்பக் கதைகள் தேவையற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் ஒருபோதும் பிரதமரை பதவி விலகுமாறு கோரவில்லை எனவும், தனது சகோதரர் தன்னை விட பெரியவர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

113 இல் பிரச்சினை இல்லை எனவும், 113ஐ காட்டினால் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனக்கு 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகக் கோரி மாத்தறையிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 'கொடகோகம காலி கிளை' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு கிராம திறப்பு விழாவில் ஓமல்பே சோபித தேரரும் கலந்துகொண்டார்.

ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் வடிவமைப்பும் இருந்தது.

நாட்டு மக்கள் கஸ்டத்தில் இருக்கும் போது அரசாங்கம் இரண்டாகப் பிரிந்து பெரும்பான்மை தேடி அரசியல் செய்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு, நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதிலும் எதிர்கட்சி ஆர்ப்பாட்ட பேரணி செய்வதிலும் இருக்கும் நிலையில் ஆளும் கட்சி இரண்டாகப் பிரிந்து பெரும்பான்மை கட்டியெழுப்ப முயற்சித்து கொண்டிருக்கிறது. ஆனால் நாடு கஸ்டத்தில் இருக்கிறது. நாங்கள் உண்மையில் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறோமா அல்லது மாற்று நிகழ்த்தி நிரலில் வேலைபளுவாக இருக்கிறோமா? என்று நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை உருவாக்கியுள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்கப்படும்.

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதிக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளது.

ஏனைய எதிர்கட்சியினரிடமிருந்தும் கையெழுத்துக்களை பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினாலும் அவரை பதவி நீக்க முடியாது எனினும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்துள்ளதை இதன் மூலம் வெளிப்படுத்தலாம்..இது ஜனாதிபதி பதவி விலகுவதற்கான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் 

ஜனாதிபதி பதவி விலகினால் தகுதிவாய்ந்த புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று(வியாழக்கிழமை) இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “களவாஞ்சிக்குடி பொலிஸாரினால் எனக்கு எதிராகவும், நான் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில், என் சார்ந்தவர்கள் யார் என தெரியவில்லை. இலங்கையில் வாழும் அனைவருமே நான் சார்ந்தவர்கள்தான். 

அவ்வாறு இருக்கும்போது, 14 நாட்களுக்கு எந்தவிதமான விடயங்களும் வீதியை மறித்தோ பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக்கூடாது என நீதிமன்றத்தினால் ஒரு தடை உத்தரவி வழங்கியுள்ளனர்.

இதான் இன்று நாட்டில் அராஜகமான நிலை, ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலேயே போராடும் போது, இன்று களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்ற தடை உத்தரவினை எடுத்திருக்கின்றார் என் என்று சொன்னால், இந்த நாட்டில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கேள்வி.

அதனை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கின்றார் களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. ஏன் என்றால் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறாத இடங்கள் இல்லை. 

அவ்வாறு நடக்கும்போது, களவாஞ்சிக்குடியில் மாத்திரம் இவ்வாறு தடை உத்தரவினை பெற்றுக்கொண்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான விடயங்கள் ஊடாக மக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முனையும் போது, மக்கள் இதனையும் விட உத்வேகமாக போராட முனைவார்கள். நான் இன்று வரை போராட்டங்களை செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இந்த தடை உத்தரவு கிடைத்ததற்கு பின்னர் போராட்டம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினை தருகின்றது.

கோட்டா கே கோம் என்ற விடயம் நடைபெறும் வரை, அதாவது கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்லும் வரை இந்த போராட்டங்கள் தொடர வேண்டும். அதிலே என்னுடைய பங்களிப்பும் நிச்சம் இருக்கும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் 20 ஆவது நாள் இன்றாகும்(28).

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளிருந்தும் வரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணமுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை வெளியேறுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமும் தொடர்கின்றது.

மைனாகோகம என இந்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மனதில் இடம்பிடித்தார்.

ஆண்ட்ரியா கோலிவுட்டில் முதலில் ஒரு பாடகியாக கால் பதித்து பின்னர் நடிகையாக உருவெடுத்தவர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார். பிறகு, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘தரமணி’, ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

படத்தில் தனது காதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை மனதில் வைத்து படங்களுக்கு ஓகே சொல்லும் ஆண்ட்ரியா இதுவரை அப்படிபட்ட கதைகளையே தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில்,

கொரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டு பட வாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்டேன். அச்சமயத்தில்தான் ‘பிசாசு 2’ படவாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால், அப்படத்தில் 15 நிமிட காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க சொன்னார் இயக்குனர்.

முதலில் அதற்கு நான் முடியாது என்று கூறிவிட்டேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தினார்கள். பிறகு கதை தரமானதாக இருந்ததால் அக்காட்சியில் நடிக்க சம்மதித்தேன் என்றார்.

ஏற்கெனவே, நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அரசியற் பொருளாதாரக் குழப்பங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ள நிலையில், பிரதமர், ஜனாதிபதி, பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.

ஆனால் தன்னை பதவி விலகுமாறு யார் கூறினாலும் இராஜினாமா செய்வதற்கு தான் தயாரில்லை எனப் பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ திடமாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் பதவி விலகத் தயார் எனவும் , ' முடியுமானால் என்னை விலக்கிப் பாருங்கள்' எனப் பிரதமர் கூறியுள்ளதாகவும் தகவல்கனள் வெளியாகியுள்ளன.

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளதாக அறியவருகிறது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் கூட்டப்படுகிறது. இதன் முதற்கட்டச் சந்திப்பில், முன்னாள் அரசாங்கக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவும், இதன் தொடர்ச்சியாகவும், இரண்டாங்கட்டமாகவும், எதிர்வரும் வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் ஜனாதிபதி தனித்தனியாக கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு, ஜனாதிபதி ஹோட்டாபய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்வரும் 29ம் திகதி கலந்துரையாஅரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி அழைத்துள்ளதாகவும் அறியவருகிறது.

இது இவ்வாறிருக்க, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சந்தேகம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சார்ந்த பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்பிக்கத் தயாராகி பல வாரங்கள்கழிந்துவிட்டன. அவர்களிடம் அதைச் செய்வதற்கான உற்சாகம் இப்போது இல்லை என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிவிப்பில், " இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த நாட்டின் உழைக்கும் மக்களாகிய நாங்கள் எதிர்வரும் 28ம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கதுக்கு அறிவிக்கின்றோம். காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள். ஆட்சியாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். இந்த நாட்டிலுள்ள அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் இணைந்து 28ம் திகதி முழுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் மற்றும் கூட்டு ஹர்த்தாலில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது. இதனால் நாளை இலங்கையின் இயக்கம் முற்றாக முடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.